தொடர் எண்  8

ஏரோட்டம் இல்லையென்றால் ஏற்றமில்லை செல்வத்தில்
தேரோட்டம் ஓடாது தெம்மாங்கும் கேட்காது
காரோட்ட வாய்ப்பில்லை கஞ்சிக்கும் ஏமாற்றம்
நீரோட்டம் காத்திட்டால் நிச்சயமாய் நன்மையுண்டே.

நன்மைகளும் பெற்றிடலாம் நாட்டினிலே வேளாண்மை
ஒன்றுபடச் செய்திடவே ஊரெல்லாம் மேன்மையுறும்
நன்றாக நாமுழைத்தால் நம்நாடு வல்லரசாம்
முன்னோர்கள் எண்ணியதை மூச்சாகக் கொள்வீரே.

மூச்சாகக் கொள்வீரே முன்னேற்றம் நம்கையில்
வீச்சாக வேளாண்மை வெல்லட்டும் இல்லாமை
பேச்சினிலே மட்டுமன்றிப் பேராண்மை கொள்வாயே
ஏச்சுகளைத் தூக்கியெறி இன்றேதான் நல்நாளே.

நல்முறையில் காலத்தில் நாம்செய்யும் நெற்பயிர்கள்
பல்லுயிர்கள் காத்திடவும் பல்லாண்டு வாழ்ந்திடவும்
இல்லையென்று சொல்லாமல் ஈயென்றால் ஈந்திடவும்
கால்பதித்துச் சேற்றினிலே காண்போமே நல்வளமே.

நல்வளமும் கண்டிடவும் நல்மழையும் பெய்திடவும்
பல்வளமும் மேன்மையுற பாடுபட வாருங்கள்
நெல்வளமும் மேன்மையுற நீர்வளமும் வற்றாமல்
பல்லாற்றல் காட்டுவளம் பாடுபட்டு காப்போமே.

  முன்னே செல்ல …. தொடரும் 


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

மரபுக் கவிதை

அண்ணா

வினைச்சொல்லாய் வேதியத்தின் இருள கற்றி
விடியல்தர வந்துதித்த கதிர வன்நீ!
முனைச்சொல்லாய்க் கூர்படைத்த கூர்ப டைத்துக்
குத்தீட்டிச் சொல்வடித்த உலைக்க ளம்நீ!
பிணைச்சொல்லாய்ப் பிரிந்துபட்ட தமிழி னத்தைப்
பேரினமாய்த் திரளவைத்த பெருந்தி றம்நீ!

 » Read more about: அண்ணா  »

மரபுக் கவிதை

அறிஞர் அண்ணா (விருத்தமலர்கள்)

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற அரசியல் சகாப்தமாக வாழ்ந்து சாதித்து மறைந்த ஒரு மாபெரும் மேதை பேரறிஞர் அண்ணா அவர்கள் என்றால் அது கிஞ்சித்தும் மிகையாகாது. ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து கல்வியாலும் உழைப்பாலும் உயர்ந்து தன் நாவன்மையால் தமிழகமக்களைக் கட்டிப்போட்டு,

 » Read more about: அறிஞர் அண்ணா (விருத்தமலர்கள்)  »