அருள் வாக்கியே! அப்துல்காதிரே!

அருள் வாக்கியே அப்துல் காதிரே! திருப்புகழ் பாடிப் புகழ்சேர்த்த மெய்ஞ்ஞானியே! வெண்பா வினால் விளக்கேற்றியே விந்தைகள் தான்செய்த இறைநேசரே! (அருள்) எரியென்றே நீபாடித் திரியேற்றி னாய் அரியணையில் அணையென்றே ஒளிபோக் கினாய்! சிறுவயதில் போட்டிகளில் திறம்காட் டினாய் யாழ்ப்பாணச் சங்கனென்றும் பெயரீட்டி னாய்! (அருள்) போப்பிட்டி மண்ணீன்ற புகழ் மைந்தனே! யாப்போதிப் பாதந்த  பாமைந்தனே! திருப்பத்தூர் பூர்வீகத் திருவாளனே! அருள்பெற்ற ஆத்மீகக் கவிஜோதியே! (அருள்) பட்டங்கள் பலபெற்ற மாமேதையே! முப்பது Read more

வாரியார் படைப்பில், வாழ்வியல் நெறிகள்.

“அன்பால் அறிவால் அகங்குளிரும் அமுதமொழியால் அனைவரையும்” தன்பால் ஈர்க்கும் தகைமிகு பேச்சாளர், நல்ல எழுத்தாளர், மூதறிஞர், சித்திரகவி பாடிய கவிஞர், முத்தமிழ் அறிஞர், ஆன்மீகச் செம்மல் என்று அடுக்கிக் கொண்டே போகக்கூடிய வல்லமை பெற்ற வாரியார் சுவாமிகளின் நூல்களைப் படிக்கும் பொழுது தனிப்பெரும் இன்பம் தன்னால் வருவதை நாம் உணர முடியும். இளமையிலே பல நூல்களைப் படித்த பெருமைக்கு உரியவர் வாரியார் சுவாமிகள். “யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” Read more

ஸ்ரீமத் பகவத்கீதையும் திருக்குறளும் ( ஒப்பாய்வு – 6 )

தியானயோகம் தஞ்சைத் தமிழ் மன்றத்தின் கவியரங்கம் . அதற்கு வருவதாக ஒரு முகநூல் நண்பர் சொல்லியிருந்தார். முதல்நாளே முகவரியைக் கேட்டுப் பெற்றிருந்தார். வருவதாகச் சொல்பவர்கள் எல்லாம் எங்கே நிகழ்வுகளுக்கு வருகிறார்கள்? ஏதாவது காரணம் சொல்லிவிட்டு வாராமல் நின்று விடுகிறார்கள். ஆனால் இவர் அப்படியல்ல. நிகழ்வு தொடங்குமுன்னே வருகிறார். ஒல்லியான தேகம். சுறுசுறுப்பான நடை. வெண்ணிற மீசை. பளிச்சென்ற கண்கள். கண்டவுடனே எனக்குப் பெருமகிழ்வு. பெரும்பாலும் ஆங்கிலத்தில் உரையாடல்; சார் சார் Read more

முருகவேள் புகழ்மாலை

திருச்செந்தூர்  கந்தர் கலி வெண்பா சண்முக கவசம் பகை கடிதல் குமாரஸ்தவம் வேல் வகுப்பு இவைகள் உள்ளடக்கிய சிறுதொகுப்பு நூல் தங்களின் கருத்துகளை அவசியம் கீழே பதியவும்.

தர்மம் என்றால் என்ன?

இந்து சமய உண்மைகள் நாம் தர்மங்கள் என்றவுடன் தானம் செய்வது என்று எண்ணிக் கொள்கிறோம். உண்மையில் இது தவறாகும். தர்மம் என்பதற்கு தமிழில் அறம் என்ற சொல் உண்டு. தர்மம் என்ற சொல்லுக்கு எண்ணற்ற பொருள்கள் உள்ளன. தர்மம் தான் உலகை நிலைநிறுத்துகின்றது. ஆங்கிலத்தில் தர்மம் எனும் சொல்லைச் சரியாகக் குறிப்பதற்கு ஒரு சொல் இல்லை. தர்மம் எனும் சொல்லை மிகச் சுருக்கமாகச் சொல்லவேண்டும் என்றால் “முறையான வாழ்வுமுறை” என்று Read more

புனிதப் பயணம்

சாந்திச்ச ரணா லயமாம் – ஹஜ்ஜில்       சாரும் புவியின் முதலா லயமாம் ஏந்திப் பிரார்த்திக்கும் ஆங்கே – அருள்       இறங்கிடும் ஹாஜிகட்கு நன்மையும் பாங்கே தந்தைஇப் றாஹிம்பாங் கோசை – இந்தத்       தரணியில் மக்காவின் ஈர்ப்பு விசையாம் சிந்தையிட் சேருமிறை போதம் – ஆங்குச்       சேர்ந்தே ஒலிக்கும் திருமறை நாதம் அரபு நாட்டு Read more

பயணச் சுற்றுலா

நாம் அனைவருமே இறைவனால் படைக்கப்பட்டு இவ்வுலகிற்கு அனுப்பி வைக்கப்பட்ட சுற்றுலா பயணிகள். சுற்றுலா செல்லும் யாரும் சென்ற இடத்திலையே தங்கி விடுவது இல்லையே. எங்கிருந்து கிளம்பினோமோ அவ்விடத்திற்கே திரும்பிச் செல்வோம். அதுப்போலவே இவ்வுலக சுற்றுலா வாழ்க்கை முடிந்ததும் நம்மைப் படைத்து அனுப்பியவரிடமே திரும்பி செல்வோம். நாம் சுற்றுலா சென்ற இடத்தையும் அங்குள்ள பொருட்களையும் எப்படி உரிமைக் கொண்டாட முடியாதோ, அதுப்போல இவ்வுலக சுற்றுலா வாழ்க்கை முடித்து படைத்தவனிடம் திரும்பிச் செல்லும் Read more

குணசீலர்

சில மாதங்களுக்கு முன்பு மாற்றுமத நண்பருடன் கருத்தரங்கு ஒன்றிற்கு சென்றிருந்தேன். அக்கருத்தரங்கில் பேசிய ஒருவர்மனிதர்களிடம் இருக்க வேண்டிய நல்ல குணங்களைப் பற்றியும், பிரபலமான சிலரிடம் இருந்த குணநலன்களைப் பற்றியும் பேசினார். அவர்தமது உரையில் அஹிம்சைக்கு மகாத்மா காந்தியையும், உண்மைக்கு சாக்ரடீஸையும், நேர்மைக்கு லால் பகதூர் சாஸ்திரியையும்,பொறுமைக்கு அன்னை தெரசாவையும், நடுநிலைமைக்கு மனுநீதி சோழனையும், தன்னடக்கத்திற்கு இராமகிருஷ்ண பரமஹம்சரையும், பணிவுக்கு ராமானுஜர் (நம்பியாண்டார் நம்பி)யையும், விடா முயற்சிக்கு கஜினி முஹம்மதையும், பொறாமையின்மைக்கு Read more