தெலுங்கில் எழுதியவர்: உஷா துரகா

காருக்குக் குறுக்கே வந்தவனை
வாய் வலிக்கத் திட்டிய அரைமணிக்கு
அன்று மௌன விரதம் இருப்பது
நினைவு வந்தது

இரண்டாவது குலாப்ஜாமூன்
தொண்டைக்குள் இறங்கும்போது
அன்று உபவாச தீட்சை இருப்பது
நினைவு வந்தது

ஹாய்…குட் மார்னிங்.. மலர்ந்து சிரித்து
சக உத்யோகியை கை குலுக்கிய மறு
நிமிடம் அவள் மீது கோபத்தில்
நேற்று முதல் பேசாமல் இருப்பது
நினைவு வந்தது

நான் நோற்கும் விரதமெல்லாம்
ஒரு வாழ்நாள் தாமதமாவது ஏனோ
தோழி கேட்டாள்
விரதத்தில் ஏதோ குற்றம் போல
எங்களுக்கு ஏதாவது தானம் கொடு சரியாகும்
ஆம்…  கொடுக்கலாம்தான்
ஆனால்
மௌன விரதத்தில் எதை தானம் கொடுப்பது
ஒரு சில நிசப்த மணித் துளிகள்  தவிர!

 


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.

புதுக் கவிதை

காதல் கவித்துளிகள்

 

காதல் கவித்துளிகள்

பிப்ரவரி 2022 இதழுடன் இணைப்பு

காதல்

காதல் என்று சொல்லும் போதே மனத்துள் ஒரு உற்சாகம் பிறக்கும். ஒரு உத்வேகத்தைத் தரும் மந்திரச்சொல் காதல்.

 » Read more about: காதல் கவித்துளிகள்  »

புதுக் கவிதை

யாருக்காக…

போலியான மனிதர்களோடு வாழ்ந்து பழக்கப்பட்டதனால் உண்மையானவர்கள் யாரென்று கூட உன்னால் இனங்காண முடியாமலே போய் விடுகிறது நீ யாருக்காக புன்னகைத்துக் கொண்டிருந்தாயோ அவர்கள் யாருக்காகவோ வாழப் போய் விட்டார்கள்