உருவகம்

பிள்ளையாரும் பீட்டர் ஜோன்சும்

வேகமாக தன் சாப்பாட்டுக்கூடைக்குள் கையை விட்டு துழாவிக்கொண்டே “நான் இங்க ப்ரேயர் பண்ண வரல” என்று தீர்க்கமாக சொன்னவன் டிபன் பாக்சை வெளியிலெடுத்து மெதுவாக தன் பல் இடுக்கில் வைத்து நெம்பி அதிலிருந்து சில பருக்கைகளைக் கையிலெடுத்து அந்த பிள்ளையார் சிலையைச் சுற்றி இருந்த சின்னச் சின்ன எறும்புப் புற்றுகளுக்கு முன் வைத்துவிட்டு மீண்டும் மாமியிடம் சொன்னான் “கலை இங்க தினமும் சாப்பாடு வைப்பான், இன்னைக்கு வைக்காம விட்டா எறும்பு பாவம்தான? பசிக்குமே,..அதுக்குதான் வந்தேன்”.