தொடர் எண் 4.

தலைப்பு : ஏமாறாதே.

மாறாத எண்ணத்தில் மாற்றங்கள் வந்தாலும்
கூறாதே பொய்களையும் கொள்வாயே வாய்மையினை
ஆறாதே சுட்டவடு ஆற்றுவாய் நற்பணிகள்
மீறாதே மூத்தோர்சொல் மேன்மையுற ஏற்பாயே.

ஏற்பாயே நற்பணிகள் எல்லோரும் ஏற்றமுற
ஆற்றுவாயே இன்முகமாய் அல்லல்கள் நீங்கிடவே
ஊற்றாக செல்வங்கள் ஊருணியாய் மக்களுக்கு
சீற்றமுடன் வாழாமல் சிந்தனைகள் கூடிடுமே.

கூடிவாழ நற்பயன்கள் கோடியுண்டு மாற்றமில்லை
நாடிவரும் ஏழைகட்கு நல்லுணவைத் தந்துதவு
தேடிவரும் திக்கற்றோர் தீர்ப்பாயே துன்பங்கள்
ஓடிவரும் ஆறாக ஊராரும் வாழ்த்திடவே

வாழ்கின்ற காலத்தில் வாடாமல் நின்றிடவும்
தாழ்வென்று கூறாமல் தன்னிலையை மாற்றிவிடு
வீழ்த்திவிட எண்ணிடுவார் வேங்கையென நிற்பாயே
காழ்ப்புணர்ச்சிக் கொண்டாலும் கண்ணியத்தை நாட்டுவாயே.

ஏமாற்ற எண்ணாதே ஏமாற்றம் கொள்ளாதே
ஆமாமென் றேசொல்வார் அத்தனையும் பொய்யாகும்
கோமாளி ஆக்கிடுவார் குள்ளநரி கூட்டத்தார்
தாமாகச் செய்திடுக தன்மானம் கொள்வாயே.

 முன்னே செல்ல …. தொடரும் 


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.

மின்னிதழ்

ஹைக்கூ திண்ணை 13

ஹைக்கூ திண்ணை செப்டம்பர் / ஒக்டோபர் மின்னிதழைத் தொகுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். இந்தப் பெறுமதியான வாய்ப்பை வழங்கிய கவிச்சுடர் கல்யாணசுந்தரம் ஐயா அவர்களுக்கு முதற்கண் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன். ஹைக்கூ என்றால் என்ன, அதை விளங்கிக் கொண்டு அதன் விதிமுறைகள் பற்றி அறிந்து அதன்படி எழுத எல்லோரும் முனைகின்றார்களா என்பது கேள்விக்குறியே. சிலர் இலக்கண விதிமுறைக்கேற்ப ஹைக்கூ கவிதைகளை எழுதுகின்றனர். ஆனாலும் சிலர் இலக்கண விதிகளைக் கொஞ்சம் மீறிப் புதுமையாக, வித்தியாசமாக எழுதுபவர்களாக இருக்கிறார்கள்...