நாளை நமக்கும் மூப்புவரும்
நரைக்கும் இளைக்கும் அசதிவரும்
இளமைத் தோற்றம் மறைந்துவிட
எவர்க்கும் முதுமை வந்துவிடும்

முதுமை யாளர் – மூத்தவர்கள்
முழுதாய் நமக்காய் உழைத்தவர்கள்
இளமை வாழ்வை நமக்கென்றே
அன்று தொலைத்த பெரியவர்கள்

“பழசு” என்றே அவர்களினைப்
பழித்தால் மனசு நோகாதோ?
அனுப வத்தால் உயர்ந்திட்ட
அறிஞர் தம்மை விலக்குவதோ?

தள்ளி வைத்து முதியவரைத்
தவிக்க விடுதல் முறைதானோ?
அள்ளி அணைத்து வளர்த்தவரை
அலைந்து திரிய விடலாமோ?

தொல்லை யென்று அவர்களினைத்
தூரவிட்டு விலகு வதோ?்
பிள்ளை உள்ள போதினிலும்
பெற்றோர்- மூத்தோர் வருந்துவதோ?

Categories: கவிதை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பே என்றும் உயர்வாகும்!
உடலை உறுதி ஆக்கிவிடும்!
தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே
தளரா உழைப்பின் பலனன்றோ!

 » Read more about: உழைப்பாளர்களை உயர்த்துவோம்  »

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.