புதுக் கவிதை
காதல் சங்கீதமே
உச்சந்தலை வருடி உரசும் காற்றில்
அருகினில் வந்து உரையாடி உறவாகி
வெட்கம் பூசி முகமது சிவக்க
வில்லாய் வலைக் கரம் வளைத்து,
பிறைநுதல் தொட்டு திலகம் தீட்டி
விரல் தீண்ட விரதமும் தீரும்!
அறிமுகம்
வாழ்வி(ய)ல் வசந்தம்!
உள்ளிழுத்து வெளிவரும் – என்
உஷ்ண மூச்சுக் காற்று
இதயத்தின் ரணங்களை
மொழிபெயர்க்கும்!
என் வீட்டு ஜன்னல் கதவு
என் மன ஓலத்தை எதிரொலிக்க
ஒத்தாசை புரியும்!
புதுக் கவிதை
காடுகள்
காடுகள் – நம்
வாழ்விடத்தின் கடைகால்கள்
ஆனால்… நாம்
தகர்த்துக் கொண்டிருக்கிறோம்.
காடுகள் – நம்
உயிர்வளி சேமிப்பகங்கள்
ஆனால்… நாம்
செலவழித்து கொண்டிருக்கிறோம்.
புதுக் கவிதை
என்னில் கோபுரக் கலசமாய்
உன் விழியில் விழுந்த நொடி
என்னிதயத்துள் காதல் வேர்விட்டதடி
உன் ஒற்றைப் பார்வையில் மனம்
பித்தாகி நான் மயங்க
தூக்கம் தொலைத்த கண்கள் தூர்ந்தே போனதடி
நெற்றிப் புரளுமுந்தன் கற்றைக் குழலினில்
தூளி கட்டியாடத் துடிக்குதெந்தன் மனது.
புதுக் கவிதை
வாழ்க மகளீரே
குடும்பத்தின் குலமகளே
கதம்பத்தின் திருமகளே
பெண்ணியத்தின் நிறமகளே
கண்ணியத்தின் நிறைமகளே
தாய்மையின் கருமகளே
வாய்மையின் உருமகளே
பெண்மையின் பெருமகளே
தண்மையின் உறைமகளே
குழந்தையின் கருமகளே
சலங்கையின் ஒலிமகளே
கணவனின் மெய்மகளே
கருத்தினில் மறைமகளே
விழிகளின் கயல்மகளே
விருந்துகளின் சுவைமகளே
விம்பத்தின் நிலமகளே
விருட்சத்தில் நிழல்மகளே
உலகத்தின் மென்மலரே
உயிர்களின் மூச்சிவளே
வாழ்க வாழ்க மகளீரே
வாழ்த்துகின்றேன் மனங்குளிர… » Read more about: வாழ்க மகளீரே »
புதுக் கவிதை
விடுபடுதல்
சிலவேளைகளில் கற்பனைகள்
உண்மைகளைவிட உன்னதமானவை
நான் வகுப்பறைக்குள் நுழைந்தேன்
பெஞ்சுகளில் பேசாமல் அமர்ந்திருக்கும்
பட்டாம்பூச்சிகள் வணக்கம் சொல்லின
கட்டிப்போட்டு பாடம் நடத்தினால்
பட்டுப்போய்விடுமென யோசித்தேன்
அவற்றின் படபடக்கும் கண்கள்
வானுக்கு அழைத்துப் போகச் சொல்லின
பறக்கத் தொடங்கினோம்
கிறக்கமுற்ற வானம் கைகுலுக்கி வரவேற்றது
வானத்தின் வகுப்பில் கணக்குப் பாடம்
நட்சத்திரங்களை எண்ணச் சொன்னேன்
பறித்துக் கோர்த்து மாலையாக்கி மகிழ்ந்தனர்
விடுதலை பற்றிய பாடத்தில்
கூண்டுக்குள் வேண்டாமென
காற்றிடம் பெருவெளி கேட்டோம்
காற்றும் கடை திறந்து பெருவெளி கொடுத்தது
உண்டு மகிழ்ந்தோம்
நிலவின் சாலையில் நடந்தே வந்தோம்
வடை சுட்ட ஆயா காணாது தவித்தோம்
ஆயா சிறையிலிருக்கிறார் என்றான்
வடை சுடும்போது கேஸ் தீர்ந்துவிட்டதாம்
சிலிண்டரைக் கொடுத்துதவிய
ஆம்ஸ்ட்ராங் உயிர்காற்றின்றி
உயிர்விட்டுவிட்டாராம்…
புதுக் கவிதை
தீபாவளி
எனது சிறுவயது
தீபாவளி எப்படி!!!
என்று வரும் என்றே எனை
ஏங்க வைக்கும்
காலை எழுந்தவுடன்
நாட்காட்டி பார்த்து பார்த்து
தாள்கள் பழசாய்ப்போகும்
என்ன வண்ண உடை
எங்கே எடுப்பது கவலை
வேறு வந்து ஆட்டும்
யாருமே அணியாத
புது வகைத்துணியில்
நான் மட்டுமே அழகியாக
தோன்றவே விருப்பம் கொள்ளும்
தீபாவளிக்கு ஐந்துமுறையேனும்
கடைக்குச்செல்லவேண்டும்
புதிதாக என்ன மாதிரி உடை
கண்கள் வட்டமிடும்
உனக்கு மட்டுமே இத்தனை
நேரம் எடுத்தால் மற்றவர்களுக்கு??
புதுக் கவிதை
இயலாமையின் ஓளி
இதோ
இந்த பொழுதுதான்
உன்னை அழைத்து
இசை மீட்ட சொன்னது…
நான் பாத்துக்கொண்டே
இருக்கும் சமயத்தில்தான்
நமக்கான இருளும்
இசைந்து வந்தது…
வழியெங்கும் விழிபதித்து
உன் வருகைக்காய்
என்னுடனே காத்திருந்தது
இருளும் கைகோர்த்தபடியே…
புதுக் கவிதை
வேண்டும் சுதந்திரம்
மதுவென்னும் மாயனிடமிருந்து நீங்கி
மகிழ்வோடுவாழ வேண்டும் சுதந்திரம்!
சாதிமத பேதமின்றி ஒற்றுமையோடு
சந்தோசமாகவாழ வேண்டும் சுதந்திரம்!
அணைக்கட்டுப் பிரச்சினையின்றி
ஆதரவாக வேண்டும் சுதந்திரம்!
வெடிகுண்டு பாதிப்பின்றி தீவிரவாதம்
வென்றிட வேண்டும் சுதந்திரம்!