ஒரு கோப்பைத் தேநீர்
ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.
ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.
காதல் கவித்துளிகள் பிப்ரவரி 2022 இதழுடன் இணைப்பு காதல் காதல் என்று சொல்லும் போதே மனத்துள் ஒரு உற்சாகம் பிறக்கும். ஒரு உத்வேகத்தைத் தரும் மந்திரச்சொல் காதல். காதல் அனுபவம் எல்லா மனிதருக்குள்ளும் இருக்கும். இதனைக் கடக்காதவர் எவரும் இருக்க முடியாது. காதல் யார்மீது வேண்டுமானாலும் வரலாம்; எதன் மீது வேண்டுமானாலும் வரலாம். ஆசைப்பட்ட பொருள் அல்லது ஆசைப்பட்ட மனிதர் தன் வாழ்க்கையில் கிடைத்துவிட்டால் அதைவிடப் பெரிய இன்பம் Read more
போலியான மனிதர்களோடு
வாழ்ந்து பழக்கப்பட்டதனால்
உண்மையானவர்கள் யாரென்று கூட
உன்னால் இனங்காண
முடியாமலே போய் விடுகிறது
நீ யாருக்காக
புன்னகைத்துக் கொண்டிருந்தாயோ
அவர்கள் யாருக்காகவோ
வாழப் போய் விட்டார்கள்
கற்றவை ஞாபகமில்லை என்கிறாய்
பரவாயில்லை
நான் இருக்கிறேன் கண்ணே என்கிறேன்..
இவைகள் மட்டுமா
இன்னும் சொல்கிறேன் கேள்
என் அன்பு மகளே
சில பொழுது தாயாகவும்
சில பொழுது தந்தையாகவும்
சில பொழுது தோழியாகவும்
சில பொழுது தாதியாகவும்
உனக்காய் மாறுகிறேன்..
உச்சந்தலை வருடி உரசும் காற்றில் அருகினில் வந்து உரையாடி உறவாகி வெட்கம் பூசி முகமது சிவக்க வில்லாய் வலைக் கரம் வளைத்து, பிறைநுதல் தொட்டு திலகம் தீட்டி விரல் தீண்ட விரதமும் தீரும்! சுவாசக் காற்றே தேவை இல்லை மூச்சாய் என்னை சுமக்கும் அன்பே… மனம் தொடும் காதல் சங்கீதமாய் இயல் இசையை என்னுள் மீட்டுகிறாய்நீ !
உள்ளிழுத்து வெளிவரும் – என் உஷ்ண மூச்சுக் காற்று இதயத்தின் ரணங்களை மொழிபெயர்க்கும்! என் வீட்டு ஜன்னல் கதவு என் மன ஓலத்தை எதிரொலிக்க ஒத்தாசை புரியும்! காயப்பட்ட என் நெஞ்சம் வேதனை தாங்காமல் விம்மித் துடிக்கும்! நித்திரை வராத நிலவுப் பொழுதுகளில் கண்கள் மட்டும் கண்ணீர் வடிக்கும்! செத்துப் போன என் வாழ்வு சில சொப்பனங்களால் மாத்திரம் தினம் நகரும்! யோசித்து வலிக்கும் என் உணர்வுகள் – எப்போது Read more
காடுகள் – நம் வாழ்விடத்தின் கடைகால்கள் ஆனால்… நாம் தகர்த்துக் கொண்டிருக்கிறோம். காடுகள் – நம் உயிர்வளி சேமிப்பகங்கள் ஆனால்… நாம் செலவழித்து கொண்டிருக்கிறோம். காடுகள் – நம் உடலில் உயிராடைகள் ஆனால்… நாம் கிழித்துக்கொண்டு இருக்கிறோம். காடுகள் – நம் வாழ்க்கைப் படகுகள் அதிலே… நாம் துளை போட்டுக்கொண்டு இருக்கிறோம். காடுகள் பறவைகளின் வீடுகள் நாம் கலைத்துக் கொண்டிருக்கிறோம். காடுகள் மரங்களின் மாநாடுகள் நாம் பயனின்றி கூடிக்கூடி கலைந்து Read more
உன் விழியில் விழுந்த நொடி என்னிதயத்துள் காதல் வேர்விட்டதடி உன் ஒற்றைப் பார்வையில் மனம் பித்தாகி நான் மயங்க தூக்கம் தொலைத்த கண்கள் தூர்ந்தே போனதடி நெற்றிப் புரளுமுந்தன் கற்றைக் குழலினில் தூளி கட்டியாடத் துடிக்குதெந்தன் மனது. ஏழ்பிறப்பெடுத்து உனக்காக நானும் ஏவல் செய்யவேத் தவிக்குதெந்தன் வயது. என் காதில் நீ வந்து உன் காதல் சொல்லச் சொல்ல செவிகள் ரெண்டும் பூப்பூக்கும் உயிருக்குள் ஏதோ ஒன்று தேன் வார்க்கும் Read more
குடும்பத்தின் குலமகளே கதம்பத்தின் திருமகளே பெண்ணியத்தின் நிறமகளே கண்ணியத்தின் நிறைமகளே தாய்மையின் கருமகளே வாய்மையின் உருமகளே பெண்மையின் பெருமகளே தண்மையின் உறைமகளே குழந்தையின் கருமகளே சலங்கையின் ஒலிமகளே கணவனின் மெய்மகளே கருத்தினில் மறைமகளே விழிகளின் கயல்மகளே விருந்துகளின் சுவைமகளே விம்பத்தின் நிலமகளே விருட்சத்தில் நிழல்மகளே உலகத்தின் மென்மலரே உயிர்களின் மூச்சிவளே வாழ்க வாழ்க மகளீரே வாழ்த்துகின்றேன் மனங்குளிர…