சிறுவர் நலன்கள் காத்திடுவோம்
சிறந்து விளங்கச் செய்திடுவோம்
மலரும் அந்த மொட்டுகளின்
மகிமை அறிந்து  வாழ்த்திடுவோம்!
சிறகை விரித்துப் பறக்கட்டும்
சின்னஞ் சிறிய சிட்டுக்கள்
இடையில் சிறகைச் சிதைக்காமல்
இருந்து காப்போம் நாம்அவரை!

மொட்டு மலர்ந்து விரிவதற்குள்
மூர்க்கர் பறித்து விடுகின்றார்
பட்டாம் பூச்சி பறப்பதற்குள்
வண்ணச் சிறகை நசிக்கின்றார்
கட்டாந் தரையில் முத்துகளை
கல்நெஞ் சர்கள் உடைக்கின்றார்
சிற்பி இந்தச் சிறுவர்களின்
சின்னஞ் சிறிய கரங்களினை
கட்டிப் போட்டு வதைக்கின்றார்
கயவர்.., ஐயோ. காத்திடுவோம்!

வளரும் சிறுவர் துன்பங்கள்
வன்முறை யாவும் ஒழித்திடுவோம்
தகாத செயல்கள் புரிகின்ற
தரங் கெட்டோரை அழித்திடுவோம்!

Categories: கவிதை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.

மின்னிதழ்

ஹைக்கூ திண்ணை 13

ஹைக்கூ திண்ணை செப்டம்பர் / ஒக்டோபர் மின்னிதழைத் தொகுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். இந்தப் பெறுமதியான வாய்ப்பை வழங்கிய கவிச்சுடர் கல்யாணசுந்தரம் ஐயா அவர்களுக்கு முதற்கண் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன். ஹைக்கூ என்றால் என்ன, அதை விளங்கிக் கொண்டு அதன் விதிமுறைகள் பற்றி அறிந்து அதன்படி எழுத எல்லோரும் முனைகின்றார்களா என்பது கேள்விக்குறியே. சிலர் இலக்கண விதிமுறைக்கேற்ப ஹைக்கூ கவிதைகளை எழுதுகின்றனர். ஆனாலும் சிலர் இலக்கண விதிகளைக் கொஞ்சம் மீறிப் புதுமையாக, வித்தியாசமாக எழுதுபவர்களாக இருக்கிறார்கள்...