ஹைக்கூ திண்ணை 13

ஹைக்கூ திண்ணை செப்டம்பர் / ஒக்டோபர் மின்னிதழைத் தொகுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். இந்தப் பெறுமதியான வாய்ப்பை வழங்கிய கவிச்சுடர் கல்யாணசுந்தரம் ஐயா அவர்களுக்கு முதற்கண் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன்.

ஹைக்கூ என்றால் என்ன, அதை விளங்கிக் கொண்டு அதன் விதிமுறைகள் பற்றி அறிந்து அதன்படி எழுத எல்லோரும் முனைகின்றார்களா என்பது கேள்விக்குறியே. சிலர் இலக்கண விதிமுறைக்கேற்ப ஹைக்கூ கவிதைகளை எழுதுகின்றனர். ஆனாலும் சிலர் இலக்கண விதிகளைக் கொஞ்சம் மீறிப் புதுமையாக, வித்தியாசமாக எழுதுபவர்களாக இருக்கிறார்கள்…

நிறைய சிந்தியுங்கள் ஹைக்கூ பிறக்கும்

ஹைக்கூ கவிதைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதில் குழப்பம் வருவதில் அர்த்தமில்லை அவசியமில்லை தேவையுமில்லை. வாழ்ந்த ஹைக்கூ முன்னோடிகள் கவிக்கோ அப்துல் ரகுமான் தி. லிலாவதி, கவிஞர் மித்ரா, நிர்மலா சுரேஷ் போன்றவர்களின் கவிதை களைப் பாடமாக படியுங்கள். நாம் வாழும் காலத்தில் இருக்கின்ற தமிழக மூத்தக் கவிஞர்கள் கவிஞர் அமுதபாரதி கவிஞர் ஈரோடு தமிழன்பன் கவிஞர் அறிவுமதி கவிச்சுடர்
கா. ந. கல்யாண சுந்தரம் கவிஞர் அமரன் கவிஞர் வே. புகழேந்தி கவிஞர் அனுராஜ் கவிஞர் இளையபாரதி கந்தகம் பூக்கள் இவர்களின் கவிதைகளைப் படித்து நுணுக்கங்களை கற்றுக் கொள்ளுங்கள்.

ஹைக்கூ திண்ணை 9

வாசம் புதிது வண்ணம் புதிது

மு.முருகேஷ்

தமிழ்ப் பண்பாட்டு நடைமுறைகளில் பானம் அருந்துதல், தாம்பூலம் தரித்தல், ஒன்று சேர்ந்து உணவு உட்கொள்ளுதல் போன்றவை இருப்பதைப் போலவே, ஜப்பானும் தேநீர் விருந்தினைத் தனக்கான மரபாக்கிக் கொண்டது. கி.பி. 6-ஆம் நூற்றாண்டில் சீனாவில் தேநீர் அருந்தும் வழக்கம் தொடங்கி, ஹிய்யான் காலத்தில் ஜப்பானுக்கு அறிமுகமானது. ‘தேநீர்ப் பண்பாட்டின் தந்தை’ என அழைக்கப்பட்ட ஜப்பானிய ஜென் குரு இசாய் (கி.பி.1141-1215) தேயிலையை மூலிகையெனக் கருதி, அதன் மருத்துவக் குணங்களை நூலாக எழுதினார். ஜென் குருவான தாகுவான் (கி.பி.1573-1645), தேநீர்க் கோட்டை உருவாக்கினார். அதில் – ‘தேநீர் முதல் கோப்பை, தொண்டையையும் உதடுகளையும் நனைக்கும்; இரண்டாவது கோப்பை, தனிமையைக் கலைக்கும்; மூன்றாவது கோப்பை ஆழ்மனத்தைத் தொடும்’ என்று கவித்துவத்தோடு குறிப்பிட்டார்.

ஹைக்கூ திண்ணை 8

எல்லாவற்றையும் சொல்லுவதல்ல சென்.
சொல்லியதை விட சொல்லாமல் இருப்பதே மிக அதிகமாக இருக்கும். அப்படிப்பட்துதான் இன்றைய நிகழ்வும்…
பூ அரும்பாக, மொட்டாக இருக்கும் போது வணங்குவது போலவும், மொட்டு விரிந்து சிரிக்கும் போது மணம் வீசுவதாகவும், கனியாக பழுத்த போது பசியாற்றுவதாகவும் இருக்கிறது.
அப்படியானதுதான் இந்த வாழ்க்கை. பூ அமைதியாக பூத்து, காய்ந்து, கனிந்து பசியாற்றுவது போல நாம் எந்தவித «அகாசுகா» வேலையும் காட்டாமல் தனக்கான பணியை மட்டும் செய்வதே சிறப்பாகும்
கண்டதை கண்டபடி சொல்லாமல் கண்டபடியெல்லாம் சொல்கின்றனர். ஒப்பனை செய்து சொல்கின்ற பாவகை அல்ல துளிப்பா. கற்பனையை விற்பனை செய்யும் அங்காடித் தெருவல்ல துளிப்பா உலகம்.

ஹைக்கூ திண்ணை 7

மின்னல் அடித்தால் அதிர்ச்சி உண்டாவது போல நல்லதொரு ஹைக்கூ படித்தால் நமக்கு ஒரு வித இன்ப அதிர்ச்சி உண்டாக வேண்டும்.

