விறகுவெட்டி

– கே.எம். சுந்தர் ஸ்டீபன் அண்ணன் வீட்டில் விறகு வாங்காமல் மரத் துண்டுகளாக வாங்கி உடைத்துக் கொள்வார்கள். 20 பேர் கொண்ட குடும்பத்தின் வரவு சிலவுகள் 40 வருடங்களுக்கு முன்னர் எப்படி இருந்திருக்க முடியும் என்பது இப்போது புரிகிறது. மர முண்டுகள் வந்து இறங்கியவுடன் 60 வயதுக்கும் சற்று அதிகமான “கருப்பசாமி”யும் அடுத்த நாள் காலையில் அதிகாலையில் தன்னுடைய சரக் புரக் செருப்புகளோடு வந்து விடுவான். அவனுடைய கெட்டித் தோல் Read more

மரண விழிம்பில் நான்

எழுதுகிறேன், மரணத்தை தழுவும் முன்; இதுவே கடைசி பதிவாகவும் எனது மரண ஓலையாகவும்……!! முகநூல்! இன்றைக்கிது உலகெங்கும் பரவி உள்ள ஓர் உன்னத, அதேசமயம் எளிய ஊடகம்…! இதுதான் இன்று என் உயிரை குடிக்க காரணமாகிறது…!! ” … நான் முகநூலுக்குள் நுழைகிறேன்(அழைத்து வரப்படுகிறேன்) முதற்முதல் அனுபவம் எனக்கு! அதுவரை கேள்வி-ஞானம் மட்டுமே இந்த முகநூல் பற்றிய பரிசயம். விஞ்ஞான வளர்ச்சி; இது கொஞ்சம் வளராமலே இருந்திருக்கலாம்! அல்லது என் Read more

இறைவன் சிரிக்கிறான் !

‘இறைவா இது என்ன புதுமை? உலகையே கபளீகரம் செய்த என்னால் இந்த அற்பக் கோரைப் புல்லை அசைக்க முடியவில்லையே! இதன் மர்மமென்ன? எல்லாச் சக்தியிலும் பார்க்க என் பலமே மேலென்று எண்ணிக்கொண்டிருந்த எனக்கு ஏன் இந்தத் தோல்வி? என் சக்தியில் என்ன குறைபாடு?’ என்று புயல் கேட்டு அமைதியடைந்து அடங்கிவிட்டது.

எங்கும் நிசப்தம். புயலின் கோரத் தாண்டவத்தாலும் அதன் அட்டூழியத்தாலும் அழிந்து கிடந்த அண்டம் அழுதுகொண்டிருந்தது. எல்லாச் சக்திகளுக்கும் மேலான சக்தியான இறைவன், புயலின் பிரார்த்தனையில் நேத்திரங்களைத் திறந்து அண்டத்தைப் பார்த்தான். விரல் நொடிக்கும் நேரம்…

பிள்ளையாரும் பீட்டர் ஜோன்சும்

வேகமாக தன் சாப்பாட்டுக்கூடைக்குள் கையை விட்டு துழாவிக்கொண்டே “நான் இங்க ப்ரேயர் பண்ண வரல” என்று தீர்க்கமாக சொன்னவன் டிபன் பாக்சை வெளியிலெடுத்து மெதுவாக தன் பல் இடுக்கில் வைத்து நெம்பி அதிலிருந்து சில பருக்கைகளைக் கையிலெடுத்து அந்த பிள்ளையார் சிலையைச் சுற்றி இருந்த சின்னச் சின்ன எறும்புப் புற்றுகளுக்கு முன் வைத்துவிட்டு மீண்டும் மாமியிடம் சொன்னான் “கலை இங்க தினமும் சாப்பாடு வைப்பான், இன்னைக்கு வைக்காம விட்டா எறும்பு பாவம்தான? பசிக்குமே,..அதுக்குதான் வந்தேன்”.

பூவும் வேரும்

நீளமான அந்தச் சாலையின் ஒரு ஓரத்தில் மிகப்பெரிய மரம் பரந்து விரிந்து சடைத்து வளர்ந்து நின்றது. அனலாகக் கொதிக்கும், கடும் வெயிலில் போவோர் வருவோர்க்கெல்லாம் களைப்பாறும் தங்குமிடமாக ஒரு கற்பக விருட்சமாக அமைந்திருந்தது அந்த மரம். மரத்தில் மலர்ந்திருந்த பூக்கள் அழகாகவும் நல்ல நறுமணத்தையும் தந்தது. மலர்களைச் சுற்றி தேனீக்களும் வண்டுகளும் ரீங்காரமிட்டு, வலம் வந்தன. மரத்தின் கீழ் இளைப்பாறும் வழி போக்கர்கள் பூவின் அழகையும் அதன் நறுமணத்தையும் புகழ்ந்து Read more