விடையைத் தேடி விடியலைத் தேடி
…… வாடிடும் ஏழைகள் வாழ்வினைப் பார்.!
விரைவாய் வந்ததோ மே தினமும்
…… விடிவினை வேண்டுதே நம் மனமே.!

உழைப்பவர் போற்றி உயர்வு பெற
…உலகம் போற்றும் இத் தினமே.!
பிழைக்கும் மக்கள் படுந்துயர்ப் போக்க
…… தழைக்கச் செய்து துயர்த் துடைப்பாய்.!

உலகெங்கும் தொழிலாளர் உயர்வு கண்டு
…… உள்ளம் மகிழுந்து உலாவர வேண்டும்.!
ஏற்றம் அடைந்து மாற்றம் பெற்று
…… ஏழ்மை இன்றி எழிலாக வேண்டும்.!

உழைப்பெனும் உளியால் உலகை செதுக்கி
…… உயர்த்திடும் மக்களும் உயர்ந்திட வேண்டும்.!
வியர்வைத் துளிகளை விலையாகக் கொடுத்து
…… விளைப்பொருள் தருவோர் வாழ்ந்திட வேண்டும்.!

இலக்குகள் நோக்கிய இன்பப் பயணத்தில்
…… இன்னல் தவிர்த்து இனிதாக வேண்டும்.!
இயந்திரமாய் உழைப்பில் இயங்கிடும் மக்களை
…… இறையாய் நினைத்து இன்புற வேண்டும்.!

உழைக்கும் வர்க்கமே உலகினில் கடவுள்
…… பிழைப்பை சுரண்டாது போற்றிட வேண்டும்
மாசறியா உழைப்பவர் மனதினில் மகிழ்வும்
…… வீசிடும் தென்றலாய் வித்திட வேண்டும்.!

தேனினிய விடியலை தேடித்தரும் தொழிலாளர்
…… வண்ணமிகு நற்கனவும் வளம்பெற வேண்டும்!
திண்ணமுடன் எண்ணங்கள் திசையெங்கும் மலர்ந்து
…… எண்ணமிகு வாழ்வும் எழில்பெற வேண்டும்.. வாழ்த்துகள்.!

 


1 Comment

நிறைமதி நீலமேகம், பெண்ணாடம் · மே 1, 2020 at 14 h 44 min

இனிய வணக்கத்துடன் நல்வாழ்த்துகள் தமிழ்நெஞ்சம் ஆசிரியர் சகோதரர் அவர்களுக்கு, மிகுந்த மகிழ்வுடன் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பே என்றும் உயர்வாகும்!
உடலை உறுதி ஆக்கிவிடும்!
தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே
தளரா உழைப்பின் பலனன்றோ!

 » Read more about: உழைப்பாளர்களை உயர்த்துவோம்  »

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.