கவிதை
என்றாலும் நான் எழுவேன்!
கசப்பான திரிபுற்ற பொய்களைப் பூசி வரலாற்றில் கடைநிலையில் என்னை நீ எழுதலாம்; அழுக்குக்குள் தோயும்படி அழுத்தமாய் மிதிக்கலாம் என்றாலும் நான் எழுவேன், சிறு புழுதியைப் போல! எனது தோற்றமுனை வருத்துகின்றதா? வாட்டமுற்று நீ வருந்துவதேன்? என் வீட்டின் முன்னறை அருகிருந்து முடுக்கிவிடத் தோதான – பல எண்ணெய்க் கிணறுகளை அடையப்பெற்றதுபோல் – நான் நடப்பதைக் கண்டுதானோ? நிலவினைப் போல் பகலவன் போல் – கடலதன் மேலெழும் அலைகளைப் போல் கிளர்ந்தே Read more
