ஹைக்கூ

ஷர்ஜிலா ஃபர்வின்


  1. மழைத்துளிகளை
    சுமந்து கொண்டிருக்கும்
    கார்காலச் சிலந்தி வலை.

  2. இலையுதிர்காலக் கிளை
    தண்டுகளெல்லாம் மின்னுகிறது
    வைகறைப் பனி.

  3. வானத்தில் நாற்று நட
    கால்களைப் கவ்விப் பிடிக்கும்
    சேற்று வயல்.

  4. நனைந்த சாளரக்கம்பிகளில்
    தொங்கும் அரை நீள்வட்டகளுக்குள்
    முன்பனிச் சூரியன்கள்.

  5. பாய்மரப்படகு
    பயணம் செய்கிறது
    இளைப்பாரும் பறவை.

  6. மரத்தின் மேல் நீந்த
    குளத்தில் விலகிச் செல்கிறது
    நிலவு

  7. அஸ்தமனமாகும்
    சூரியனை கூறு போடும்
    மரக்கிளை

  8. தொங்கும் மழைத்துளி
    வடிந்து விட போகின்றது
    சூரியன்

  9. சூரியனை
    சுமந்து கொண்டு
    மழைக்கால இலை

  10. தடையுத்தரவுக்
    காலத்தறியில் புதிதாய் நெய்த
    சிலந்தி வலை

  1. சாளரக் கம்பிகளுக்கிடையே
    பாதி தான் தெரிகிறது
    தெருவோரம் பூத்த மலர்

  2. மூங்கில் காட்டிற்குள்
    இடைவெளி தேடியலையும்
    சூரிய ஓளி

  3. சிறகுகளை படபடக்க
    மறந்து விடுகிறதுதேனருந்தும் பட்டாம்பூச்சி

  4. மழைக்கால
    மின்கம்பிகளில் நீர் குடிக்கின்றன
    சிட்டுக் குருவிகள்

  5. தரைக்கு மேல் வேர்கள்
    நீண்டு படர்ந்திருக்கின்றன
    இளையுதிர்ந்த மரத்தின் நிழல்

  6. இலையுதிர்ந்த மரத்தில்
    குறுக்கும் நெடுக்குமாக
    சிலுவைகள்

  7. காற்றுக் குமிழுக்குள்
    சிறைப்பட்டும் வானில் பறக்கிறது
    கோள வானவில்

  8. நுரைப்பூக்களை அள்ளுகிறேன்
    கைகளுக்குள் சிக்குகிறது
    கடல்

  9. எரிந்த காட்டின் கதையை
    தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறது
    கூடிழந்த பறவையின் இறகு

  10. அடித்த காற்றில்
    கொஞ்சமும் நகரவேயில்லை
    பதிந்த இலையின் தடம்
Categories: ஹைக்கூ

3 Comments

Kannikovil Raja · ஜூலை 26, 2020 at 4 h 32 min

மேற்கண்ட கவிதைகள் சுண்டக்காய்ச்சிய பாலாக இருக்கின்றன. பல கவிதைகள் எளிதாய் மனதில் நுழைந்து சிம்மாசனமிடுகின்றன. வாழ்த்துகிறேன்

Kannikovil Raja · ஜூலை 26, 2020 at 4 h 34 min

சுண்டக்காய்ச்சிய பாவாய் மனதில் நுழையும் கவிதைகள். வாழ்துதுகிறேன்

sarjiya · செப்டம்பர் 1, 2020 at 20 h 26 min

மிக்க நன்றிகள் ஐயா…மனம் நிறைந்த நன்றிகள் …🌻🌻🌻🌻
Happy

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மின்னிதழ்

ஹைக்கூ திண்ணை 13

ஹைக்கூ திண்ணை செப்டம்பர் / ஒக்டோபர் மின்னிதழைத் தொகுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். இந்தப் பெறுமதியான வாய்ப்பை வழங்கிய கவிச்சுடர் கல்யாணசுந்தரம் ஐயா அவர்களுக்கு முதற்கண் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன். ஹைக்கூ என்றால் என்ன, அதை விளங்கிக் கொண்டு அதன் விதிமுறைகள் பற்றி அறிந்து அதன்படி எழுத எல்லோரும் முனைகின்றார்களா என்பது கேள்விக்குறியே. சிலர் இலக்கண விதிமுறைக்கேற்ப ஹைக்கூ கவிதைகளை எழுதுகின்றனர். ஆனாலும் சிலர் இலக்கண விதிகளைக் கொஞ்சம் மீறிப் புதுமையாக, வித்தியாசமாக எழுதுபவர்களாக இருக்கிறார்கள்...

மின்னிதழ்

நிறைய சிந்தியுங்கள் ஹைக்கூ பிறக்கும்

ஹைக்கூ கவிதைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதில் குழப்பம் வருவதில் அர்த்தமில்லை அவசியமில்லை தேவையுமில்லை. வாழ்ந்த ஹைக்கூ முன்னோடிகள் கவிக்கோ அப்துல் ரகுமான் தி. லிலாவதி, கவிஞர் மித்ரா, நிர்மலா சுரேஷ் போன்றவர்களின் கவிதை களைப் பாடமாக படியுங்கள். நாம் வாழும் காலத்தில் இருக்கின்ற தமிழக மூத்தக் கவிஞர்கள் கவிஞர் அமுதபாரதி கவிஞர் ஈரோடு தமிழன்பன் கவிஞர் அறிவுமதி கவிச்சுடர் கா. ந. கல்யாண சுந்தரம் கவிஞர் அமரன் கவிஞர் வே. புகழேந்தி கவிஞர் அனுராஜ் கவிஞர் இளையபாரதி கந்தகம் பூக்கள் இவர்களின் கவிதைகளைப் படித்து நுணுக்கங்களை கற்றுக் கொள்ளுங்கள்.

மின்னிதழ்

ஹைக்கூ திண்ணை 9

வாசம் புதிது வண்ணம் புதிது மு.முருகேஷ் தமிழ்ப் பண்பாட்டு நடைமுறைகளில் பானம் அருந்துதல், தாம்பூலம் தரித்தல், ஒன்று சேர்ந்து உணவு உட்கொள்ளுதல் போன்றவை இருப்பதைப் போலவே, ஜப்பானும் தேநீர் விருந்தினைத் தனக்கான மரபாக்கிக் கொண்டது. கி.பி. 6-ஆம் நூற்றாண்டில் சீனாவில் தேநீர் அருந்தும் வழக்கம் தொடங்கி, ஹிய்யான் காலத்தில் ஜப்பானுக்கு அறிமுகமானது. ‘தேநீர்ப் பண்பாட்டின் தந்தை’ என அழைக்கப்பட்ட ஜப்பானிய ஜென் குரு இசாய் (கி.பி.1141-1215) தேயிலையை மூலிகையெனக் கருதி, அதன் மருத்துவக் குணங்களை நூலாக எழுதினார். ஜென் குருவான தாகுவான் (கி.பி.1573-1645), தேநீர்க் கோட்டை உருவாக்கினார். அதில் - ‘தேநீர் முதல் கோப்பை, தொண்டையையும் உதடுகளையும் நனைக்கும்; இரண்டாவது கோப்பை, தனிமையைக் கலைக்கும்; மூன்றாவது கோப்பை ஆழ்மனத்தைத் தொடும்’ என்று கவித்துவத்தோடு குறிப்பிட்டார்.