உனக்கு ஏது உறக்கம்.?

தோன்றிய கால முதல் தூண்டாய் மணி விளக்காய் தோன்றிய. தமிழ்த் தாயின் தலைமகனே. குமணன் தலை கொடுக்க முன்வந்தான் நீயோ தன்னையே தமிழுக்கு தந்தாய் புறநானூறு அகநானூறு ஆக மொத்தம் எண்ணூறு என எண்ணிக் கொண்டிருந்தவர்கள் மத்தியில் சங்கத் தமிழின் சங்கதிகளை சரித்திரமாய் சொன்னவன் நீயே மனிதகுலத்தின் போக்கு வரத்திற்கு கோடு கிழித்த வள்ளுவனுக்கு வான் புகழ் கொண்ட சிலை அமைத்தவன் நீயே உரை வீச்சில் உள்ளத்தை உருக வைத்தவனே Read more

உனக்கு ஏது மரணம்.?

தோன்றிப் புகழோடு தோன்றுக என குறள் போற்றும் இலக்கணத்தின் இலக்கியமே. கலைஞர் என்ற நான்கு எழுத்தின் நற்றமிழே. நா அசைந்தால் நாடு அசையும் என்ற எடுத்துக் காட்டாய் வாழ்நதவரே. ஒப்பாரும் மிக்காரும் இல்லாத முத்தமிழின் மூத்த தலைமகனே. இயல், இசை, நாடகதில் பகுத்தறிவு கருத்துக்களை தீட்டியவரே. சர்வாதிகாரத்தில் வாளுக்கு இருந்த வலிமையை ஜனநாயகத்தில் பேனாவுக்கும் உண்டு என்று எழுத்து உலகில் புரட்சி செய்தவனே, சினிமாவில் விசனங்களே வசனங்களாக காட்சி அளித்த Read more

பரிதி

தீப்பிழம்பில் குளித்தெழுந்த தீந்தமிழே! தெள்ளுற்ற தமிழ்நாட்டின் முகவரியான திராவிடமே! தமிழுக்கோர் தொண்டாற்றி கசிந்து கனிந்த பழமே! செங்கதிரோன் சாயலதில் வார்த்தெடுத்த கரிகாலனே! எங்கள் சேது சமுத்திரமே! சாதீயம் பேசி சாக்காடாயிருந்த கூட்டம் சித்தம் தெளிய வந்த சிலப்பதிகாரமே! சீர் மரபினனாம் தமிழனின் சிந்தைக்கு சோறூட்டும் அகல்விளக்கே! அறிவுக்கடலே! ஆரமுதே! பெண் விடுதலைக்காய் குரல் கொடுத்த நளாயினியே! திகட்டாத தமிழால் வீரமுதூட்டிய தென்பாண்டிச் சிங்கமே! வற்றாத காவிரியாய் வளைய வரும் ராஜ Read more

தார்புகழ வாழ்ந்திடுவார் தங்கப்பா

இசைப்பாக்கள் இயற்றுதற்கு இலக்க ணத்தை         இயற்றிட்ட திருமுருகன் வழியில் நின்று திசைமாறிப் போகாமல் திறமை யோடு         தித்திக்கத் தெளிதமிழாம் ஏட்டைத் தந்தார் விசையாகத் தனித்தமிழின் இயக்க மோங்கி         வினையாற்றத் தமிழ்க்குழுவில் பாடு பட்டார் அசைபோட்டே சுவைக்கின்ற சங்கப் பாப்போல்         அரும்பாக்கள் குவித்திட்டார் தங்கப் பாதான்! படைப்பாளி யாய்மட்டும் Read more

தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 06-2018

உனது எழுத்துக்களின் ஊர்வலத்தோடு…. திருக்காட்டுப்பள்ளி பழமார்நேரியில் அருட்சுடர்போல் அவதரித்தவன் நீ… ஆனந்த வயலில் ஆசையெனும் வேதத்தை அறவே துறந்த எழுத்துச்சித்தன் நானே எனக்கொரு போதிமரம் எனும் தத்துவமாய் வாழ்ந்து இரும்புக்குதிரைகளை எதோ ஒரு நதியில் நடக்கவிடாமல் கடற் பாலத்தின் மேல் ஓடவிட்டவன் ! வரலாற்றுச் சான்றுகளின் பின்னணியை ஆய்ந்தாய்ந்து இலக்கியச் சிம்மாசனத்தில் அமர்ந்தவன் நீ ! நிலாக்கால மேகங்களின் நிழல் யுத்தத்தில் தாயுமானவனாய் நீ வருவாய் என காத்திருந்த அறிஞருக்கு Read more

காகிதப் பதிப்பக கண்மணி வாழி !

அஞ்சலி ஆயுதப்பு ரட்சியெலாம் அன்றும் இன்றும்       அகிலத்தில் மாற்றங்கள் செய்ய வில்லை, காகிதப்பு ரட்சியால்தான் கணக்கிலா மாற்றம்       காண்கின்றோம் கண்கூடாய் குருதி யின்றி, ஓய்வறியா உழைப்பாளி காகிதம் மனோவோ       உழைத்தபடி உயிர்விட்டார் என்றால் உண்மை வாய்ப்பேச தான்முடியும் வாய்ப்போ இல்லை       வலுவிழந்த உறுப்புகளால் வலிந்து செய்ய. மரபணுவின் கோளாறால் மாற்றம் வந்து   Read more