சமகால கவிஞர்கள்

தமிழ்நெஞ்சம் பேசுகிறது வணக்கம் எங்களுடைய விருப்பமெல்லாம் உலகத்தமிழ் இளம் எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களை ஒன்றிணைத்து அவர்களுக்குக் களம் அமைத்துத் தந்து, உலகத் தமிழர்களுக்கு அவர்களை அறிமுகம் செய்வதே ஆகும். அதுவே தமிழ்நெஞ்சத்தின் நோக்கமும் ஆகும். அந்த வகையில் நேர்காணல் வழியாக அறிமுகம் செய்து வருகிறோம். எழுத்தார்வம் உள்ளவர்களின் ஆக்கங்களைப் பெற்று இதழில் இடம்பெறச் செய்து அவர்களை செம்மைப் படுத்தும் பொருட்டு சிறப்பு செய்கிறோம். அந்தப் பார்வையில் நமது இதழ்குழு செயலர் Read more

பாவேந்தல் பாலமுனை பாறூக் பொன்விழா!

இலங்கைத் திருநாட்டில் இலக்கியக் கொண்டாட்டம் பாவேந்தல் பாலமுனை பாறூக் பொன்விழா! அடைமழை பெய்து ஓய்ந்து அடுத்து சில தினங்களில் ஆங்காங்கு தூறல்கள் அவிழ்ந்திட்ட போதும் 15.01.2022 மாலை சனிக்கிழமை அசல் வெயில் பாலமுனை எங்கும் பரவிக்கிடந்தது. அஸர் தொழுகையை நிறைவேற்றிய கையோடு பாவேந்தல் பாலமுனை பாறூக் அவர்கள் விழாக்குழுவின் ஒருங்கிணைப்பாளரும் பாவேந்தலின் நண்பருமான கவிஞர் எழுகவி ஜெலீல் அவர்களால் அழைத்து வரப்பட்டு  விழா மண்டபத்தின் தெற்கே சுமார் இருநூறு மீட்டர் Read more

கவிஞரேறு வாணிதாசன்

வாணிதாசன் பிரபல தமிழ்க் கவிஞர். தலைசிறந்த தமிழ்க் கவிஞர்களில் ஒருவரும் பாவேந்தர் பாரதிதாசனின் மாணவருமான வாணிதாசன் நினைவு  தினமாக  ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 7 ல் கொண்டாடப்பட்டு வருகிறது. புதுவை மாநிலத்தின் வில்வ நல்லூர் என அழைக்கப்பட்ட இன்றைய வில்லியனூரில் 22. 07. 1915 ல் பிறந்தார். இவரது இயற்பெயர் அரங்கசாமி. கவிஞரின் ஏழாம் வயதில் தாயார் இயற்கை எய்தினார். பாட்டியின் செல்லப்பிள்ளையாக, தந்தை மற்றும் சிற்றன்னையின் அரவணைப்பில் வளர்ந்தார் Read more

வாரியார் படைப்பில், வாழ்வியல் நெறிகள்.

“அன்பால் அறிவால் அகங்குளிரும் அமுதமொழியால் அனைவரையும்” தன்பால் ஈர்க்கும் தகைமிகு பேச்சாளர், நல்ல எழுத்தாளர், மூதறிஞர், சித்திரகவி பாடிய கவிஞர், முத்தமிழ் அறிஞர், ஆன்மீகச் செம்மல் என்று அடுக்கிக் கொண்டே போகக்கூடிய வல்லமை பெற்ற வாரியார் சுவாமிகளின் நூல்களைப் படிக்கும் பொழுது தனிப்பெரும் இன்பம் தன்னால் வருவதை நாம் உணர முடியும். இளமையிலே பல நூல்களைப் படித்த பெருமைக்கு உரியவர் வாரியார் சுவாமிகள். “யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” Read more

