தொடர் எண் 2.

தலைப்பு : கற்க.

சொல்திறனும் சொக்கவைக்கும் சொல்லாட்சிப் பெற்றிடுவாய்
இல்லார்க்கு எந்நாளும் இல்லையென்று சொல்லாதே.
அல்லல்கள் சூழ்ந்திட்டால் ஆற்றலோடு வாழ்ந்திடுவாய்
நல்லோர்கள் போற்றிடவே நல்வழியில் செல்வாயே.

ஏற்றத்தைப் பெற்றிடத்தான் ஏணியாக ஆசிரியர்
கற்றிடவே பள்ளிக்குக் காலத்தில் சென்றிடுவாய்
உற்றதுணை நண்பர்கள் ஒன்றாகக் கூடுங்கள்
பற்றுதலும் கொள்வாயே பாடங்கள் கற்பதிலே.

கற்பதிலே நன்றாக காத்திடுவாய் நல்லொழுக்கம்
ஏற்றிடுவாய் கற்பனவும் எந்நாளும் நின்றிடுவாய்
பற்றினையே தாய்மொழியில் பாராட்டும் பெற்றிடுவாய்
வெற்றிகளும் கொள்வாயே வேங்கையென நிற்பாயே.

நில்லென்றால் பெற்றோர்கள் நின்றிடுவாய்க் கீழ்ப்படிந்து
சொல்லென்றால் உன்சொல்லே சொக்கிடவே வைக்கட்டும்.
நெல்மணிகள் கொத்தாக நிற்பதுபோல் நின்றிடுவாய்
வெல்லட்டும் உன்வாக்கு செல்வாக்கும் குன்றெனவே.

குன்றாக நின்றிடவே கோலேச்சி வாழ்வாயே
நின்றாடும் சொக்கனவன் நின்வேண்டல் கேட்டருள்வான்
சென்றிடுவாய் திக்கெட்டும் சேர்த்திடுவாய் ஞானத்தை
பொன்பொருளும் சேர்ப்பாயே பூக்கட்டும் உன்திறனே.

 முன்னே செல்ல …. தொடரும் 


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.

மின்னிதழ்

ஹைக்கூ திண்ணை 13

ஹைக்கூ திண்ணை செப்டம்பர் / ஒக்டோபர் மின்னிதழைத் தொகுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். இந்தப் பெறுமதியான வாய்ப்பை வழங்கிய கவிச்சுடர் கல்யாணசுந்தரம் ஐயா அவர்களுக்கு முதற்கண் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன். ஹைக்கூ என்றால் என்ன, அதை விளங்கிக் கொண்டு அதன் விதிமுறைகள் பற்றி அறிந்து அதன்படி எழுத எல்லோரும் முனைகின்றார்களா என்பது கேள்விக்குறியே. சிலர் இலக்கண விதிமுறைக்கேற்ப ஹைக்கூ கவிதைகளை எழுதுகின்றனர். ஆனாலும் சிலர் இலக்கண விதிகளைக் கொஞ்சம் மீறிப் புதுமையாக, வித்தியாசமாக எழுதுபவர்களாக இருக்கிறார்கள்...