தொடர் எண் 5.

தலைப்பு : நட்பு.

கொள்வாயே நண்பர்கள் குன்றாத பண்புடனே
உள்ளங்கள் ஒன்றாக ஊர்போற்றும் நட்பினையே
பள்ளங்கள் மேட்டினிலும் பற்றுடனே எந்நாளும்
தள்ளாத மூப்பினிலும் தாங்குகின்ற ஊன்றுகோலாய்.

ஊன்றுகோலாய் வாழ்க்கையினில் ஒன்றுபட்டு நிற்பீரே
சான்றோராய் நின்றொளிர்க சாதனைகள் செய்திடவே
தோன்றுகின்ற துன்பங்கள் தோல்விகளைத் தந்திடினும்
தேன்போன்றத் தன்மையுடன் தென்றலாக மென்மைபெற்றே.

மென்மையுடன் பேசிட்டால் மேன்மைகளும் பெற்றிடலாம்
நன்மைகளும் கிட்டிடவே நட்பினிலே மேம்படுவாய்
பொன்னாக எண்ணிடுவாய் போற்றுகின்ற பெரியோர்சொல்
ஒன்றுபடு சாதிப்பாய் உற்றதோழன் கரம்கோர்த்தே.

தேனாகப் பேசிடுவார் தீப்பிழம்பாய் நெஞ்சினிலே
வானாகப் போற்றிடுவார் வஞ்சகத்தில் விஞ்சிடுவார்
கோனாக நீயென்பார் குற்றங்கள் நோக்கிடுவார்
தானாக வந்ததையும் தன்னால்தான் வெற்றியென்பார்.

வெற்றியுண்டு நண்பனாலே வேராகத் தாங்குதலால்
பெற்றிடுவாய் ஓங்குபுகழ் பெற்றவர்கள் ஆசியுடன்
சுற்றம்போல் நண்பர்கள் சோர்வினையும் நீக்கிடவே
நற்புகழும் பெற்றிடலாம் நாமணக்க வாழ்த்திடவே.

 முன்னே செல்ல …. தொடரும் 


1 Comment

இமயவரம்பன் · பிப்ரவரி 28, 2021 at 12 h 56 min

‘தேனாக, வானாக, கோனாக….’ – ஓசையின்பம் ஊட்டும் இனிமையான எதுகை; தெளிவுற அறிவுறுத்தும் பாங்கு – மிகவும் சிறப்பாக உள்ளது! படித்தும் பாடியும் மகிழ்ந்தேன்!

இமயவரம்பன்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.

மின்னிதழ்

ஹைக்கூ திண்ணை 13

ஹைக்கூ திண்ணை செப்டம்பர் / ஒக்டோபர் மின்னிதழைத் தொகுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். இந்தப் பெறுமதியான வாய்ப்பை வழங்கிய கவிச்சுடர் கல்யாணசுந்தரம் ஐயா அவர்களுக்கு முதற்கண் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன். ஹைக்கூ என்றால் என்ன, அதை விளங்கிக் கொண்டு அதன் விதிமுறைகள் பற்றி அறிந்து அதன்படி எழுத எல்லோரும் முனைகின்றார்களா என்பது கேள்விக்குறியே. சிலர் இலக்கண விதிமுறைக்கேற்ப ஹைக்கூ கவிதைகளை எழுதுகின்றனர். ஆனாலும் சிலர் இலக்கண விதிகளைக் கொஞ்சம் மீறிப் புதுமையாக, வித்தியாசமாக எழுதுபவர்களாக இருக்கிறார்கள்...