அவ்வாறு அதிர்ச்சியைத் தருவது அதன் ஈற்றடிதான் என்றால் அது மிகையாகா. அத்தகைய ஈற்றடி

‘போகிறது / வருகிறது / நிற்கிறது’ போன்ற வினைச் சொல்லாக இல்லாமல், ‘வானம் / ஊர்வலம் / ஆடும் மயில் /’ போன்ற ஒரு பெயர்ச்சொல்லாக இருந்தால் மாத்திரமே அது சாத்தியம். ஆதலால்த்தான் ‘‘ஹைக்கூவின் ஈற்றடி ஒரு பெயர்ச்சொல்லாக இருக்க வேண்டும்’’ என்பது முக்கிய நிபந்தனைகளில் ஒன்றாக இருக்கிறது. இது ஹைக்கூ எழுதும் பலருக்குத் தெரியவில்லை. சும்மா மூன்று வரி எழுதினால் அது ஹைக்கூ என்று நினைத்து எழுதித் தள்ளுகின்றனர். அவற்றில் எந்தவித சுவாரஷ்யமும் இருப்தில்லை. அந்தோ பரிதாபம்!

ஹைக்கூ திண்ணை 5

உலகத்தமிழ் ஹைக்கூ கவிஞர்கள் மன்றம் முகநூல் குழுமத்தில் பதிவாகும் ஹைக்கூ, சென்ரியு, லிமரைக்கூ, ஹைபுன் வகைமையிலிருந்து தேர்வு செய்யப்பட்டு மின்னிதழ் இரு மாதங்களுக்கு ஒரு முறை வெளியிடப்படுகிறது. கவிஞர்கள் தொடர்ந்து தரமாக சிந்தித்து ஹைக்கூ மற்றும் அதன் வகைமைக் கவிதைகளை எழுதி வாருங்கள். வரவேற்கிறோம்.  வாசகர்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.

மலர்வனம் 8

ஹைக்கூ ஷர்ஜிலா ஃபர்வின் மழைத்துளிகளை சுமந்து கொண்டிருக்கும் கார்காலச் சிலந்தி வலை. இலையுதிர்காலக் கிளை தண்டுகளெல்லாம் மின்னுகிறது வைகறைப் பனி. வானத்தில் நாற்று நட கால்களைப் கவ்விப் பிடிக்கும் சேற்று வயல். நனைந்த சாளரக்கம்பிகளில் தொங்கும் அரை நீள்வட்டகளுக்குள் முன்பனிச் சூரியன்கள். பாய்மரப்படகு பயணம் செய்கிறது இளைப்பாரும் பறவை. மரத்தின் மேல் நீந்த குளத்தில் விலகிச் செல்கிறது நிலவு அஸ்தமனமாகும் சூரியனை கூறு போடும் மரக்கிளை தொங்கும் மழைத்துளி வடிந்து Read more

மலர்வனம் 7

ஹைக்கூ வஃபீரா வஃபி 01.தாவும் குரங்குநதியில் தலைமுழுகி எழும்மரக்கிளை 02.நண்பகல் வேளைசக்கரங்களிடை சிக்கித் தவிக்கும்வண்டி நிழல்  03.உயர்ந்த பாறைஓய்வெடுக்க முடியாமல் திரும்பும்கடலலைகள்.  04.காலை வெயில்யன்னல் திரையில் ஆடும்பூனையின் நிழல்.  05.குறி வைக்கும் கவண்சட்டென நகர்ந்து மறையும்மாலைச் சூரியன். 06.இலையுதிர்க்காலம்மரக்கிளை எங்கும் பூத்திருக்கும்கொக்குக் கூட்டம். 07.கொட்டும் அருவிகற்பாறையில் துவைக்கப் படும்பௌர்ணமி நிலவு 08.குளக்கரையில் முதியவர்கூடவே நடை பயிலும்ஒற்றை நாரை. 09.ஆற்றோரத் தென்னைஅங்குமிங்குமாய் நடை பயிலும்தென்னங்கீற்றின் நிழல். 10.கொள்ளை போன மணல்தேடி ஊருக்குள் Read more

மலர்வனம் 6

தன்முனை ஜென்ஸி நெஞ்சொடு கிளத்தல் புத்தக அந்தாதி 1. சிரிக்க. வைத்தவர்களை மறந்து விட்டு அழ. வைத்தவர்களை – ஏன் நினைத்துக் கொண்டிருக்கிறாய்..? 2. மனைவி மக்களைப் பேணுதல் மனங் கொள்ளா இன்பம். பணம் எனும் பெருவலை பாடாய் படுத்துகிறது… 3. உன் வீட்டுப் பூட்டுக்கு விசுவாசம் உண்டு – நீயேன் அடுத்த. வீட்டு சாவியை ஆசையோடு பார்க்கிறாய்..? 4. வெள்ளிக் காசுகளின் பளபளப்பில் மயங்கி விடாதே – அது Read more

மலர்வனம் 5

சீர்க்கூ… தமிழ் தம்பி 1. அம்மா அன்பின் ஆலயம் 2. ஆடு நிச்சயம் அறுக்கப்படும் 3. இலை சுவாசிக்க சுவாசிக்கிறோம் 4. ஈ ஓய்வில்லா இடைத்தரகர் 5. உரல் குத்தினாலும் கோணாதவர் 6. ஊஞ்சல் குழந்தையாக்கும் தந்திரன் 7. எருது விவசாயின் தோழன் 8. ஏணி ஏற்றுபவனும் இறக்குபவனும் 9. ஐவர் பாண்டவர் வம்சம் 10. ஒட்டகம் பாலைவனப் படகு 11. ஔவை சிறுவனிடம் கற்றவள். 12. ஃ கேடயத்தின் Read more