வளைந்தகோடால் வரைந்துவைத்த படமா நாடு
—– வாழ்க்கையையே தியாகத்தின் வேள்வி யாக்கி
வளையாத முன்னோர்கள் தீப்பி ழம்பால்
—– வார்த்துவைத்த வார்ப்படந்தான் இந்த நாடு!
முளைவிட்டுத் தானாக முளைத்தெ ழுந்த
—– முட்செடியா இந்தநாடு? மானத் தாலே
தலையுடலை விதைகளாக்கிக் குருதி நீரால்
—– தளிர்க்கவைத்த பன்னீர்ப்பூ இந்த நாடு!

காற்றினிலே மிதந்துவந்து மூக்கிற் குள்ளே
—– கலக்கின்ற நறுமணமா இந்த நாடு?
நேற்றுகளின் பண்பாட்டைச் சுவடாய்த் தாங்கி
—– நிலைக்கவைக்கும் சுவாசந்தான் இந்த நாடு!
வேற்றுமையை எழிலான நிறத்தில் காட்டி
—– வேலிக்குள் பூத்தமலர்த் தொகுப்பா நாடு ?
போற்றுகின்ற சாதிமத எண்ண மொன்றிப்
—– பொலிகின்ற மனத்தொகுப்பே இந்த நாடு!

வெற்றெழுத்தால் உருவான சொல்லா நாடு
—– வெடிக்கை ஒலிக்குறிப்பின் சேர்ப்பா நாடு?
குற்றெழுத்தும் நெட்டெழுத்தும் ஒற்றெ ழுத்தில்
—– குலவிப்பொருள் தரும்சொல்லே இந்த நாடு!
வற்றாத நதிகளாக அன்பு பாய்ச்சி
—– வயல்விளைத்துக் காக்கின்ற தாயே நாடு!
வெற்றுச்சொல் பேச்சின்றி உயிராய்ப் பேணி
—– வியர்வையிலே உயர்த்துவதே சேயின் மூச்சு !


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

மரபுக் கவிதை

அண்ணா

வினைச்சொல்லாய் வேதியத்தின் இருள கற்றி
விடியல்தர வந்துதித்த கதிர வன்நீ!
முனைச்சொல்லாய்க் கூர்படைத்த கூர்ப டைத்துக்
குத்தீட்டிச் சொல்வடித்த உலைக்க ளம்நீ!
பிணைச்சொல்லாய்ப் பிரிந்துபட்ட தமிழி னத்தைப்
பேரினமாய்த் திரளவைத்த பெருந்தி றம்நீ!

 » Read more about: அண்ணா  »

மரபுக் கவிதை

அறிஞர் அண்ணா (விருத்தமலர்கள்)

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற அரசியல் சகாப்தமாக வாழ்ந்து சாதித்து மறைந்த ஒரு மாபெரும் மேதை பேரறிஞர் அண்ணா அவர்கள் என்றால் அது கிஞ்சித்தும் மிகையாகாது. ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து கல்வியாலும் உழைப்பாலும் உயர்ந்து தன் நாவன்மையால் தமிழகமக்களைக் கட்டிப்போட்டு,

 » Read more about: அறிஞர் அண்ணா (விருத்தமலர்கள்)  »