நகரத்து காக்காவும் கிராமத்துக் காக்காவும்

நகரத்து காக்கா ஒன்று கிராமத்து காக்காவை பார்க்க வந்தது. ”எங்க பட்டணத்துல எல்லாம் பெரிய பெரிய கட்டடமா இருக்கும். இங்கே என்னன்னா ஒரே குடிசையா இருக்கே. அங்கே காரு, பஸ்ஸூனு ஏகப்பட்ட வண்டிக ஓடுது. ஆனா, இங்கே கட்டைவண்டியும், சைக்கிளும்தான்…” என்று பட்டணத்து பெருமை பேசியது நகரத்து காக்கா. ‘பட்டணத்துல அப்படி என்னதான் இருக்குன்னு நாமளும் போய் பார்த்துட்டு வருவோம்’ என்று நகரத்து காக்காவுடன் புறப்பட்டு போனது கிராமத்து காக்கா. Read more

டைரிக்குறிப்பு…

குளிரும்.. மழையும் கைகோர்த்து.. அஸ்ஸாமின் அழகிய நகரம் ஜோர்ஹட்டை மேலும் அழகாக்கி கொண்டிருந்தன.. மாலை நான்கு மணிக்கே இருள் சூழத் தொடங்கியது.. பரத் அம்மா வீட்டிற்குள் நுழைந்தேன்.. அவர் கணவருடன் பணிபுரியும் இளைஞரொருவர் திருமண அழைப்பிதழ் கொடுத்து அழைத்து விட்டு வெளியேறினார்.. தயாராகயிருந்த பால் பொடியில் போட்ட தேனீர் கோப்பையை தந்தாள்.. அவளும் பருகிய படி தொடங்கினாள்.. வந்துட்டுப்போனானே.. அவன் யாரு தெரியுமாயென்றாள்.. தெரியாதே யாருன்னு கேட்டேன்.. எங்கவூர் வெட்டியான் Read more

இந்திப் படித்த வெள்ளித் தட்டு

ஒவ்வொரு நாளிரவும்.. விஜி குழந்தைக்கு கதை சொல்வது வழக்கம்.. அதில் சொந்தக் கதை.. சோகக் கதையும் இருக்கும்.. அப்படியொருநாள்.. விஜி தனது ஆறுமாத குழந்தையிடம் கதை சொல்லிக்கொண்டிருந்தாள்.. குழந்தையும் குஷியாக காலக் கைய ஆட்டி.. தரையை காலால் உதைத்து.. கால் தண்டையின் பரல்கள் சத்தமிட.. பொக்கைவாயைக் காட்டி சிரித்துக் கொண்டிருந்தது.. அம்மாவிடம்.. ம்.. ம்.. சொல்லி கதை கேட்டுக் கொண்டிருந்தது.. இந்த வர்ணனைகளை நான் எழுதுவதற்குள்.. கதை விறுவிறுப்பாக போய்க் Read more

நீ எப்படியோ அப்படித்தான் மற்றவர்களும்

தன் முன் கவலையுடன் நின்ற இளைஞனைப் பார்த்தார் குரு. “என்ன பிரச்னை? எதற்கு கவலை?” என்றார் குரு. “எனக்கு எந்த வியாபாரமும் சரிவர மாட்டேன்கிறது. எல்லோரும் என்னை எதிரியாகவே பார்க்கிறார்கள். யாரும் சரியாகப் பழக மாட்டேன்கிறார்கள். என்ன செய்வது என்றே தெரியவில்லை.” அவன் சொன்னதிலிருந்தே இளைஞனுடைய பிரச்னை என்னவென்று குருவுக்குத் தெரிந்துவிட்டது. அவனுக்கு ஒரு கதையை சொல்லத் துவங்கினார். ஒரு ஊருக்கு வெளியே மரத்தடில பெரியவங்கலாம் உக்காந்து பேசிக்கிட்டு இருந்தாங்க. Read more

