மலராத  மொட்டதனின்  இதழ்கி  ழித்து
       மதுவுண்ட   வண்டொன்றைப்  பார்த்த  துண்டா
புலராத  இரவுக்குள்  புணர்தல்  போன்று
       புரிந்திட்டார்   வன்செயலைக்  கயவர்  சில்லோர் !
வலம்வந்து  வலம்வந்தே   அழகு  மொட்டை
       வன்புணர்வில்   சீரழித்தார்   துடிது  டிக்க
நிலம்மீதில்   எவ்வுயிரும்  செய்தி  டாத
       நீசசெயல்   செய்வதெல்லாம்   மனிதர்  தாமே !

பூக்காத   இளமானைக்   கொம்பு  மான்தான்
       புணர்ந்திட்ட   காட்சிதனைக்  கண்ட  துண்டா
தூக்கத்தில்   சுகம்காணும்   இரவுப்  போழ்தில்
       துணைவியுடன்  இணைதல்போல்  இணைந்தார்  புல்லர் !
கூக்குரல்தாம்  எழுமுன்னே   வாயைப்  பொத்திக்
       குற்றுயிராய்   ஆக்கிட்டார்   இளங்கு  ருத்தை
நாக்குடைய  எவ்வுயிரும்   செய்தி  டாத
       நாசசெயல்  செய்வதெல்லாம்   மனிதர்  தாமே !

மயிலிறகைப்  பிய்த்தல்போல்  பிய்த்தெ  றிந்தார்
       மணம்வீசா  மொட்டதனைக்  கசக்கெ  றிந்தார்
வெயிலினிலே  துடித்திட்டப்  புழுவைப்  போல
       வேதனையில்  துடித்தபோதும்  புணர்ந்தெ  றிந்தார் !
குயில்கூவும்  முன்னதனின்   கழுத்த  றுத்துக்
       குருதியிலே   மிதக்கவிட்ட   கொடுங்கோ  லோரைக்
கயிற்றினிலே  கட்டியந்த   உறுப்ப  றுத்துக்
       கதறிடவே   நடுத்தெருவில்  நிறுத்த  வேண்டும் !

(சென்னையில்  சிறுமியைப்  பதினேழு  கயவர்கள் கெடுத்த
கொடுஞ்செய்தியைப்  படித்தால்  எழுந்த  சினக்கவிதை)


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பே என்றும் உயர்வாகும்!
உடலை உறுதி ஆக்கிவிடும்!
தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே
தளரா உழைப்பின் பலனன்றோ!

 » Read more about: உழைப்பாளர்களை உயர்த்துவோம்  »

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

மரபுக் கவிதை

அண்ணா

வினைச்சொல்லாய் வேதியத்தின் இருள கற்றி
விடியல்தர வந்துதித்த கதிர வன்நீ!
முனைச்சொல்லாய்க் கூர்படைத்த கூர்ப டைத்துக்
குத்தீட்டிச் சொல்வடித்த உலைக்க ளம்நீ!
பிணைச்சொல்லாய்ப் பிரிந்துபட்ட தமிழி னத்தைப்
பேரினமாய்த் திரளவைத்த பெருந்தி றம்நீ!

 » Read more about: அண்ணா  »