தம்பி…
தொடர் எண் 1.

திரும்பித்தான் பார்த்திடுவாய் தீர்வுகளைக் கண்டிடுவாய்
இரும்பாக நெஞ்சத்தில் ஏற்றித்தான் வைத்திடுவாய்
கரும்பாகப் பேசிடுவாய் காந்தமாக ஈர்த்திடுவாய்
துரும்பாக எண்ணாமல் தூணாகத் தாங்குவாயே.

தாங்கிடவே துன்பங்கள் தத்துவங்கள் கற்பாயே
ஏங்கிடவே வைத்திடாமல் என்றென்றும் காத்திடுவாய்
நீங்கட்டும் கல்லாமை நீக்கிடுவோம் இல்லாமை
ஓங்கட்டும் பண்புடைமை ஓயாமல் காப்பாயே.

ஏனென்று கேட்பாயே எப்பொருளும் ஆய்ந்திடுவாய்
தானென்ற கொள்கையில் தன்மானம் காத்திடுவாய்
நானென்ற நம்பிக்கை நன்றாக ஏற்பாயே
தேனென்று சொல்லிடவே தீந்தமிழில் பேசுவாயே.

பேசிடுவாய் அன்பாக பெற்றோரின் கீழ்ப்படிவாய்
ஆசிகளும் பெற்றிடுவாய் ஆன்றோர்கள் வாழ்த்திடவே
நேசிப்பாய் சுற்றத்தார் நெஞ்சினிலே ஏற்றமுற
ஏசிடுவார் வீட்டினையும் ஏறெடுத்துப் பார்க்காதே.

பார்வையினில் நேர்கொண்டு பண்புடனே ஏறுநடை
கூர்விழியால் குத்திடுவாய் குற்றங்கள் செய்வோரை
ஏர்கொண்டு சேற்றினிலே ஏற்றமுற பாடுபடும்
சீர்கொண்டு போற்றிடுவாய் செம்மாந்த சொற்கொண்டே.

 முன்னே செல்ல …. தொடரும் 


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.

மின்னிதழ்

ஹைக்கூ திண்ணை 13

ஹைக்கூ திண்ணை செப்டம்பர் / ஒக்டோபர் மின்னிதழைத் தொகுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். இந்தப் பெறுமதியான வாய்ப்பை வழங்கிய கவிச்சுடர் கல்யாணசுந்தரம் ஐயா அவர்களுக்கு முதற்கண் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன். ஹைக்கூ என்றால் என்ன, அதை விளங்கிக் கொண்டு அதன் விதிமுறைகள் பற்றி அறிந்து அதன்படி எழுத எல்லோரும் முனைகின்றார்களா என்பது கேள்விக்குறியே. சிலர் இலக்கண விதிமுறைக்கேற்ப ஹைக்கூ கவிதைகளை எழுதுகின்றனர். ஆனாலும் சிலர் இலக்கண விதிகளைக் கொஞ்சம் மீறிப் புதுமையாக, வித்தியாசமாக எழுதுபவர்களாக இருக்கிறார்கள்...