மாற்றி யோசி

அன்று மதியம் ரூமுடைய கதவை திறந்த போது சாவி கைதவறி கீழே விழுந்து விட்டது. சாவியை எடுக்க குனிந்த போதுதான் அது கண்ணில் தெரிந்தது. எறும்புகளின் ஒரு பெரும் படையே கதவின் ஓரத்தில் இருந்த இடுக்கு வழியாக போய்க்கொண்டு இருந்தது. அவசர அவசரமாக கதவை திறந்து பார்த்த போது அதன் ஓடுபாதை மேற்புறமுள்ள சுவற்றை நோக்கி இருந்தது. நான் மெதுவாக சுவரோரம் கிடந்த பிளாஸ்டிக் பையை எடுத்து விட்டு பார்த்தேன். Read more

மலையகப் பெண்களும் சுகாதாரப் பிரச்னைகளும்

மலையகம் என்றதும் பெரும்பாலானவர்க்கு குறிப்பாக ஏனைய பிரதேசங்களில் வாழ்பவர்கள் மலைநாட்டை நல்லதொரு சுற்றுலா தளமாகத்தான் பார்க்கிறார்கள். சிலுசிலுவென்று குளிரும் புதிதாக திருமணத்தில் இணைந்தவர்கள் தேர்ந்தெடுக்கும் தேனிலவு பிரதேசமாகவும் பாடசாலை மாணவர்களளுக்கான சுற்றுலா தளமாகவுமே மலைநாடு இன்றுப் பார்க்கப்படுகின்றது. மலையகத்தில் தேயிலையும் இறப்பரும் பயிரிடப்படுகின்றமை யாவரும் அறிந்ததே. மேலும், பிரித்தானியர்களால் 1815ம் ஆண்டு கண்டி கைப்பற்றப்பட்டப் பின்னர் மலைநாட்டை அவர்கள் ஒரு பெருந்தோட்டமாக மாற்ற முனைந்து அதில் வெற்றிப் பெற்றனர். இவ்வெற்றிக்கும் Read more

தமிழைப் போல வாழ்க தமிழ்நெஞ்சம்

தமிழைப் போல நலமுடன் வளமுடன் வாழ்க! வாழ்க!! இலக்கு நோக்கி இயங்கு கின்ற இனிய தோழர் தமிழ்நெஞ்சம்- எதையும் துலக்க மாக துணிந்தே செய்யும் தூய நேயர் தமிழ்நெஞ்சம் அன்பில் பண்பில் ஆற்றல் தன்னில் அகம்போல் சிறந்தவர் தமிழ்நெஞ்சம்- தோழர் இன்று போல இன்பமாக இயற்றமிழ் ஆவார் தமிழ்நெஞ்சம் நல்மனம் கொண்ட நற்றமிழ் வாணர் நாடு போற்றும் தமிழ்நெஞ்சம்– தமிழ்ச் சொல்லைப் போல செழுமை ஆனவர் செயல்திறன் கொண்டவர் தமிழ்நெஞ்சம்

தங்கையின் மணவிழா மலர்

திருமண விழாவில் தங்கைக்காக கவிஞர் மன்னை ஜீவிதா அரசி வழங்கிய சிறு நூல். மேலேயுள்ள முகப்புப்படத்தில் க்ளிக் செய்து தரவிறக்கம் செய்து படிக்கலாம்.

சிற்றிதழ்கள் உலகம் சரிந்தது!

அஞ்சலி வரம்போடு தம்வாழ்வை     வகுத்தளித்து வாழ்ந்துவந்த பெரம்பலூரில் பிறந்திட்ட     பெருவைரம் இராமதாசு, உரமாக இருந்துவந்து     உயர்வான சிற்றிதழைத் தரமான எழுத்துகளால்     தவழவிட்டு மகிழ்ந்துவந்தார். பெற்றெடுத்த பிள்ளையினும்     பிரியமுடன் வளர்த்துவந்த சிற்றிதழைத் தம்பொறுப்பில்     சிரமங்கள் பலவிடையே, முற்றும்நம் தமிழ்வளர     முனைப்பாக பாடுபட்டு உற்றதுணை யாயிருந்து     உயிரையும் உவந்தளித்தார். துபாயிலவர் Read more