வாழவைக்கும் காற்றாய் வாவா

எதற்கிந்த சீற்றமுடன் வீசு கின்றாய்         எல்லாமும் அழிப்பதற்கா புயலாய் வந்தாய் பதவியிலே இருப்பவர்கள் நாட்டை யின்று         பாழ்செய்து வளம்சுருட்டிக் கீழே தள்ள மதவெறியர் ஒருபக்கம் எரித்து நிற்க         மனங்களெல்லாம் தன்னலத்தால் அழித்து நிற்க விதவிதமாய்ப் பெயர்களிலே வந்து நீயும்         வீரத்தை யார்புகழ காட்டு கின்றாய்! வழிவழியாய் வரவேற்பு Read more

காமத்தின்  கண்பறிப்போம்

மலராத  மொட்டதனின்  இதழ்கி  ழித்து        மதுவுண்ட   வண்டொன்றைப்  பார்த்த  துண்டா புலராத  இரவுக்குள்  புணர்தல்  போன்று        புரிந்திட்டார்   வன்செயலைக்  கயவர்  சில்லோர் ! வலம்வந்து  வலம்வந்தே   அழகு  மொட்டை        வன்புணர்வில்   சீரழித்தார்   துடிது  டிக்க நிலம்மீதில்   எவ்வுயிரும்  செய்தி  டாத        நீசசெயல்   செய்வதெல்லாம்   மனிதர்  தாமே ! பூக்காத   இளமானைக்   கொம்பு  மான்தான் Read more

தார்புகழ வாழ்ந்திடுவார் தங்கப்பா

இசைப்பாக்கள் இயற்றுதற்கு இலக்க ணத்தை         இயற்றிட்ட திருமுருகன் வழியில் நின்று திசைமாறிப் போகாமல் திறமை யோடு         தித்திக்கத் தெளிதமிழாம் ஏட்டைத் தந்தார் விசையாகத் தனித்தமிழின் இயக்க மோங்கி         வினையாற்றத் தமிழ்க்குழுவில் பாடு பட்டார் அசைபோட்டே சுவைக்கின்ற சங்கப் பாப்போல்         அரும்பாக்கள் குவித்திட்டார் தங்கப் பாதான்! படைப்பாளி யாய்மட்டும் Read more

தமிழாய் வாழ்ந்த தண்டமிழ் பாரதி

ஆங்கிலேயன் ஆட்சிசெய்த அடிமை மண்ணில்       அருங்கவிஞர் பாரதிதான் வாழ்ந்தி டாமல் பாங்கான புதுச்சேரி மண்ணில் வாழ்ந்து       பாரதத்து விடுதலையின் உணர்வை ஏற்றும் தீங்கனலில் கவிதைகளை இயற்றி வந்த       திரைமறைவு செய்தியினை அறிந்த வ.ரா ஓங்குபுகழ் பாரதியைக் காண்ப தற்கே       ஓரிரவு அவரிருந்த வீடு சென்றார்! மூடியுள்ள கதவுதனைத் தட்டும் போது     Read more

என்தேசம் என்சுவாசம்

வளைந்தகோடால் வரைந்துவைத்த படமா நாடு
—– வாழ்க்கையையே தியாகத்தின் வேள்வி யாக்கி
வளையாத முன்னோர்கள் தீப்பி ழம்பால்
—– வார்த்துவைத்த வார்ப்படந்தான் இந்த நாடு!
முளைவிட்டுத் தானாக முளைத்தெ ழுந்த
—– முட்செடியா இந்தநாடு? மானத் தாலே
தலையுடலை விதைகளாக்கிக் குருதி நீரால்
—– தளிர்க்கவைத்த பன்னீர்ப்பூ இந்த நாடு!

