உழைப்பாளர்களை உயர்த்துவோம்

I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம் உழைப்பாளர்களை உயர்த்துவோம் உழைப்பே என்றும் உயர்வாகும்! உடலை உறுதி ஆக்கிவிடும்! தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே தளரா உழைப்பின் பலனன்றோ! பிழைக்கும் ஏழை உடல்வருத்திப் பெரிதும் உழைப்பர் பசியுடனே! உழைப்போர் நலனைக் காத்திடுவோம்! உதவி செய்தே ஆதரிப்போம்! வயலில் உழைக்கும் விவசாயி வளத்தைச் சேர்க்கும் உழைப்பாளி! அயரா துழைக்கும் தொழிலாளி ஆற்றல் நாட்டின் உயர்வேதான்! முயற்சி கொண்டே உழைத்திடுவார்! முனைப்பாய்க் கடமை ஆற்றிடுவார்! இயற்கை வளத்தைக் காத்திடவே இணைந்தே Read more

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.

ஹைக்கூ திண்ணை 13

ஹைக்கூ திண்ணை செப்டம்பர் / ஒக்டோபர் மின்னிதழைத் தொகுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். இந்தப் பெறுமதியான வாய்ப்பை வழங்கிய கவிச்சுடர் கல்யாணசுந்தரம் ஐயா அவர்களுக்கு முதற்கண் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன்.

ஹைக்கூ என்றால் என்ன, அதை விளங்கிக் கொண்டு அதன் விதிமுறைகள் பற்றி அறிந்து அதன்படி எழுத எல்லோரும் முனைகின்றார்களா என்பது கேள்விக்குறியே. சிலர் இலக்கண விதிமுறைக்கேற்ப ஹைக்கூ கவிதைகளை எழுதுகின்றனர். ஆனாலும் சிலர் இலக்கண விதிகளைக் கொஞ்சம் மீறிப் புதுமையாக, வித்தியாசமாக எழுதுபவர்களாக இருக்கிறார்கள்…

அண்ணா

வினைச்சொல்லாய் வேதியத்தின் இருள கற்றி விடியல்தர வந்துதித்த கதிர வன்நீ! முனைச்சொல்லாய்க் கூர்படைத்த கூர்ப டைத்துக் குத்தீட்டிச் சொல்வடித்த உலைக்க ளம்நீ! பிணைச்சொல்லாய்ப் பிரிந்துபட்ட தமிழி னத்தைப் பேரினமாய்த் திரளவைத்த பெருந்தி றம்நீ! அணைச்சொல்லாய் அறிவுதேக்கும் நீர்ப்ப ரப்பாய் அருந்தமிழை அகம்முழுக்க அணிந்த வன்நீ! கொடைச்சொல்லாய்க் கலைஞரெனும் நற்றி றத்தைக் காவலனாய்த் தேர்ந்தளித்த கண்ணி யம்நீ! விடைச்சொல்லாய்த் தமிழ்நாடு என்ற பேரை மீட்டெடுத்துத் தாய்மகிழத் தந்த வன்நீ! மடைச்சொல்லாய் மனுவடைத்த Read more

அறிஞர் அண்ணா (விருத்தமலர்கள்)

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற அரசியல் சகாப்தமாக வாழ்ந்து சாதித்து மறைந்த ஒரு மாபெரும் மேதை பேரறிஞர் அண்ணா அவர்கள் என்றால் அது கிஞ்சித்தும் மிகையாகாது. ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து கல்வியாலும் உழைப்பாலும் உயர்ந்து தன் நாவன்மையால் தமிழகமக்களைக் கட்டிப்போட்டு, தமிழ் நாட்டின் தலையெழுத்தை மாற்றிய பெருமை அண்ணா அவர்களுக்கே உண்டு.. சுதந்திரஇந்தியாவில் பின்னாளில் அரசியலில் பல மாற்றங்கள் ஏற்படக் காரணமாக இருந்தவர் அண்ணா. “அண்ணா அண்ணா” என்று அண்ணா Read more

அருள் வாக்கியே! அப்துல்காதிரே!

