மாங்காய் பருவத்தில், அருண் தனித்திருந்த மேலுமொரு நாள் தொடங்கியது

மாங்காய் பருவத்தில், அருண் தனித்திருந்த மேலுமொரு நாள் தொடங்கியது  சிங்களச் சிறுகதை – தக்‌ஷிலா ஸ்வர்ணமாலி தமிழில் – எம். ரிஷான் ஷெரீப் “மஞ்சு சொல்றான் அவனுக்கு என்னோட சுருண்ட கூந்தல் பிடிக்கலையாம். ஸ்ட்ரைட் பண்ணிக்கட்டுமாம்.” “நீ எதுக்கு உனக்கு இயற்கையா அமைஞ்ச கூந்தலை இன்னொருத்தருக்காக மாத்திக்கணும்? மஞ்சுவைக் கை விட்டுட்டு சுருண்ட கூந்தலை விரும்புற ஒருத்தரைத் தேடிக்கோ. ஸ்ட்ரைட் கூந்தலிருக்குற ஒரு பொம்பளையைத் தேடிக்கோன்னு மஞ்சுக்கிட்டயும் சொல்லு.” “பைத்தியமா அருண்? Read more

கவிதை: விரதம்

தெலுங்கில் எழுதியவர்: உஷா துரகா காருக்குக் குறுக்கே வந்தவனை வாய் வலிக்கத் திட்டிய அரைமணிக்கு அன்று மௌன விரதம் இருப்பது நினைவு வந்தது இரண்டாவது குலாப்ஜாமூன் தொண்டைக்குள் இறங்கும்போது அன்று உபவாச தீட்சை இருப்பது நினைவு வந்தது ஹாய்…குட் மார்னிங்.. மலர்ந்து சிரித்து சக உத்யோகியை கை குலுக்கிய மறு நிமிடம் அவள் மீது கோபத்தில் நேற்று முதல் பேசாமல் இருப்பது நினைவு வந்தது நான் நோற்கும் விரதமெல்லாம் ஒரு Read more

கண்ணாடி

கண்ணாடி Mirror மூலம்: சில்வியா பிளாத் மொழியாக்கம்: தாரா கணேசன் நான் வெள்ளியின் துல்லியமானவள் எவ்வித முன்புனைவுகளும் அற்றவள் காண்பதையெல்லாம் உடனுக்குடன் விழுங்குபவள் காதலின் மூடுபனியோ அன்றி வெறுப்போ இன்றி கொடூரம் அற்றவளாய், உண்மையானவளாய் மட்டும் இருக்கிறேன் அந்தச் சிறிய கடவுளின் கண்ணென நான்கு மூலைகளையும் அளந்தபடி பல நேரங்களில் நான் எதிர் சுவற்றை தியானிக்கிறேன் அது இளஞ்சிவப்பாய் புள்ளிகள் நிறைந்திருக்கிறது வெகுநேரம் நான் அதனை நோக்கியபடியே இருந்திருக்கிறேன் அது Read more

என்றாலும் நான் எழுவேன்!

கசப்பான திரிபுற்ற பொய்களைப் பூசி வரலாற்றில் கடைநிலையில் என்னை நீ எழுதலாம்; அழுக்குக்குள் தோயும்படி அழுத்தமாய் மிதிக்கலாம் என்றாலும் நான் எழுவேன், சிறு புழுதியைப் போல! எனது தோற்றமுனை வருத்துகின்றதா? வாட்டமுற்று நீ வருந்துவதேன்? என் வீட்டின் முன்னறை அருகிருந்து முடுக்கிவிடத் தோதான – பல எண்ணெய்க் கிணறுகளை அடையப்பெற்றதுபோல் – நான் நடப்பதைக் கண்டுதானோ? நிலவினைப் போல் பகலவன் போல் – கடலதன் மேலெழும் அலைகளைப் போல் கிளர்ந்தே Read more

எதனினும் அழகிய தேசம் எனது

மதம் நம்மிடையே
விரோதத்தை வளர்க்க எங்களுக்கு கற்றுத்தந்ததில்லை
நாம் இந்தியரே, ஹிந்துஸ்தானமே நமது தாயகம்.

உலகின் மிகப் பழமையான
கிரேக்கம் எகிப்து ரோமானிய
நாகரிகங்கள் எல்லாம்
சுவடேதுமின்றி காணாமல் போனாலும்
எமது சொந்த அடையாளங்கள் மட்டும்
இன்றும் நிலைத்திருக்கின்றன.