ஏழ்மையின் எதிர்பார்ப்பு

குரல்: பாத்திமா பர்சானா வாழ்க்கையிலே அமர்தற்குச் சிறிய வீடு —— வயிறெரிக்கும் பசிதணிக்கக் கொஞ்சம் சோறு தாழ்ந்திடாமல் மானத்தைக் காப்ப தற்குத் —— தகுவுடலை மறைப்பதற்குக் கீழ்மேல் ஆடை வீழ்ந்திடாமல் தலைநிமிர்ந்து நிற்ப தற்கு —— விளங்குகின்ற அடிப்படையாம் இந்த மூன்றே ஏழ்மையிலே தவிக்கின்ற மக்கள் எங்கள் —- – எதிர்பார்ப்பாம் இவைகிடைத்தால் வாழ்வோம் நாங்கள்! பிச்சையாக இலவசங்கள் தேவை யில்லை —— பிறக்கின்ற கருணையதும் தேவை யில்லை முச்சந்தி Read more

புதுமைப்பொங்கல் பொங்கிடுவோம்

கழிக்கின்றோம் பழையவற்றைக் காணவாரீர் எனவழைத்தே விழியெரிய நேயத்தை விளையன்பை எரியவைத்தே கழிவென்றே மனிதத்தைக் கருகவைத்துக் கணியன்தன் வழியடைத்துக் கொளுத்துகின்ற வன்முறையா போகியிங்கே ! சாதிமணி உலையிலிட்டுச் சதிவெறியாம் பாலையூற்றி மோதிபகை வளர்வெல்லம் மொத்தமுமாய் அதிலிட்டு வீதிகளில் குருதிவாடை வீசிடவே மனக்குடத்தில் ஆதிக்கம் பொங்கவைத்தே ஆடுவதா பொங்கலிங்கே ! காடுகளில் உழைப்பவரை கழனிச்சேற்றில் புரள்பவரை ஆடுகளின் மந்தையாக அடித்தட்டில் தாழ்ந்தவராய் மாடுகளைப் போல்விரட்டி மனிதகுலம் தலைகுனிய கேடுகளை விளைவிக்கும் கேளிக்கையாகக் காணும்பொங்கல் Read more

என்ஓட்டம் என்இலக்கு

செந்தமிழே ஆட்சிமொழி; பள்ளி யெல்லாம்         செந்தமிழே கல்விமொழி; தெருவி  லெல்லாம் செந்தமிழே பேச்சுமொழி; வீட்டி லெல்லாம்         செந்தமிழே மழலைமொழி; குவிந்தி ருக்கும் செந்தமிழின் நூல்களெல்லாம் மொழிபெ யர்த்தும்         செந்தமிழில் பிறமொழிநூல் ஆக்கம் சேர்த்தும் எந்தமிழை உலகமொழி ஆக்க லொன்றே         என்இலக்கு என்ஓட்டம் முயல்வேன் செய்வேன்!   மக்களுக்காய் Read more

தமிழாய் வாழ்ந்த தண்டமிழ் பாரதி

ஆங்கிலேயன் ஆட்சிசெய்த அடிமை மண்ணில் —– அருங்கவிஞர் பாரதிதான் வாழ்ந்தி டாமல் பாங்கான புதுச்சேரி மண்ணில் வாழ்ந்து —– பாரதத்து விடுதலையின் உணர்வை ஏற்றும் தீங்கனலில் கவிதைகளை இயற்றி வந்த —– திரைமறைவு செய்தியினை அறிந்த வ.ரா ஓங்குபுகழ் பாரதியைக் காண்ப தற்கே —– ஓரிரவு அவரிருந்த வீடு சென்றார்! மூடியுள்ள கதவுதனைத் தட்டும் போது —– முன்காப்பாய் பாபுஎன்னும் உதவி யாளன் ஓடிவந்து கதவுதனைத் திறந்து கேட்க —– Read more

இழந்து விட்ட கணப்பொழுது

வாய்த்திட்ட இப்பிறவி ; வளர்ந்து நன்றாய் —-வண்டமிழின் புலமைபெற்றுக் கவிதை யாத்து தூய்மையான புகழுடனே உலகம் போற்ற —-துலங்குகின்ற பலநூல்கள் தமிழ்க்க ளித்துச் சேய்நானும் தலைநிமிர்ந்து நின்று நன்றாய் —-செழுமையான வாழ்வினிலே வாழ்வ தெல்லாம் தாய்தந்தை இருமனங்கள் கலந்தொன் றாகித் —-தமைமறந்த கணப்பொழுதின் இழப்பி னாலே ! இழக்கின்ற கணப்பொழுது பலரின் வாழ்வை —-இனிக்கின்ற வாழ்வாக உயர்த்தும் மேலே இழக்கின்ற கணப்பொழுது பலரின் வாழ்வை —-இன்னலுக்கு வழிகாட்டித் தள்ளும் கீழே Read more