நூலினை பதிவிறக்கம் (download) செய்ய மேற்காணும் நூல் அட்டைப்படத்தில் டச் அல்லது கிளிக் செய்யவும்.

 

வணக்கம் நண்பர்களே

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது. நிலாமுற்றத்தில் மீண்டும் மரபுக்கவிதைப் பயிற்சியைத் தொடங்கியபோது கலந்து கொண்ட பாவலர்களின் எண்ணிக்கையே ஒரு புத்துணர்ச்சியைத் தந்தது. மரபின்மேல் அவர்கள் வைத்துள்ள பற்றையும் நம்பிக்கையையும் காட்டும்விதமாக அது அமைந்தது. அன்பு என்ற தலைப்பின்கீழ் எழுதப்பட்ட 136 கவிஞர்களின் கவிதைத் தொகுப்பே இது. அன்பு குறித்த ஒரு கவிதைக் கதம்பம் இது. படிக்கப் படிக்கத் தேனூறும். படித்து முடித்தபின் வியப்பூறும் விதமாக அமைந்துள்ள இத்தொகுப்பை ஐயா தமிழ்நெஞ்சம் அமின் அவர்கள் மிக அழகாக வடிவமைத்துள்ளார்கள்.

இராம வேல்முருகன் வலங்கைமான்


1 Comment

நிறைமதி நீலமேகம், பெண்ணாடம் . · டிசம்பர் 31, 2022 at 16 h 11 min

இனிய வணக்கம், மிகச் சிறப்புங்க, அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மின்னூல்

என்றும் வாழும் பாரதியார்

வலங்கையார் தொகுப்பும் வாழ்க வாய்த்தநற் கவிகள் வாழ்க கலங்கரை விளக்கம் போலக் கைகளில் நூலும் வாழ்க பலத்துடன் ஒருங்கி ணைந்தப் பாவலர் கூட்டம் வாழ்க நலத்துடன் தமிழின் ஊடே நாளெல்லாம் வாழ்க வாழ்க தமிழ்நெஞ்சம் அமின்

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.

மரபுக் கவிதை

அண்ணா

வினைச்சொல்லாய் வேதியத்தின் இருள கற்றி
விடியல்தர வந்துதித்த கதிர வன்நீ!
முனைச்சொல்லாய்க் கூர்படைத்த கூர்ப டைத்துக்
குத்தீட்டிச் சொல்வடித்த உலைக்க ளம்நீ!
பிணைச்சொல்லாய்ப் பிரிந்துபட்ட தமிழி னத்தைப்
பேரினமாய்த் திரளவைத்த பெருந்தி றம்நீ!

 » Read more about: அண்ணா  »