தமிழ்நெஞ்சம் பேசுகிறது
வணக்கம்

சமகாலக் கவிஞர்கள் நூலினை பதிவிறக்கம் (download) செய்ய மேற்காணும் அட்டைப்படத்தில் டச் அல்லது கிளிக் செய்யவும்
எங்களுடைய விருப்பமெல்லாம் உலகத்தமிழ் இளம் எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களை ஒன்றிணைத்து அவர்களுக்குக் களம் அமைத்துத் தந்து, உலகத் தமிழர்களுக்கு அவர்களை அறிமுகம் செய்வதே ஆகும். அதுவே தமிழ்நெஞ்சத்தின் நோக்கமும் ஆகும். அந்த வகையில் நேர்காணல் வழியாக அறிமுகம் செய்து வருகிறோம். எழுத்தார்வம் உள்ளவர்களின் ஆக்கங்களைப் பெற்று இதழில் இடம்பெறச் செய்து அவர்களை செம்மைப் படுத்தும் பொருட்டு சிறப்பு செய்கிறோம்.
அந்தப் பார்வையில் நமது இதழ்குழு செயலர் பாவலர்மணி இராம் வேல்முருகன் அவர்களின் முயற்சியில் உதித்த, 101 சமகாலக் கவிஞர்களைப் போற்றிப் பாடிய பாடல்களை நமது வாசகர்களுக்கு தொகுத்து, இங்கே நூலாக வழங்கி மகிழ்கிறோம்.
இதுபோன்று நமது எழுத்தாளர் கவிஞர்கள் தத்தமது அறிஞர் பெருமக்களை வாழ்த்தி எழுத இந்நூல் தூண்டுகோளாக அமையுமானால் அதுவே இந்நூலின் சிறப்பாகும்.
வாழ்த்துங்கள் வளம்பெறவே…
நன்றி!
அன்புடன்
தமிழ்நெஞ்சம் அமின்
ஆசிரியர்
மற்றும் ஆசிரியர் குழு