இன்று விடுதலை. சிறையை விட்டு வெளியேறப் போகிறார் சேகர்.

அடைப்பட்ட வாழ்வை 18 ஆண்டுகள் அனுபவித்து விட்டார். பெருமூச்சு உதிர்ந்தது.

அவரும் படித்தவர். பட்ட தாரி. சக நண்பர்கள் பெரிய பதவியில் இருப்பதை அறியும் பொழுது… அவரையறியாமல் மனசு கலங்கும்.

இவ்வளவு காலத்திற்குப் பிறகு, சிறையை விட்டு வெளியேறி… வீடு, குடும்பம், வாழ்க்கை… என்பதை நினைக்கும் பொழுது… அவருக்கு பயமாக இருந்தது.

கூப்பிட்டு அனுப்பிய ஜெயிலரின் முன் நின்றார் சேகர்.

“சேகர்! நீங்க இன்னிக்கு வெளியே போக வேண்டிய நாலுன்னு தெரிஞ்சதும், என் மனசு எப்படி இருந்தது தெரியுமா? ” என்றார் ஜெயிலர்.

அவர் அதிகாரியாக இங்கு வந்த பிறகு சேகரின் மேல் அன்பும் மரியாதையும் காட்டி வந்தார்.

ஒரு நாளும் அறை விதி யை மீறியதில்லை. நேர்மைவாதி!

” இவரெல்லாம் சிறைக்கு வர வேண்டியவரா?” என்று ஜெயிலரே பல முறை நினைத்திருக்கிறார்.

” அய்யா… நீங்க சொல்றது வாஸ்தவம்தான்… ஆனா, எது நடக்கணும்னு இருக்கோ… அது தானே நடக்கும்?.. ” எனக் கேட்டு தழுதழுத்தார்.

“சேகர்! என்ன இது? ஏன் கலங்குறீங்க? எம்.ஏ. எம்ஃபில் முடிச்ச நீங்க… அதுக்கேத்த வேலை கிடைக்காம… ஜெயில் வார்டனா வந்தீங்க. காலம் ஓடிப் போச்சு. வயசுங்கறது யாரை கேட்டு ஆகுது?

… ரிடையர் ஆகி சிறையை விட்டுப் போற நீங்க… மன நிறைவோட போய்ட்டு வாங்க… ”

அவருக்குரிய மாலை மரி யாதைகளுடன் ஜெயிலர் அனுப்பி வைக்க சேகர் சிறையை விட்டு வெளி யே வந்தார்.

அவரைப் பொறுத்தவரை அது விடுதலைதான்!

Related Posts

தொடர் கதை

மஹ்ஜபின் – 3

தொடர் – 03

அவர் வேலை தேடி சவூதி அரேபியா வுக்குச் செல்ல தயாராகிக் கொண்டிருந்த காலம் அது.

கனவுச் சிறைக்குள் சுதந்திரக் கைதி யாய் சிறகடித்த அவளின் தாய்க்கு வெளி நாட்டு வாழ்க்கையில் இஷ்டம் இல்லை.

 » Read more about: மஹ்ஜபின் – 3  »

தொடர் கதை

மஹ்ஜபின் – 2

தொடர் – 02

எப்படியாவது தனது மனதில் உள்ள மூன்றாண்டுக் கால காதலை மஹ்ஜபினிடம் சொல்லி விட வேண்டும் என்ற முடிவுடன் அன்றொரு நாள் அவளைச் சந்தித்து தனது காதலையும் நேசத்தையும் காத்திருப்பையும் சொல்லி முடித்தான் கஷ்வின்.

 » Read more about: மஹ்ஜபின் – 2  »

தொடர் கதை

மஹ்ஜபின் – 1

மஹ்ஜபின் என அறிந்து கொண்ட நாட்களில்  இருந்து கஷ்வின் அவளை தன் இதயவரையில் மாளிகை கட்டி குடியமர்த்தி இருந்தான். மறு புறமாக ரீஸாவை பார்க்கும் போதல்லாம் அவள் மஹ்ஜபீன் தான் எனத் தெரியாமல் அவளை தப்புத் தப்பாக எண்ணியதை நினைத்து வெட்கித்து தலையை கவிழப் போட்டான். சுமார் மூன்று நான்கு வருடங்களாக அவனது நாடி நாளங்களில் எல்லாம் உருத் தெரியாமல் ஊடுருவி வாழ்ந்து கொண்டிருந்த மஹ்ஜபினின் முகத்தை கண்டு விட்டான் கஷ்வின்.... யுகம் யுகமாய் தவமிருந்த முனிவனுக்கு கிடைத்த வரம் போல இன்றேனும் மஹ்ஜபினைக் கண்டு விட்ட ஜென்மானந்தம் அவனுக்குள் சொல்லி மகிழ வார்த்தைகளே இன்றி அவளுடைய உள்ளமெங்கும் பட்டாம்பூச்சிகள் சிறகடித்தன..