ஹைக்கூ

வஃபீரா வஃபி

01.
தாவும் குரங்கு
நதியில் தலைமுழுகி எழும்
மரக்கிளை

02.
நண்பகல் வேளை
சக்கரங்களிடை சிக்கித் தவிக்கும்
வண்டி நிழல்

 03.
உயர்ந்த பாறை
ஓய்வெடுக்க முடியாமல் திரும்பும்
கடலலைகள்.

 04.
காலை வெயில்
யன்னல் திரையில் ஆடும்
பூனையின் நிழல்.

 05.
குறி வைக்கும் கவண்
சட்டென நகர்ந்து மறையும்
மாலைச் சூரியன்.

06.
இலையுதிர்க்காலம்
மரக்கிளை எங்கும் பூத்திருக்கும்
கொக்குக் கூட்டம்.

07.
கொட்டும் அருவி
கற்பாறையில் துவைக்கப் படும்
பௌர்ணமி நிலவு

08.
குளக்கரையில் முதியவர்
கூடவே நடை பயிலும்
ஒற்றை நாரை.

09.
ஆற்றோரத் தென்னை
அங்குமிங்குமாய் நடை பயிலும்
தென்னங்கீற்றின் நிழல்.

10.
கொள்ளை போன மணல்
தேடி ஊருக்குள் வரும்
காட்டாற்று வெள்ளம்

11.
உதிரும் பூ
விழாமல் தாங்கிப் பிடிக்கும்
சிலந்திவலை.

12.
பூசாரியை முந்திச் சென்று
கர்ப்பக்கிரகத்துள் நுழையும்
காலை வெயில்.

13.
மரத்தடியில் கைம்பெண்
பூவைத்துப் பொட்டிட்டுச் செல்லும்
வீசிய காற்று.

 14.
பௌர்ணமி இரவு
அலையோடு  சேர்ந்தே கரைபுரளும்
பின்னிரவின் நிலவொளி.

15.
ஊர் சுற்றிப் பார்த்து/
தன் ஆயுள் முடிக்கும்
நீர்க்குமிழி.

16.
எங்கிருந்து புறப்பட்டதோ
ஊர் சுற்றிப் பார்க்கும்
வண்ண நீர்க்குமிழி.

17.
கொதிக்கும் உலை
கீற்றிடை விழுந்து வேகும்
சூரியன்.

18.
கரையில் நெருப்பு
அச்சமின்றி  ஊடறுத்துச் செல்லும்
குளத்து மீன்.

19.
வீசிய தூண்டில்
ஏரியெங்கும் வண்ணங்களைப் பரப்பும்
மாலைச் சூரியன்.

20.
அவசர நகர்வு
நின்று ரகசியம் பேசும்
எறும்புக் கூட்டம்..


3 Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

Related Posts

நேர்காணல்

வஃபீரா வஃபி

கவிஞர், நூல் விமர்சகர், கதாசிரியர், ஹைக்கூ கவிஞர்,, கைவினைக் கலைஞர், நூலாசிரியர், எழில் கொஞ்சும் இயற்கையைப் படமெடுக்கும் ஒரு இதழாசிரியர்,  புகைப்படக் கலைஞர் என பன்முகத் திறமைகளுடன் பயணிக்கும் வஃபீரா வஃபி

டிசம்பர் –  » Read more about: வஃபீரா வஃபி  »

நேர்காணல்

திரு சங்கரபாண்டியன்


நவம்பர் – 2025 /108 பக்கங்கள் கொண்ட இதழை பதிவிறக்கம் (download) செய்ய மேற்காணும் இதழ் அட்டைப்படத்தில் டச் அல்லது கிளிக் செய்யவும்.

ஒரு சாதாரண தையல் தொழிலாளியாக இருந்து மரபுக் கவிஞராக பரிணமித்துள்ளார்.

 » Read more about: திரு சங்கரபாண்டியன்  »

நேர்காணல்

வட்டாச்சியார் மரபுக்கவிஞரானார்

லோகநாதன் ஜி

விருதுநகர் மாவட்ட வட்டாட்சியர், வருவாய் வட்டாட்சியர், சமூக ஆர்வலர், சிறந்த தமிழறிஞர், மிகச்சிறந்த மரபுக் கவிஞர் போன்ற பன்முகத் திறமையுடன் இருக்கும்,. ஐயா லோகநாதன் ஜி அவர்களின் சுவாரஸ்யமான பேட்டி இதோ.

 » Read more about: வட்டாச்சியார் மரபுக்கவிஞரானார்  »