அருள் வாக்கியே அப்துல் காதிரே! திருப்புகழ் பாடிப் புகழ்சேர்த்த மெய்ஞ்ஞானியே! வெண்பா வினால் விளக்கேற்றியே விந்தைகள் தான்செய்த இறைநேசரே! (அருள்) எரியென்றே நீபாடித் திரியேற்றி னாய் அரியணையில் அணையென்றே ஒளிபோக் கினாய்! சிறுவயதில் போட்டிகளில் திறம்காட் டினாய் யாழ்ப்பாணச் சங்கனென்றும் பெயரீட்டி னாய்! (அருள்) போப்பிட்டி மண்ணீன்ற புகழ் மைந்தனே! யாப்போதிப் பாதந்த  பாமைந்தனே! திருப்பத்தூர் பூர்வீகத் திருவாளனே! அருள்பெற்ற ஆத்மீகக் கவிஜோதியே! (அருள்) பட்டங்கள் பலபெற்ற மாமேதையே! முப்பது Read more

நிறைய சிந்தியுங்கள் ஹைக்கூ பிறக்கும்

ஹைக்கூ கவிதைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதில் குழப்பம் வருவதில் அர்த்தமில்லை அவசியமில்லை தேவையுமில்லை. வாழ்ந்த ஹைக்கூ முன்னோடிகள் கவிக்கோ அப்துல் ரகுமான் தி. லிலாவதி, கவிஞர் மித்ரா, நிர்மலா சுரேஷ் போன்றவர்களின் கவிதை களைப் பாடமாக படியுங்கள். நாம் வாழும் காலத்தில் இருக்கின்ற தமிழக மூத்தக் கவிஞர்கள் கவிஞர் அமுதபாரதி கவிஞர் ஈரோடு தமிழன்பன் கவிஞர் அறிவுமதி கவிச்சுடர்
கா. ந. கல்யாண சுந்தரம் கவிஞர் அமரன் கவிஞர் வே. புகழேந்தி கவிஞர் அனுராஜ் கவிஞர் இளையபாரதி கந்தகம் பூக்கள் இவர்களின் கவிதைகளைப் படித்து நுணுக்கங்களை கற்றுக் கொள்ளுங்கள்.

சமகால கவிஞர்கள்

தமிழ்நெஞ்சம் பேசுகிறது வணக்கம் எங்களுடைய விருப்பமெல்லாம் உலகத்தமிழ் இளம் எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களை ஒன்றிணைத்து அவர்களுக்குக் களம் அமைத்துத் தந்து, உலகத் தமிழர்களுக்கு அவர்களை அறிமுகம் செய்வதே ஆகும். அதுவே தமிழ்நெஞ்சத்தின் நோக்கமும் ஆகும். அந்த வகையில் நேர்காணல் வழியாக அறிமுகம் செய்து வருகிறோம். எழுத்தார்வம் உள்ளவர்களின் ஆக்கங்களைப் பெற்று இதழில் இடம்பெறச் செய்து அவர்களை செம்மைப் படுத்தும் பொருட்டு சிறப்பு செய்கிறோம். அந்தப் பார்வையில் நமது இதழ்குழு செயலர் Read more

காதல் கவித்துளிகள்

  காதல் கவித்துளிகள் பிப்ரவரி 2022 இதழுடன் இணைப்பு காதல் காதல் என்று சொல்லும் போதே மனத்துள் ஒரு உற்சாகம் பிறக்கும். ஒரு உத்வேகத்தைத் தரும் மந்திரச்சொல் காதல். காதல் அனுபவம் எல்லா மனிதருக்குள்ளும் இருக்கும். இதனைக் கடக்காதவர் எவரும் இருக்க முடியாது. காதல் யார்மீது வேண்டுமானாலும் வரலாம்; எதன் மீது வேண்டுமானாலும் வரலாம். ஆசைப்பட்ட பொருள் அல்லது ஆசைப்பட்ட மனிதர் தன் வாழ்க்கையில் கிடைத்துவிட்டால் அதைவிடப் பெரிய இன்பம் Read more