அருள் வாக்கியே! அப்துல்காதிரே!

அருள் வாக்கியே அப்துல் காதிரே! திருப்புகழ் பாடிப் புகழ்சேர்த்த மெய்ஞ்ஞானியே! வெண்பா வினால் விளக்கேற்றியே விந்தைகள் தான்செய்த இறைநேசரே! (அருள்) எரியென்றே நீபாடித் திரியேற்றி னாய் அரியணையில் அணையென்றே ஒளிபோக் கினாய்! சிறுவயதில் போட்டிகளில் திறம்காட் டினாய் யாழ்ப்பாணச் சங்கனென்றும் பெயரீட்டி னாய்! (அருள்) போப்பிட்டி மண்ணீன்ற புகழ் மைந்தனே! யாப்போதிப் பாதந்த  பாமைந்தனே! திருப்பத்தூர் பூர்வீகத் திருவாளனே! அருள்பெற்ற ஆத்மீகக் கவிஜோதியே! (அருள்) பட்டங்கள் பலபெற்ற மாமேதையே! முப்பது Read more

சிறுவர் நலன் காப்போம்!

சிறுவர் நலன்கள் காத்திடுவோம் சிறந்து விளங்கச் செய்திடுவோம் மலரும் அந்த மொட்டுகளின் மகிமை அறிந்து  வாழ்த்திடுவோம்! சிறகை விரித்துப் பறக்கட்டும் சின்னஞ் சிறிய சிட்டுக்கள் இடையில் சிறகைச் சிதைக்காமல் இருந்து காப்போம் நாம்அவரை! மொட்டு மலர்ந்து விரிவதற்குள் மூர்க்கர் பறித்து விடுகின்றார் பட்டாம் பூச்சி பறப்பதற்குள் வண்ணச் சிறகை நசிக்கின்றார் கட்டாந் தரையில் முத்துகளை கல்நெஞ் சர்கள் உடைக்கின்றார் சிற்பி இந்தச் சிறுவர்களின் சின்னஞ் சிறிய கரங்களினை கட்டிப் போட்டு Read more

நாளை நமக்கும் மூப்பு வரும்!

நாளை நமக்கும் மூப்புவரும் நரைக்கும் இளைக்கும் அசதிவரும் இளமைத் தோற்றம் மறைந்துவிட எவர்க்கும் முதுமை வந்துவிடும் முதுமை யாளர் – மூத்தவர்கள் முழுதாய் நமக்காய் உழைத்தவர்கள் இளமை வாழ்வை நமக்கென்றே அன்று தொலைத்த பெரியவர்கள் “பழசு” என்றே அவர்களினைப் பழித்தால் மனசு நோகாதோ? அனுப வத்தால் உயர்ந்திட்ட அறிஞர் தம்மை விலக்குவதோ? தள்ளி வைத்து முதியவரைத் தவிக்க விடுதல் முறைதானோ? அள்ளி அணைத்து வளர்த்தவரை அலைந்து திரிய விடலாமோ? தொல்லை Read more

பேரொளி பிறந்தது!

பேரொளி பிறந்தது காரிருள் மறைந்தது! பாரெலாம் தீன் ஒளி பரவிப் பளிச்சிடப் பூரணமாகி யோர் புத்தொளி பிறந்தது! காரணர் முஹம்மத் எனுமொரு குழந்தை ஆமினா வயிற்றில் அழகாய்ப் பிறந்தது! பாரினில் இந்தப் பிறப்பிலை யென்றால்… யாருமே இல்லை! சூரியன், சந்திரன் வானம் பூமி… எதுவுமே இல்லை எவருமே இல்லை! பாரினில் ஒரு பகலவ னாக.., பாலையில் ஒரு நீர்ச் சுனையாக.. அகிலத் திற்கெலாம் அருட் கொடையாக.. வல்ல நாயனின் தூதுவ  Read more

நான்

மாடிமனை கட்டி யதில் வாழ்ந்தவனும் ”நானே” கோடிபணம் சேர்த் தங்கே குவித்தவனும் ”நானே” நாத்திகனாய்க் கதை பேசி வென்றவனும் ”நானே” கூத்திகளோ டிரவு பகல் கொஞ்சியவன் ”நானே” சொத்து சுகம் சொந்த பந்தம் என்றிவைகள் தானே இத்தரையில் சேர்த்து வைத்தேன் எல்லாமும் வீணே! மக்கி மடிந் தழிகின்றேன் மண்ணறைக்குள் நானே இற்றிறந்து போனேனா எலும்பேதான் நானா? இதை விடவும் இதை விடவும் இன்னும் அழிவேனா? இதுவரையில் வாழ்ந்ததெது கனவுலகம் தானா?