விடுதலை

இன்று விடுதலை. சிறையை விட்டு வெளியேறப் போகிறார் சேகர். அடைப்பட்ட வாழ்வை 18 ஆண்டுகள் அனுபவித்து விட்டார். பெருமூச்சு உதிர்ந்தது. அவரும் படித்தவர். பட்ட தாரி. சக நண்பர்கள் பெரிய பதவியில் இருப்பதை அறியும் பொழுது… அவரையறியாமல் மனசு கலங்கும். இவ்வளவு காலத்திற்குப் பிறகு, சிறையை விட்டு வெளியேறி… வீடு, குடும்பம், வாழ்க்கை… என்பதை நினைக்கும் பொழுது… அவருக்கு பயமாக இருந்தது. கூப்பிட்டு அனுப்பிய ஜெயிலரின் முன் நின்றார் சேகர். Read more