இலக்கணம்-இலக்கியம்

தமிழ்நெஞ்சம் புகழாரம்

தமிழ்நெஞ்சம் புகழாரம் புத்தகம் பற்றி ஒரு பார்வை...

ஒரு புகழாரத்தைத் தனிப் புத்தமாக பதிக்க வேண்டுமென்றால் அதன் தரம் எப்படி இருக்கும்? இப்படித்தான் இருக்கும் என்கிறது இந்தத் தொகுப்பு. தித்திப்பே திரண்டு வந்து சொற்களுக்குள் புகுந்து கொண்ட திகட்டாத இனிப்பு.நாவூறும் பாக்களின் நற்கோர்வை காரணம் அதன் சொற்கோவை.

 » Read more about: தமிழ்நெஞ்சம் புகழாரம்  »

By Admin, ago
மரபுக் கவிதை

தம்பி… 9

வாழ்வாயே மகிழ்வாக வாழ்த்திடவே பெரியோர்கள் தாழ்வென்ற நிலையில்லை தளராமல் உழைத்திட்டால் ஏழ்மையென்னும் நிலையில்லை ஏற்றத்தைப் பெறுவாயே வீழ்வதெல்லாம் எழுவதற்கே வீறுகொண்டு எழுவாயே.

மரபுக் கவிதை

தம்பி… 8

ஏரோட்டம் இல்லையென்றால் ஏற்றமில்லை செல்வத்தில் தேரோட்டம் ஓடாது தெம்மாங்கும் கேட்காது காரோட்ட வாய்ப்பில்லை கஞ்சிக்கும் ஏமாற்றம் நீரோட்டம் காத்திட்டால் நிச்சயமாய் நன்மையுண்டே.

கவிதை

தம்பி… 7

தொடர் எண் 7.

தலைப்பு : இன்சொல்.

ஊக்கமுடன் வாழ்ந்திடவே உற்றோரும் வாழ்த்திடவே
நீக்கமற எந்நாளும் இன்சொற்கள் பேசிடுவாய்
தாக்கிடுவார் வன்சொற்கள் தாங்கிக்கொள் நற்பண்பால்
வாக்கினிலே மாறாமல் வாழ்ந்திடத்தான் கற்பாயே.

 » Read more about: தம்பி… 7  »

கவிதை

தம்பி… 6

தொடர் எண் 6.

தலைப்பு : வீரம்

வாழ்த்திடவே சாதனைகள் வாழ்நாளில் சாதிப்பாய்
ஏழ்மையினை வெற்றிகொள் ஏறுபோல்நீ வீரம்கொள்
ஆழ்கடலில் விட்டாலும் அஞ்சாமல் வந்துவிடு
வீழ்த்துகின்ற எண்ணத்தை வீறுகொண்டு மாற்றிவிடு.

 » Read more about: தம்பி… 6  »

கவிதை

தம்பி… 5

தொடர் எண் 5.

தலைப்பு : நட்பு.

கொள்வாயே நண்பர்கள் குன்றாத பண்புடனே
உள்ளங்கள் ஒன்றாக ஊர்போற்றும் நட்பினையே
பள்ளங்கள் மேட்டினிலும் பற்றுடனே எந்நாளும்
தள்ளாத மூப்பினிலும் தாங்குகின்ற ஊன்றுகோலாய்.

 » Read more about: தம்பி… 5  »

கவிதை

தம்பி… 4

தொடர் எண் 4.

தலைப்பு : ஏமாறாதே.

மாறாத எண்ணத்தில் மாற்றங்கள் வந்தாலும்
கூறாதே பொய்களையும் கொள்வாயே வாய்மையினை
ஆறாதே சுட்டவடு ஆற்றுவாய் நற்பணிகள்
மீறாதே மூத்தோர்சொல் மேன்மையுற ஏற்பாயே.

 » Read more about: தம்பி… 4  »

கவிதை

தம்பி… 3

தொடர் எண் 3

தலைப்பு : தம்பி நலமா ?

உன்திறனே உன்வாழ்வை உன்னதமாய் சீர்படுத்தும்
என்றேதான் நெஞ்சினிலே இன்றேதான் கொள்வாயே
நன்றேதான் நம்மனத்தில் நல்லெண்ணம் வேண்டுமப்பா
ஒன்றேதான் ஊராக ஓங்கட்டும் நம்வாழ்வே.

 » Read more about: தம்பி… 3  »

கவிதை

தம்பி… 2

குன்றாக நின்றிடவே கோலேச்சி வாழ்வாயே நின்றாடும் சொக்கனவன் நின்வேண்டல் கேட்டருள்வான் சென்றிடுவாய் திக்கெட்டும் சேர்த்திடுவாய் ஞானத்தை பொன்பொருளும் சேர்ப்பாயே பூக்கட்டும் உன்திறனே.

கவிதை

தம்பி… 1

திரும்பித்தான் பார்த்திடுவாய் தீர்வுகளைக் கண்டிடுவாய் இரும்பாக நெஞ்சத்தில் ஏற்றித்தான் வைத்திடுவாய் கரும்பாகப் பேசிடுவாய் காந்தமாக ஈர்த்திடுவாய் துரும்பாக எண்ணாமல் தூணாகத் தாங்குவாயே.