தம்பி… அறிமுகம்

பேச்சில் தமிழே உயர்வாக
பிறந்தேன் தஞ்சை மாவட்டம்.
மூச்சில் முழக்கம் தமிழாக.
முயன்றேன் கற்க இலக்கணமே.
வீச்சில் தமிழே உரையாக
வீறு கொள்வேன் கவியரங்கம்.
தீச்சொல் தவிர்த்துத் திறமுடனே
தேன்த மிழையே பரப்பிடுவேன்.

மதுரையில் மீண்டும் ஒரு காளமேகப் புலவர்

நேர்காணல் காளமேகப்புலவர் தமிழ்ப்புலவர்கள் வரிசையில் நீங்கா இடம் பெற்ற கவிஞர். நினைத்த மாத்திரத்தில் கவிதைகளை யாப்பதில் வல்லவர். அதுவும் கவிஞர்களுக்குச் சிரமம் எனக் கருதப்படும் வெண்பாவில் சரளமாகப் பாக்கள் வடிப்பவர். காளமேகப்புலவரைப் போலவே மதுரையில் 40 வருடங்களாக ஒருவர் பாக்கள் யாத்து அசத்தி வருகிறார். ஆம் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறன்று மதுரை வடக்கு மாசி Read more

காதல் சங்கீதமே

உச்சந்தலை வருடி உரசும் காற்றில் அருகினில் வந்து உரையாடி உறவாகி வெட்கம் பூசி முகமது சிவக்க வில்லாய் வலைக் கரம் வளைத்து, பிறைநுதல் தொட்டு திலகம் தீட்டி விரல் தீண்ட விரதமும் தீரும்! சுவாசக் காற்றே தேவை இல்லை மூச்சாய் என்னை சுமக்கும் அன்பே… மனம் தொடும் காதல் சங்கீதமாய் இயல் இசையை என்னுள் மீட்டுகிறாய்நீ ! Read more

வள்ளுவர் குறளும், வாரியார் வாக்கும்!

எனது இளமைக்காலங்களில் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் சொற்பொழிவுகளை விரும்பிக் கேட்பதுண்டு. அவரது அழகியப் பேச்சும் பேச்சின் செறிவும் எனக்குப் பிடிக்கும். அப்படியான என் மனம் கவர்ந்த வாரியார் வாக்கும் வள்ளுவர் குறளும் என்னை வியப்பிலாழ்த்தி நூலைப் படிக்க வைத்தது. நூலின் தலைப்பிற்கேற்ப பொருத்தமான விளக்கங்களை சுவைபட விவரித்து வியக்கத்தக்க அளவுக்கு மிக சிறப்பாக வாரியாரின் Read more

கவிஞரேறு வாணிதாசன்

வாணிதாசன் பிரபல தமிழ்க் கவிஞர். தலைசிறந்த தமிழ்க் கவிஞர்களில் ஒருவரும் பாவேந்தர் பாரதிதாசனின் மாணவருமான வாணிதாசன் நினைவு  தினமாக  ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 7 ல் கொண்டாடப்பட்டு வருகிறது. புதுவை மாநிலத்தின் வில்வ நல்லூர் என அழைக்கப்பட்ட இன்றைய வில்லியனூரில் 22. 07. 1915 ல் பிறந்தார். இவரது இயற்பெயர் அரங்கசாமி. கவிஞரின் ஏழாம் வயதில் Read more

ஈழத்து நவீன கவிதை வளர்ச்சியில்…

1.0 ஈழத்து நவீன கவிதை வளர்ச்சியில் அறுபதுகளளவில் முற்போக்குக் கவிதைச் செல்நெறி முகிழ்க்க ஆரம்பித்தது, எழுபதுகளிலும் தொடர்ந்தது. இந்த எழுபது காலகட்டத்தில் இடதுசாரிச் சிந்தனையால் ஆகர்ஷிக்கப்பட்டு இத்தகைய கவிதை எழுதியோருள் ஒரு சாரார் குறிப்பாக முஸ்லிம் கவிஞர்கள் இஸ்லாமிய மதப்பற்றுடையவர்களாகவும் விளங்கினர். கீழைத்தேய நாடுகளிலே இது தவிர்க்க வியலாததொன்று என்ற புரிதலின்மையும், இத்தகைய கவிஞர்களின் தொகுப்புகள் Read more

தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 08 – 2020

எண்ணமும் – வண்ணமும் ஓவியர் அருண்குமார் நேர்காணல் ஓவியர் அருண்குமார் தமிழ்நாடு, வேலூர் மாவட்டத்தில் வசித்து வருகிறார். அவரது முழுநேர எண்ணமும் உழைப்பும் ஓவியம் வரைவது மட்டும்தான். அவரிடம் நேர்காணல் செய்வதில் மகிழ்ச்சியடைகிறோம். இனி அவரிடம்… தமிழ்நெஞ்சம் ஆகஸ்ட் 2020 ஓவியங்களில் உங்கள் ஆரம்பகால அனுபவங்கள் பற்றி? நான் சிறுவயதில் இருந்து ஓவியம் வரைவது உண்டு. Read more

பேரறிஞர் அண்ணாவின் நமது நாடு

நாம் வாழுகின்ற நமது தமிழ்நாட்டிற்கு சட்டப்படியாக தமிழ்நாடு என்று பெயர் சூட்டிய பெருமைக்குரியவர். நாடாளுமன்ற உறுப்பினராக, சட்டமன்ற உறுப்பினராக, தமிழ்நாடு முதலமைச்சராக பதவி வகித்தவர். தந்தைப் பெரியாரின் பெருந்தொண்டராக இருந்து பின்பு “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்ற கொள்கை முழக்கத்தோடு திராவிட முன்னேற்றக் கழகத்தை தொடங்கியவர். “கேட்டார் பிணிக்கும் தகையவாய் கேளாரும் வேட்ப மொழிவதாம் Read more

மலர்வனம் 8

ஹைக்கூ ஷர்ஜிலா ஃபர்வின் மழைத்துளிகளை சுமந்து கொண்டிருக்கும் கார்காலச் சிலந்தி வலை. இலையுதிர்காலக் கிளை தண்டுகளெல்லாம் மின்னுகிறது வைகறைப் பனி. வானத்தில் நாற்று நட கால்களைப் கவ்விப் பிடிக்கும் சேற்று வயல். நனைந்த சாளரக்கம்பிகளில் தொங்கும் அரை நீள்வட்டகளுக்குள் முன்பனிச் சூரியன்கள். பாய்மரப்படகு பயணம் செய்கிறது இளைப்பாரும் பறவை. மரத்தின் மேல் நீந்த குளத்தில் விலகிச் Read more

மலர்வனம் 7

ஹைக்கூ வஃபீரா வஃபி 01.தாவும் குரங்குநதியில் தலைமுழுகி எழும்மரக்கிளை 02.நண்பகல் வேளைசக்கரங்களிடை சிக்கித் தவிக்கும்வண்டி நிழல்  03.உயர்ந்த பாறைஓய்வெடுக்க முடியாமல் திரும்பும்கடலலைகள்.  04.காலை வெயில்யன்னல் திரையில் ஆடும்பூனையின் நிழல்.  05.குறி வைக்கும் கவண்சட்டென நகர்ந்து மறையும்மாலைச் சூரியன். 06.இலையுதிர்க்காலம்மரக்கிளை எங்கும் பூத்திருக்கும்கொக்குக் கூட்டம். 07.கொட்டும் அருவிகற்பாறையில் துவைக்கப் படும்பௌர்ணமி நிலவு 08.குளக்கரையில் முதியவர்கூடவே நடை பயிலும்ஒற்றை Read more