தம்பி… 7
தொடர் எண் 7. தலைப்பு : இன்சொல். ஊக்கமுடன் வாழ்ந்திடவே உற்றோரும் வாழ்த்திடவே நீக்கமற எந்நாளும் இன்சொற்கள் பேசிடுவாய் தாக்கிடுவார் வன்சொற்கள் தாங்கிக்கொள் நற்பண்பால் வாக்கினிலே மாறாமல் வாழ்ந்திடத்தான் கற்பாயே. கற்பாயே நல்நூல்கள் காப்பாயே பண்பாட்டைப் பற்றிடுவாய் சான்றோர்சொல் பாசத்தில் நல்லுறவாய். வற்றாத கல்வியினை வாழ்நாளில் பெற்றால்தான் சொற்சுவையில் வல்லோனாய் சொல்லாட்சிச் செய்திடலாம். செய்யென்றால் நற்செயல்கள் செய்கின்ற நல்தம்பி பொய்யில்லை உன்னிடத்தில் போற்றுகின்ற நல்லோர்கள் தொய்வில்லா உன்செயல்கள் தோல்வியினைக் காணவேண்டாம் பெய்கின்ற நல்மழைபோல் Read more


