நிலாமுற்றம் முகநூல் குழுமத்தில் நடைபெறும் மரபுக் கவிதை எழுதும் பயிற்சியில் பாரதியின் பிறந்த நாளை முன்னிட்டு நடத்தப்பட்ட எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தப் போட்டியில் பாரதியாரைப் போற்றும் வகையில் எழுதப்பட்ட 100 விருத்தங்களுடன் எனது இரண்டு விருத்தங்களும் சேர்ந்து 102 விருத்தங்கள் நிறைந்த தொகுப்பாக இந்நூல் வெளியிடப்படுகிறது.

இராம வேல்முருகன் வலங்கைமான்

இந்தத் தொகுப்பானது பாரதி குறித்த தகவல் களஞ்சியமாகவும் கவிதைக் களஞ்சியமாகவும் விளங்குகின்றது. தமிழ்கூறு நல்லுலகத்தில் இந்த நூல் பெரும் வரவேற்பை பெறுமென்பதில் ஐயமில்லை.

முனைவர் வெற்றி நிலவன்
மாநிலக் கல்லூரி சென்னை

வலங்கையார் தொகுப்பும் வாழ்க
வாய்த்தநற் கவிகள் வாழ்க
கலங்கரை விளக்கம் போலக்
கைகளில் நூலும் வாழ்க
பலத்துடன் ஒருங்கி ணைந்தப்
பாவலர் கூட்டம் வாழ்க
நலத்துடன் தமிழின் ஊடே
நாளெல்லாம் வாழ்க வாழ்க

தமிழ்நெஞ்சம் அமின்


2 Comments

இராம வேல்முருகன் · டிசம்பர் 31, 2022 at 12 h 55 min

இனிய நன்றி ஐயா

குளோரிசக்தி · டிசம்பர் 31, 2022 at 14 h 16 min

என்றும் வாழும் பாரதி மிக சிறப்பு. பயனுள்ள் நூல். வாழ்த்துகள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.

மரபுக் கவிதை

அறிஞர் அண்ணா (விருத்தமலர்கள்)

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற அரசியல் சகாப்தமாக வாழ்ந்து சாதித்து மறைந்த ஒரு மாபெரும் மேதை பேரறிஞர் அண்ணா அவர்கள் என்றால் அது கிஞ்சித்தும் மிகையாகாது. ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து கல்வியாலும் உழைப்பாலும் உயர்ந்து தன் நாவன்மையால் தமிழகமக்களைக் கட்டிப்போட்டு,

 » Read more about: அறிஞர் அண்ணா (விருத்தமலர்கள்)  »