கலாபூஷணம் பீ.ரீ. அஸீஸ்

மின்மினிப் பூச்சிகள் மின்னலடிக்க பொன்னொளி பூத்தது மனவானில் இலக்கிய முதுசம் சிரேஷ்ட எழுத்தாளர், கலாபூஷணம் பீ.ரீ. அஸீஸ் எழுத்துலகில் மிகுந்த முக்கியத்துவத்துடன் நோக்கப்படுபவர். இவரது கலை இலக்கியச் செயற்பாடுகள் காத்திரமானவை. எல்லா நேரமும் உற்சாகம் குன்றாமல் சுறுசுறுப்பாக இயங்கும் தன்மை கொண்ட இவர், பல்துறை எழுத்துக்களால் பாராட்டும் பல்வேறு விருதுகளும் பெற்றவர். இவரது இலக்கியப் பணியின் (1974 – 2024) ஐம்பதாவது வருட பூர்த்தியினையொட்டி பொன் விழா நிகழ்வு 2024.08.18 Read more

சங்கிலி சுப்பிரமணியன்

கரந்தை புலவர் கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயின்றார். பள்ளி ஆசானாகவும் அதைத் தொடர்ந்து கல்லூரி பேராசிரியராகவும் பணியாற்றினார். யாப்பெருங்கலக் காரிகையில் முனைவர் பட்டம் பெற்றவர். ஏகபோக ஆற்றல் இருந்தும் கவிதை எழுத விரும்பாதவர். ஆயினும் யாராக இருந்தாலும் தமிழில் ஒரு தவறு என்றால் கொம்பு சீவியக் காளை போல உடனே ஓட வந்து தவறுகளைச் சுட்டிக் காட்டி மண்டியிட வைப்பதில் இவருக்கு இணை இவரே.

ஐயா மோகன்

ஒரு சிற்றூரில் ஏட்டுக்கல்வி அறிவில்லாமல் மூட நம்பிக்கையில் பற்றுக் கொண்டு வாழும் குடும்பத்தில் பிறந்த எனக்கு “மூக்கன்” என்று பெயரிட்டனர். கற்ற நண்பர்களும், பெரியவர்களும் எனக்கு “மோகன்” என்று பெயரைத் திருத்தம் செய்தார்கள். அன்றைய நிலையில் நானும் ஏற்றுக் கொண்டேன். “மோகன்” என்பது வடசொல்லாயிற்றே. பெருவாரியாக என் தந்தையின் பெயர் “அய்யாவு” என்பதில் ல்அய்யால் என்ற பகுதியை மட்டும் முன் நிறுத்தி “அய்யா.மோகன்” என்றும், யான் தமிழாசிரியராகப் பணியாற்றியக் கரணியத்தால் “புலவர் அய்யா. மோகன்” என்றும் பெயராயிற்று.

வஃபீரா வஃபி

நான் கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்டவள். எனது
பெற்றோர் இந்திய தேசத்தைப் பூர்வீகமாகக் கொண்டாலும், சிறுவயதிலேயே வியாபார நிமித்தம் குடும்பத்துடன்
இலங்கைக்கு குடிபெயர்ந்தவர்கள்.

பாடசாலைக் காலத்தில் சாரணியர் இயக்கத்திலும்
அங்கம் வகித்து, பல சமூக சேவையிலும் பங்களிப்பு செய்துள்ளேன்

2022 ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில் எனது கன்னி நூலான “புள்ளியில்லாக்
கோலம்” நூலை வெளியிட்டுள்ளேன்.

திரு சங்கரபாண்டியன்


கவிஞர் வைரமுத்து அவர்களின் ஒவ்வோர் உரையிலும் ஏதேனும் ஒரு புதிய சேதியை அறிமுகம் செய்வார் உதாரணமாக, ஒன்று, ஒரு நூலக விழாவில் பேசும்போது, ஆதிகாலத்தில் களிமண்ணில் செய்த சிலேட்டில் படைப்புகளைச் சேகரித்து முதன்முதலாக நூலகம் அமைத்தவர் யாரெனத் தேடி அந்த மூலவரின் சிறப்பை அழுத்தமாக அவ்விழாவில் அறிமுகம் செய்து விடுவார். இப்படி எந்த மேடையாயினும் தன்னுடைய உரைக்கான தேடலை இன்றுவரை அவர் நிறுத்தவே இல்லை, மற்றும் உணர்ச்சியும் உச்சரிப்பும் குரல்வளமும் அவையோரைத் தன்பால் ஈர்க்கும் சக்தியாக இருக்கின்றன.

