அருள் வாக்கியே அப்துல் காதிரே!
திருப்புகழ் பாடிப் புகழ்சேர்த்த மெய்ஞ்ஞானியே!

வெண்பா வினால் விளக்கேற்றியே
விந்தைகள் தான்செய்த இறைநேசரே!

(அருள்)

எரியென்றே நீபாடித் திரியேற்றி னாய்
அரியணையில் அணையென்றே ஒளிபோக் கினாய்!
சிறுவயதில் போட்டிகளில் திறம்காட் டினாய்
யாழ்ப்பாணச் சங்கனென்றும் பெயரீட்டி னாய்!

(அருள்)

போப்பிட்டி மண்ணீன்ற புகழ் மைந்தனே!
யாப்போதிப் பாதந்த  பாமைந்தனே!
திருப்பத்தூர் பூர்வீகத் திருவாளனே!
அருள்பெற்ற ஆத்மீகக் கவிஜோதியே!

(அருள்)

பட்டங்கள் பலபெற்ற மாமேதையே!
முப்பது நூல் ஈந்திட்ட பேராளனே!
அற்புதப் படைப்பாளி அப்துல் காதிரே!
அட்டவ தானியே! வித்துவத் தீபமே!

(அருள்)

ஆகஸ்ட் 30, இலங்கை, கண்டி போப்பிட்டியில் பிறந்த, இந்தியா திருப்பத்தூரைப் பூர்வீகமாகக் கொண்ட மெய்ஞ்ஞானி, அட்டவதானி, வித்துவ தீபம், புலவர் அருள்வாக்கி அப்துல் காதிர். அவர்களின் நினைவு நாள்.


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

பாடல்

மருதாம்புலத்தரசி மதுர கீதம் 2

பக்திப்பாடல்

பல்லவி.

தாயுந்தன் வாசல்வரை வரவேண்டுமே!
தாயுந்தன் திருமுகத்தின் அருள்வேண்டுமே..!
காளிதேவி வடிவில் நின்றாய்..!
ஊழிக்காலத் துணையாய் வந்தாய்.!

(தாயுந்தான்….)

சரணம்.

 » Read more about: மருதாம்புலத்தரசி மதுர கீதம் 2  »

பாடல்

மருதாம்புலத்தரசி மதுர கீதம் 1

பக்திப்பாடல்

பல்லவி

இன்ப வடிவாகி இசையில் நிறைவாகி
மெய்யின் பொருளாகினாய்..அம்மா…!

கன்னித் தமிழாகி காக்கும் கருமாரி
சக்தி வடிவாகினாய்..அம்மா… !

மண்ணின் மகமாயி மதுரை மீனாட்சி மடியில் எனைத் தாங்குவாய்..அம்மா…

 » Read more about: மருதாம்புலத்தரசி மதுர கீதம் 1  »

ஆன்மீகம்

வாரியார் படைப்பில், வாழ்வியல் நெறிகள்.

“அன்பால் அறிவால் அகங்குளிரும்
அமுதமொழியால் அனைவரையும்”

தன்பால் ஈர்க்கும் தகைமிகு பேச்சாளர், நல்ல எழுத்தாளர், மூதறிஞர், சித்திரகவி பாடிய கவிஞர், முத்தமிழ் அறிஞர், ஆன்மீகச் செம்மல் என்று அடுக்கிக் கொண்டே போகக்கூடிய வல்லமை பெற்ற வாரியார் சுவாமிகளின் நூல்களைப் படிக்கும் பொழுது தனிப்பெரும் இன்பம் தன்னால் வருவதை நாம் உணர முடியும்.

 » Read more about: வாரியார் படைப்பில், வாழ்வியல் நெறிகள்.  »