தொடர் எண் 4.

தலைப்பு : ஏமாறாதே.

மாறாத எண்ணத்தில் மாற்றங்கள் வந்தாலும்
கூறாதே பொய்களையும் கொள்வாயே வாய்மையினை
ஆறாதே சுட்டவடு ஆற்றுவாய் நற்பணிகள்
மீறாதே மூத்தோர்சொல் மேன்மையுற ஏற்பாயே.

ஏற்பாயே நற்பணிகள் எல்லோரும் ஏற்றமுற
ஆற்றுவாயே இன்முகமாய் அல்லல்கள் நீங்கிடவே
ஊற்றாக செல்வங்கள் ஊருணியாய் மக்களுக்கு
சீற்றமுடன் வாழாமல் சிந்தனைகள் கூடிடுமே.

கூடிவாழ நற்பயன்கள் கோடியுண்டு மாற்றமில்லை
நாடிவரும் ஏழைகட்கு நல்லுணவைத் தந்துதவு
தேடிவரும் திக்கற்றோர் தீர்ப்பாயே துன்பங்கள்
ஓடிவரும் ஆறாக ஊராரும் வாழ்த்திடவே

வாழ்கின்ற காலத்தில் வாடாமல் நின்றிடவும்
தாழ்வென்று கூறாமல் தன்னிலையை மாற்றிவிடு
வீழ்த்திவிட எண்ணிடுவார் வேங்கையென நிற்பாயே
காழ்ப்புணர்ச்சிக் கொண்டாலும் கண்ணியத்தை நாட்டுவாயே.

ஏமாற்ற எண்ணாதே ஏமாற்றம் கொள்ளாதே
ஆமாமென் றேசொல்வார் அத்தனையும் பொய்யாகும்
கோமாளி ஆக்கிடுவார் குள்ளநரி கூட்டத்தார்
தாமாகச் செய்திடுக தன்மானம் கொள்வாயே.

 முன்னே செல்ல …. தொடரும் 


4 Comments

کراتین پلاتینیوم ماسل تک · ஜனவரி 4, 2026 at 13 h 51 min

کراتین پلاتینیوم ماسل تک، یکی از خالص‌ترین و پرفروش‌ترین مکمل‌های کراتین در سطح جهان است.

مس گینر کرتیکال اپلاید نوتریشن · ஜனவரி 5, 2026 at 16 h 03 min

مس گینر کرتیکال اپلاید نوتریشن، یک فرمولاسیون فوق‌حرفه‌ای است که فراتر از یک گینر معمولی برای افزایش وزن است.

کراتین بد اس · ஜனவரி 7, 2026 at 8 h 18 min

کراتین بد اس، یک مکمل پیشرفته و قدرتمند است که برخلاف کراتین‌های معمولی، ترکیب چندین نوع مختلف کراتین است.

ramenbet casino официальный сайт · ஜனவரி 9, 2026 at 10 h 47 min

Your mode of describing everything in this article is really nice, every one be capable of easily be aware
of it, Thanks a lot.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

Related Posts

மரபுக் கவிதை

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பே என்றும் உயர்வாகும்!
உடலை உறுதி ஆக்கிவிடும்!
தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே
தளரா உழைப்பின் பலனன்றோ!

 » Read more about: உழைப்பாளர்களை உயர்த்துவோம்  »

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.