வட்டாச்சியார் மரபுக்கவிஞரானார்

லோகநாதன் ஜி விருதுநகர் மாவட்ட வட்டாட்சியர், வருவாய் வட்டாட்சியர், சமூக ஆர்வலர், சிறந்த தமிழறிஞர், மிகச்சிறந்த மரபுக் கவிஞர் போன்ற பன்முகத் திறமையுடன் இருக்கும்,. ஐயா லோகநாதன் ஜி அவர்களின் சுவாரஸ்யமான பேட்டி இதோ. வணக்கம் ஐயா அன்பான வணக்கம் ஐயா. வட்டாட்சியர் லோகநாதன் கவிஞர் லோகநாதன் இவை இரண்டில் எந்த பெயர் உங்களுக்கு பிடிக்கும்?  வட்டாட்சியர் என்பது எனது பதவியின் பெயர்..கவிஞர் என்பது எனது விருப்பம் .  இரண்டிலும் Read more

மருத்துவ உலகில் ஒரு தமிழ் மாமணி

கவிநிலா மோகன் : – . கவிநிலா என்ற இதழ் நடத்திவந்த இதழாசிரியர், நீதிமதி, சுகந்தம், தாமரைப் பூக்கள் போன்ற பத்திரிக்கைகளில் உதவி ஆசிரியர், நடிப்புத் துறையில் மலர்ந்தும் மலராத பூக்கள், நேர்க்கோட்டு நியாயங்கள், வேலை காலியில்லை போன்ற மேடை நாடகங்கள் நடத்தியவர். மேலும் தஞ்சை மாவட்ட நடிகர் சங்க உறுப்பினர்.. டாம் டூம் கல்யாணம், வீணையடி நீயெனக்கு போன்ற படங்களில் பாடலாசிரியர்.. மேலும் மகத்தான மருத்துவர் இப்படி பன்முக Read more

எழுதா விதிகளைத் தகர்ப்போம், எழுந்துவா பெண்ணே

உங்களைப் பற்றி.. நான் உடுவிலூர்க்கலா. எழுத்தாளர் கவிஞர் சமூக சேவகி, சுயதொழில் முனைவோர் வளவாளர் எனப் பல பணிகளுக்கூடாக பயணிக்கிறேன். உங்கள் படைப்புகள் பற்றிச் சொல்லுங்கள். கவிதை, சுயதொழில், பெண்ணியம் என 13நூல்கள் வெளியீடு செய்துள்ளேன்.எனது நான்காவது நூல் “சுயம் தரும் சுயதொழில்கள் “சில பாடசாலைகளில் உசாத்துணை நூலாக உள்ளதும், 2023ஆண்டு வெளியீடு செய்த “அரும்புகள் உலகம்” நூல் அரச சாகித்திய விருதுக்கும் பரிந்துரை செய்யப்பட்டதும் மிக்க மகிழ்ச்சியாக உணர்கிறேன். Read more

எண்ணங்கள் வளமானால் எழுத்துகள் வசீகரமாகும்

இலக்கிலக்கிய உலகில் வலுவான எழுத்துத் திறனோடு, அனுபவங்களை உணர்வு மாறாமல் எழுதும் வித்தையோடு வலம் வந்து கொண்டிருக்கும் திரு கி இரகுநாதன் அவர்களுக்கு என் முதல் வணக்கம். இனிய வணக்கம் விஜிம்மா. என் முதல் வாசகியும்,  என் கதைகளைத் திருத்தும் ஆசிரியையுமான உங்கள் மூலம் என் முதல் பேட்டி தமிழ்நெஞ்சத்தில் வெளிவர இருப்பது எனக்கும் பெருமை தான். நேர்கண்டவர் விஜி சிவா உலகெங்கும் உள்ள தமிழ்நெஞ்சத்தின் வாசகர்கள் அறிந்து கொள்ள, Read more

தேசமான்ய பாரா தாஹீர்

பிரபல எழுத்தாளரும் ஊடகவியலாளரும் சமூகசேவையாளருமான மாவனல்லை பாரா தாஹீர் உடனான நேர்காணலோடு இவ்விதழில் உங்களை சந்திக்கிறோம். இலக்கியத்துறையில் பல சாதனைகளை நிகழ்த்தி இன்று வரை தொடர்ந்து இலக்கியத்திற்குப் பெரும் பங்காற்றிக்கொண்டிருக்கும் இவர் நூற்றுக்கணக்கான கவிதைகள் மற்றும் சிறுகதைகளை எழுதியுள்ளார். இவரின் சிறுகதைகள் மற்றும் கவிதைகள் தேசிய பத்திரிகைகளில் பிரசுரமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. சென்னையில் நடைபெற்ற உலக சாதனை விழாவில் 5000 மழலைப் பாடல்களை ஒரே நூலாக வெளியிடும் நிகழ்வில் தனது ஐம்பது Read more