ஹைக்கூ

வஃபீரா வஃபி

01.
தாவும் குரங்கு
நதியில் தலைமுழுகி எழும்
மரக்கிளை

02.
நண்பகல் வேளை
சக்கரங்களிடை சிக்கித் தவிக்கும்
வண்டி நிழல்

 03.
உயர்ந்த பாறை
ஓய்வெடுக்க முடியாமல் திரும்பும்
கடலலைகள்.

 04.
காலை வெயில்
யன்னல் திரையில் ஆடும்
பூனையின் நிழல்.

 05.
குறி வைக்கும் கவண்
சட்டென நகர்ந்து மறையும்
மாலைச் சூரியன்.

06.
இலையுதிர்க்காலம்
மரக்கிளை எங்கும் பூத்திருக்கும்
கொக்குக் கூட்டம்.

07.
கொட்டும் அருவி
கற்பாறையில் துவைக்கப் படும்
பௌர்ணமி நிலவு

08.
குளக்கரையில் முதியவர்
கூடவே நடை பயிலும்
ஒற்றை நாரை.

09.
ஆற்றோரத் தென்னை
அங்குமிங்குமாய் நடை பயிலும்
தென்னங்கீற்றின் நிழல்.

10.
கொள்ளை போன மணல்
தேடி ஊருக்குள் வரும்
காட்டாற்று வெள்ளம்

11.
உதிரும் பூ
விழாமல் தாங்கிப் பிடிக்கும்
சிலந்திவலை.

12.
பூசாரியை முந்திச் சென்று
கர்ப்பக்கிரகத்துள் நுழையும்
காலை வெயில்.

13.
மரத்தடியில் கைம்பெண்
பூவைத்துப் பொட்டிட்டுச் செல்லும்
வீசிய காற்று.

 14.
பௌர்ணமி இரவு
அலையோடு  சேர்ந்தே கரைபுரளும்
பின்னிரவின் நிலவொளி.

15.
ஊர் சுற்றிப் பார்த்து/
தன் ஆயுள் முடிக்கும்
நீர்க்குமிழி.

16.
எங்கிருந்து புறப்பட்டதோ
ஊர் சுற்றிப் பார்க்கும்
வண்ண நீர்க்குமிழி.

17.
கொதிக்கும் உலை
கீற்றிடை விழுந்து வேகும்
சூரியன்.

18.
கரையில் நெருப்பு
அச்சமின்றி  ஊடறுத்துச் செல்லும்
குளத்து மீன்.

19.
வீசிய தூண்டில்
ஏரியெங்கும் வண்ணங்களைப் பரப்பும்
மாலைச் சூரியன்.

20.
அவசர நகர்வு
நின்று ரகசியம் பேசும்
எறும்புக் கூட்டம்..


3 Comments

Dr.M.Tamilselvi · ஜூலை 18, 2020 at 17 h 29 min

ஹக்கூ
காற்றில் என்னைக்
காற்றாட உலவ விட்ட
கவித் தூரிகை.
வாழ்த்துகள் அம்மா.

wafeera wafi · ஜூலை 20, 2020 at 10 h 13 min

@Tamilselvi அன்பின் நன்றிகள் அம்மா!!!!!!!!!!!!

Sarji · செப்டம்பர் 2, 2020 at 17 h 37 min

அனைத்தும் அருமை…வாழ்த்துகள் சகோ

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

Related Posts

மின்னிதழ்

நிந்தவூர் உஸனார் ஸலீம்

இலங்கயில் மீன் பாடும் கிழக்கு மாகாணத்தில் நிந்தவூரில் பிறந்து , வளர்ந்து, வாழ்ந்து வரும் பிரபலமான பல்துறை ஆளுமைகள் நிறைந்த நிந்தவூர் உஸனார் ஸலீம் அவர்களை “தமிழ் நெஞ்சம்” நூலுக்காக நேர்காணல் செய்வதில் அகம் மகிழ்கிறேன் இவரது கை எழுத்துக்கள் அச்சில் வார்த்தது போல் அழகாக இருப்பது இறைவன் இவருக்கு கொடுத்த அருள் என்றே கூறலாம்.இலங்கை நாட்டில் கலை இலக்கிய துறையில் கூடிய ஆர்வாளர்களைக் கொண்ட கிழக்கு மாகாணத்திலிருந்து விடிவெள்ளியாய் பிரகாசிக்கும் நிந்தவூர் உஸனார் ஸலீம் அவர்களை அன்போடு வரவேற்றுக் கொண்டு வினாக்களுக்கு வருகிறேன்.

 » Read more about: நிந்தவூர் உஸனார் ஸலீம்  »

நேர்காணல்

எண்ணங்கள் வளமானால் எழுத்துகள் வசீகரமாகும்

இலக்கிலக்கிய உலகில் வலுவான எழுத்துத் திறனோடு, அனுபவங்களை உணர்வு மாறாமல் எழுதும் வித்தையோடு வலம் வந்து கொண்டிருக்கும் திரு கி இரகுநாதன் அவர்களுக்கு என் முதல் வணக்கம்.

இனிய வணக்கம் விஜிம்மா.

 » Read more about: எண்ணங்கள் வளமானால் எழுத்துகள் வசீகரமாகும்  »

நேர்காணல்

தேசமான்ய பாரா தாஹீர்

பிரபல எழுத்தாளரும் ஊடகவியலாளரும் சமூகசேவையாளருமான மாவனல்லை பாரா தாஹீர் உடனான நேர்காணலோடு இவ்விதழில் உங்களை சந்திக்கிறோம்.
இலக்கியத்துறையில் பல சாதனைகளை நிகழ்த்தி இன்று வரை தொடர்ந்து இலக்கியத்திற்குப் பெரும் பங்காற்றிக்கொண்டிருக்கும் இவர் நூற்றுக்கணக்கான கவிதைகள் மற்றும் சிறுகதைகளை எழுதியுள்ளார்.  » Read more about: தேசமான்ய பாரா தாஹீர்  »