காதல் கவித்துளிகள்

பிப்ரவரி 2022 இதழுடன் இணைப்பு

காதல்

காதல் என்று சொல்லும் போதே மனத்துள் ஒரு உற்சாகம் பிறக்கும். ஒரு உத்வேகத்தைத் தரும் மந்திரச்சொல் காதல். காதல் அனுபவம் எல்லா மனிதருக்குள்ளும் இருக்கும். இதனைக் கடக்காதவர் எவரும் இருக்க முடியாது. காதல் யார்மீது வேண்டுமானாலும் வரலாம்; எதன் மீது வேண்டுமானாலும் வரலாம். ஆசைப்பட்ட பொருள் அல்லது ஆசைப்பட்ட மனிதர் தன் வாழ்க்கையில் கிடைத்துவிட்டால் அதைவிடப் பெரிய இன்பம் இவ்வுலகில் எதுவும் இருக்காது.

காதலும் வீரமும்

காதல் தமிழர்களின் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்தது. தமிழரின் பண்பாட்டுடன் இரண்டறக் கலந்த ஒன்று இக் காதல். காதலும் வீரமும் தமிழரின் இரண்டு கண்கள் என்பதுண்டு. சங்ககாலப் பாடல்களிலும் அகநானூறு புறநானூறு என்று காதலையும் வீரத்தையும் பாடியவர்கள் நமது முன்னோர். குறைந்த அடிகளைக் கொண்டு காதல் கருத்துகளை காதல் நிகழ்வுகளை, குறுந்தொகையாக்கி மகிழ்ந்தவர்கள் தமிழரே நமது இரத்தத்திலேயே கலந்த காதல் உணர்வு இப்போது மட்டும் இல்லாமலா போகும்? இன்றைய இலக்கியங்கள், பாடல்கள், கவிதைகள், திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்கள் அனைத்திலும் முக்கியப் பங்காற்றுவது காதல் என்றால் அது மிகையாகாது.

காதலும் கவிஞர்களும்

யாருக்கெல்லாம் காதல் கவிதை எழுதத்தெரியும்? ஒரு நாலுவரி மட்டும் எழுதுங்கள் பார்க்கலாம்என்ற ஒற்றை அறிவிப்புக்கு நூற்றுக்கும் மேற்பட்ட கவிதைகள் வரத்தொடங்கிவிட்டன. பார்வையிட்டு மாளமுடியாமல் என்னைத் திக்குமுக்காட வைத்துவிட்டனர் கவியுலக நண்பர்கள்.

100 கவிஞர்களின் கவி வரிகளை மட்டும் நூலாகத் தந்திருக்கிறோம். படித்து கருத்துகளைப் பகிரவும். நன்றி

கீழுள்ள படத்தில் டச் அல்லது கிளிக் செய்து நூலினை தரவிறக்கம் செய்யலாம்.

 


4 Comments

ப.வெங்கட்ரமணன் · பிப்ரவரி 1, 2022 at 2 h 49 min

சிறப்பு

Dr.Devi · பிப்ரவரி 1, 2022 at 4 h 54 min

காந்தவிசை ஈர்ப்பு கண்களிலே
ஈர்த்தலின் விழுதல் இதயத்திலே
விழுதல் என்பதே விதியாக
எண்பதைக் கடந்தும் காதலாளுமே.

Jayanthi Sundaram · பிப்ரவரி 3, 2022 at 10 h 34 min

உண்மையை சொல்கிறேன். “தமிழ்நெஞ்சம்” தமிழுக்கு செய்யும் தொண்டுக்கு வார்த்தைகள் தான் கிடைக்குமா என்ன? 100 கவிதையும் படித்தேன். எப்படி இவ்வளவு அழகாக தெரிவு செய்திருக்கின்றனர். எவ்வளவு வெளிப்பாடு, தமிழால் காதல் அன்றோ பெருமை அடைகிறது. தமிழ் தரணியை வென்று கொண்டே இருக்கும். வாழ்த்துக்கள் தமிழ் நெஞ்சத்தின் தொண் டுக்கு. ❤❤❤❤❤❤❤❤❤🌹🌹🌹👍👍👍

Raju Arockiasamy · பிப்ரவரி 4, 2022 at 14 h 56 min

ஆகச்சிறந்த ஆளுமைகளிடையே என் காதலும்… வாழ்க காதல்… சிறப்பான தொகுப்பு…எதிர்பார்க்கா பெருமை…உழைத்த அனைவருக்கும் என் அருமை வணக்கங்கள்!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

நேர்காணல்

சோழவந்தான் கவிச்சிங்கம்…

மதுரை என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது தமிழ். தமிழின்றி மதுரையில்லை; மதுரையின்றித் தமிழின் வரலாற்றை எழுதிவிட முடியாது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சங்கம் வைத்து நம்மொழியை வளர்த்தவர்கள் மதுரை மக்கள். இன்றும் பல்வேறு பெயர்களில் சங்கம் வைத்து , அறக்கட்டளை வைத்து, மன்றங்கள் வைத்து, புலனக்குழு முகநூல்குழுக்கள் வைத்து மொழியை வளர்த்துவரும் மதுரையில் அதன்பெயரிலேயே தமிழ்மதுரை அறக்கட்டளை எனும் பெயரில் ஒரு அறக்கட்டளை வைத்து , மொழிவளர்க்கும் சான்றோர்களுக்குப் விருது வழங்கி , பள்ளி கல்லூரிகளுக்குச் சென்று தமிழ்ப்பற்றை அதிகப்படுத்தும் பணிகளச் செய்துவரும் ஒருவரே இம்மாதச் சிறப்பு விருந்தினர் ஆவார். ஆம் சித்தார்த் பாண்டியன் எனும் புனைப்பெயருடன் வலம்வரும் தூயதமிழ்ப் பற்றாளர் தமிழ்மதுரை அறக்கட்டளை நிறுவுநர் சோழவந்தான் கவிச்சிங்கம் தங்கபாண்டியன் அவர்களுடன் தமிழ்ச்செம்மல் இராம வேல்முருகன் செய்த நேர்காணல் இதோ..

அறிமுகம்

பன்னூல் எழுத்தாளர்… கவிஞர் மூதூர் முகைதீன்

I மின்னிதழ் I நேர்காணல் I மூதூர் முகைதீன்

மூதூர் மண்ணை பிறப்படமாகக்கொண்ட சர்வதேச புகழ் பெற்ற கவிஞரும், பன்னூல் எழுத்தாளுமான மூதூர் முகைதீன் அவர்களை அறிமுகம் செய்வதில் தமிழ்நெஞ்சம் பெருமிதம் கொள்கின்றது.

 » Read more about: பன்னூல் எழுத்தாளர்… கவிஞர் மூதூர் முகைதீன்  »

நேர்காணல்

கலாபூஷணம் புசல்லாவை இஸ்மாலிஹா ராஜா

I மின்னிதழ் I நேர்காணல் I கலாபூஷணம் புசல்லாவை இஸ்மாலிஹா ராஜா

‘’மலையகத்தில் கற்றவர்கள் அதிகமாக காணப்படுவது பெருமைக்குரிய விடயமாகும்’’

மலையகக் கவிஞர், எழுத்தாளர்,

 » Read more about: கலாபூஷணம் புசல்லாவை இஸ்மாலிஹா ராஜா  »