தொடர் எண்  9

தலைப்பு : உழைப்பு.

பாடுபட்டு உழைத்தால்தான் பணத்தையும் ஈட்டிடலாம்
வீடுகட்டி வாழ்ந்திடலாம் விளைநிலங்கள் வாங்கிடலாம்
தேடுகின்ற வேலையினைத் திறமையினால் பெறவேண்டும்
வாடுகின்ற நிலையினையும் வாராமல் தடுத்திடலாம்.

கிடைக்கின்ற வேலையினைக் கீழ்ப்படிந்துச் செய்திடுவாய்
இடைவெளியும் வேண்டாமே இயங்கிடுவாய் தேனியாக
உடையினையும் தூய்மையாக உடுத்திடுவாய் மடிப்புடனே
மடைதிறந்த வெள்ளமாக மாண்புடனே பேசிடுவாய்.

பேசிடுவாய் இன்சொற்கள் பெரியோர்க்குக் கீழ்ப்படிந்து
நேசிப்பாய் தொழிலினையும் நேர்மையாக நடந்திடுவாய்
வாசிப்பாய் நாள்தோறும் வாழ்வியலாம் குறளினையும்
காசில்லா நிலையொன்றைக் காணாமல் வாழ்வாயே.

வாழ்வாயே மகிழ்வாக வாழ்த்திடவே பெரியோர்கள்
தாழ்வென்ற நிலையில்லை தளராமல் உழைத்திட்டால்
ஏழ்மையென்னும் நிலையில்லை ஏற்றத்தைப் பெறுவாயே
வீழ்வதெல்லாம் எழுவதற்கே வீறுகொண்டு எழுவாயே.

எழுவாயே ஏறுபோல இலக்கினையும் அடைந்திடவே
ஒழுக்கமுடன் வாழ்ந்திடுவாய் உன்னதமாய் உயர்ந்திடவே
செழுமையுடன் நிலைப்பதற்கு சிக்கனமாய் செலவிடுவாய்.
புழுதியல்ல உன்வாழ்க்கைப் புரட்சியுடன் புதுமைசெய்வாய்.

 முன்னே செல்ல …. தொடரும் 


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

மரபுக் கவிதை

அண்ணா

வினைச்சொல்லாய் வேதியத்தின் இருள கற்றி
விடியல்தர வந்துதித்த கதிர வன்நீ!
முனைச்சொல்லாய்க் கூர்படைத்த கூர்ப டைத்துக்
குத்தீட்டிச் சொல்வடித்த உலைக்க ளம்நீ!
பிணைச்சொல்லாய்ப் பிரிந்துபட்ட தமிழி னத்தைப்
பேரினமாய்த் திரளவைத்த பெருந்தி றம்நீ!

 » Read more about: அண்ணா  »

மரபுக் கவிதை

அறிஞர் அண்ணா (விருத்தமலர்கள்)

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற அரசியல் சகாப்தமாக வாழ்ந்து சாதித்து மறைந்த ஒரு மாபெரும் மேதை பேரறிஞர் அண்ணா அவர்கள் என்றால் அது கிஞ்சித்தும் மிகையாகாது. ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து கல்வியாலும் உழைப்பாலும் உயர்ந்து தன் நாவன்மையால் தமிழகமக்களைக் கட்டிப்போட்டு,

 » Read more about: அறிஞர் அண்ணா (விருத்தமலர்கள்)  »