மாடிமனை கட்டி யதில்
வாழ்ந்தவனும் ”நானே”
கோடிபணம் சேர்த் தங்கே
குவித்தவனும் ”நானே”
நாத்திகனாய்க் கதை பேசி
வென்றவனும் ”நானே”
கூத்திகளோ டிரவு பகல்
கொஞ்சியவன் ”நானே”
சொத்து சுகம் சொந்த பந்தம்
என்றிவைகள் தானே
இத்தரையில் சேர்த்து வைத்தேன்
எல்லாமும் வீணே!
மக்கி மடிந் தழிகின்றேன்
மண்ணறைக்குள் நானே
இற்றிறந்து போனேனா
எலும்பேதான் நானா?
இதை விடவும் இதை விடவும்
இன்னும் அழிவேனா?
இதுவரையில் வாழ்ந்ததெது
கனவுலகம் தானா?
புதுக் கவிதை
ஒரு கோப்பைத் தேநீர்
ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.
1 Comment
நா.கு.இரெத்தினம் - சிட்னி · ஜூன் 3, 2017 at 0 h 59 min
வாழ்த்துக்கள் பாவேந்தர் பாறுாக் அவர்களே…!
1966ம் வருடம் ஆகஸ்ட் மாதம் காரை தீவிலிருந்து வெளிவந்த எனது ”இளைஞன்” மாத இதழில் தங்களது கவிதை ஒன்றும், மருதார் மஜீத் அவர்களது கவிதை ஒன்றும் வெளியிட்டிருந்தேன். தாங்களிருவரும் அன்று முதல் இன்று வரை ஆற்றிவரும் தமிழ் தொண்டிற்கு எனது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
இணையதள வாயிலாக தங்களிருவரையும் பல வருடங்களின் பின்பு கண்டது மிகவும் மகிழ்ச்சியாகவுள்ளது. தொடர்க தங்கள் தமிழ் தொண்டு…!