மறதி

ராமுவுக்கு ஞாபகமறதி அதிகம். ஆனால் அதை அவன் ஒப்புக் கொள்ளவே மாட்டான். ஒருநாள் அவன் வாக்கிங் போகும்போது ஒரு போர்டைப் பார்த்தான். ‘டாக்டர் பூதலிங்கம் – மனோதத்துவ நிபுணர்’. ‘இவரை கன்ஸல்ட் செய்தால் என்ன?’ என்று நினைத்தவன்… உள்ளே நுழைந்தான். “வாங்க… உட்காருங்க”. “எனக்கு ஞாபகமறதி அதிகமா இருக்கறதா எல்லாரும் சொல்றாங்க…” என்று இழுத்தான் ராமு. “ஓ.கே.. லெட் அஸ் ஸீ… உங்களுக்கு கல்யாணம் ஆகிவிட்டதா?” இந்த விஷயத்தில் அவனுக்கு Read more

சூப்பர் ஹிட் வெள்ளி

பக்கத்து வீட்டு சங்ரம்மாவின் ஐந்து வயது மகள் ப்ரியாவிடம் வந்து, ” தம்பிப் பாப்பாவுக்கு காய்ச்சல். அம்மா உங்ககிட்ட 100 ரூபா வாங்கிட்டு வரச் சொன்னாங்க ” என்று, அந்த பிஞ்சு மழலை மொழியில் சொல்ல, ப்ரியாவிற்கு கோபம் தலைக்கேறியது. “ஏண்டி… ஒங்கம்மாவுக்கு என்னக்கி காசு கேக்கறதுன்னு வெவஸ்தையேயில்ல. வெள்ளிக் கிழமயும் அதுவுமா, காலங்காத்தால. போடி, போய், ‘இல்லே’ன்னு சொல்லு” என்று சொல்லும்போதே, “ஏய் ப்ரியா” என்று கூப்பிட்டபடி வந்தான், Read more

விடுதலை

இன்று விடுதலை. சிறையை விட்டு வெளியேறப் போகிறார் சேகர். அடைப்பட்ட வாழ்வை 18 ஆண்டுகள் அனுபவித்து விட்டார். பெருமூச்சு உதிர்ந்தது. அவரும் படித்தவர். பட்ட தாரி. சக நண்பர்கள் பெரிய பதவியில் இருப்பதை அறியும் பொழுது… அவரையறியாமல் மனசு கலங்கும். இவ்வளவு காலத்திற்குப் பிறகு, சிறையை விட்டு வெளியேறி… வீடு, குடும்பம், வாழ்க்கை… என்பதை நினைக்கும் பொழுது… அவருக்கு பயமாக இருந்தது. கூப்பிட்டு அனுப்பிய ஜெயிலரின் முன் நின்றார் சேகர். Read more

அன்பின் பரிசு

புதிதாக மணமான இளந்தம்பதிகள். இல்லறப் பூங்காவில் துள்ளியோடும் புள்ளிமான்கள். எந்தெந்த வழியில் இன்பம் கிடைக்கின்றதோ அதை அனுபவிக்கத் துடித்துக் கொண்டிருக்கும் இளஞ்சிட்டுகள். அன்றையதினம் அவர்கள் பெயருக்கு அஞ்சலொன்று வருகிறது. அதை ஆவலுடன் பிரித்துப் பார்க்கிறார்கள். உள்ளே… பிரபலமானவர்கள் நடித்துத் திரையிடப்பட்டிருக்கும் சினிமாவின் இரவு காட்சிக்கு ரிசர்வ் செய்யப்பட்ட முதல் வகுப்பு டிக்கெட் இரண்டு அவர்களைப் பார்த்துச் சிரித்தது. இருவரும் மகிழ்ச்சியில் திளைத்தார்கள். அனுப்பியவர் யார் என்றும் தெரியவில்லை. அனுப்பியவர் யாராக Read more