தொடர் எண் 3

தலைப்பு : தம்பி நலமா ?

உன்திறனே உன்வாழ்வை உன்னதமாய் சீர்படுத்தும்
என்றேதான் நெஞ்சினிலே இன்றேதான் கொள்வாயே
நன்றேதான் நம்மனத்தில் நல்லெண்ணம் வேண்டுமப்பா
ஒன்றேதான் ஊராக ஓங்கட்டும் நம்வாழ்வே.

வாழ்வினிலே ஏற்றமுற வாழ்ந்திடுவாய் அன்பாக
ஏழ்மையிலே வாடினாலும் ஏற்றமுற நம்பிக்கை
ஆழ்மனத்தில் கொள்வாயே அன்பொன்றே தீர்வாகும்
தாழ்மையுடன் சான்றோரின் தக்கவழி ஏற்பாயே.

ஏற்பாயே நல்லுரையை எல்லோரும் கேளிரென
சொற்படியே செய்திடுவாய் சொல்லாண்டு வென்றிடுவாய்
பற்றிடுவாய்ப் பாசத்தில் பண்புகளில் மேம்பட்டு
வெற்றிகளும் கிட்டிடுமே வென்றிடலாம் அன்பாலே.

அன்பாலே சாதிக்கும் ஆற்றலையும் கொள்வாயே
நன்மைகளும் செய்திடுக நல்லவனாய் நாடுபோற்ற
துன்பங்கள் ஓடிவிடும் தூயவனாய் வாழ்வாயே
இன்பங்கள் தேடிவரும் எல்லோரும் வாழ்த்திடவே.

வாழ்த்திடவே மேன்மைகளும் வற்றாமல் தொற்றிடுமே
தாழ்வென்று எண்ணாமல் தங்கமாகத் தாங்கிடுவாய்
வாழ்த்துகளும் வந்திடுமே வற்றாத ஓடையாக
ஏழ்மையிலும் கொள்கையிலே எள்ளளவும் மாறாதே.

முன்னே செல்ல…   தொடரும்  


1 Comment

Fiverr Affiliate · ஏப்ரல் 16, 2025 at 16 h 26 min

I am extremely inspired along with your writing abilities as
smartly as with the layout on your weblog. Is this a paid subject matter or did you modify it yourself?
Either way stay up the excellent quality writing, it’s uncommon to peer
a nice weblog like this one these days. Fiverr Affiliate!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

Related Posts

மரபுக் கவிதை

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பே என்றும் உயர்வாகும்!
உடலை உறுதி ஆக்கிவிடும்!
தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே
தளரா உழைப்பின் பலனன்றோ!

 » Read more about: உழைப்பாளர்களை உயர்த்துவோம்  »

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.