தொடர் எண் 6.

தலைப்பு : வீரம்

வாழ்த்திடவே சாதனைகள் வாழ்நாளில் சாதிப்பாய்
ஏழ்மையினை வெற்றிகொள் ஏறுபோல்நீ வீரம்கொள்
ஆழ்கடலில் விட்டாலும் அஞ்சாமல் வந்துவிடு
வீழ்த்துகின்ற எண்ணத்தை வீறுகொண்டு மாற்றிவிடு.

மாற்றிக்கொள் காலத்தின் மாற்றங்கள் நோக்கிடுவாய்
ஏற்றுக்கொள் வீரத்தை ஏணியாக்கி வாழ்க்கையினில்
வேற்றுமைகள் நீக்கிடவும் வெற்றிகளைப் பற்றிடவும்
போற்றிடவும் உற்றாரும் பொங்கிநீயும் நிற்பாயே.

நிற்பாயே குன்றாக நேர்மையாக வாழ்ந்திடவே
வெற்பாக நீயிருந்தால் வித்தாக மாறிடலாம்
கற்றவழி சென்றிடலாம் கண்ணியமும் காத்திடலாம்
சுற்றத்தார் மேகமாக சூழ்ந்திடவும் நல்வாழ்வே .

நல்வாழ்வாய் நம்கடமை நாட்டிற்குப் போரிடலே
எல்லோரும் வாழ்த்திடுவர் ஏற்றமிகு நற்பணியால்
இல்லத்தைக் காத்திடுவார் இந்நாட்டின் மக்களென்றே
வல்லோனாய் எல்லைகளை வாடாமல் காத்திடவே.

வேற்றுமைகள் வேண்டாமே வேறுபாடு தூக்கியெறி
ஏற்கின்ற நற்பணிகள் இன்னல்கள் தந்தாலும்
கொற்றவனாய் நீதியினைக் கோலோச்சு நித்தமுமே
தூற்றுவோரும் தோள்கொடுப்பார் ஊக்கமுடன் வாழ்ந்திடவே.

 முன்னே செல்ல …. தொடரும் 


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.

மின்னிதழ்

ஹைக்கூ திண்ணை 13

ஹைக்கூ திண்ணை செப்டம்பர் / ஒக்டோபர் மின்னிதழைத் தொகுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். இந்தப் பெறுமதியான வாய்ப்பை வழங்கிய கவிச்சுடர் கல்யாணசுந்தரம் ஐயா அவர்களுக்கு முதற்கண் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன். ஹைக்கூ என்றால் என்ன, அதை விளங்கிக் கொண்டு அதன் விதிமுறைகள் பற்றி அறிந்து அதன்படி எழுத எல்லோரும் முனைகின்றார்களா என்பது கேள்விக்குறியே. சிலர் இலக்கண விதிமுறைக்கேற்ப ஹைக்கூ கவிதைகளை எழுதுகின்றனர். ஆனாலும் சிலர் இலக்கண விதிகளைக் கொஞ்சம் மீறிப் புதுமையாக, வித்தியாசமாக எழுதுபவர்களாக இருக்கிறார்கள்...