நான்.

பேச்சில் தமிழே உயர்வாக
பிறந்தேன் தஞ்சை மாவட்டம்.
மூச்சில் முழக்கம் தமிழாக.
முயன்றேன் கற்க இலக்கணமே.
வீச்சில் தமிழே உரையாக
வீறு கொள்வேன் கவியரங்கம்.
தீச்சொல் தவிர்த்துத் திறமுடனே
தேன்த மிழையே பரப்பிடுவேன்.

கற்றேன் தமிழை இனிதாக
கனியின் சுவையை உணர்ந்தேனே.
நற்ற வைச்சொல் வேன்நன்றாய்
நம்த மிழின்வு யர்வினையே.
பற்றெ னப்பற் றினேன்தமிழை.
பாக்கள் வடித்தே மகிழ்ந்தேனே.
உற்ற உறவாய் தமிழர்கள்
உயர்வும் பெறவே உதவிடுவேன்.

கவியாய் மலர்ந்த சிந்தனைகள்
கற்றால் வாழ்வில் உயர்ந்திடவே.
கவிவி தைகவி தைநூலே.
கற்றோர் வாழ்த்த மகிழ்ந்தேனே.
செவியில் தமிழால் இன்புறவே
சேவை என்றும் தமிழுக்கே.
புவியில் இவனும் தமிழுக்காய்
புரிந்தான் தொண்டு வாழ்த்திடவே.

கவிஞர் கோவிந்தராசன் பாலு

தொடரும் 

 

எழுதிய நூல்கள்.

  1. கவி – விதை – கவிதை.
  2. கவித்தேன் .
  3. மரபுத்தேன்.
  4. மகிழ்வின் மந்திரச் சாவி (விரைவில்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பே என்றும் உயர்வாகும்!
உடலை உறுதி ஆக்கிவிடும்!
தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே
தளரா உழைப்பின் பலனன்றோ!

 » Read more about: உழைப்பாளர்களை உயர்த்துவோம்  »

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.