11.
உதிரும் பூ
விழாமல் தாங்கிப் பிடிக்கும்
சிலந்திவலை.
12.
பூசாரியை முந்திச் சென்று
கர்ப்பக்கிரகத்துள் நுழையும்
காலை வெயில்.
13.
மரத்தடியில் கைம்பெண்
பூவைத்துப் பொட்டிட்டுச் செல்லும்
வீசிய காற்று.
14.
பௌர்ணமி இரவு
அலையோடு சேர்ந்தே கரைபுரளும்
பின்னிரவின் நிலவொளி.
15.
ஊர் சுற்றிப் பார்த்து/
தன் ஆயுள் முடிக்கும்
நீர்க்குமிழி.
16.
எங்கிருந்து புறப்பட்டதோ
ஊர் சுற்றிப் பார்க்கும்
வண்ண நீர்க்குமிழி.
17.
கொதிக்கும் உலை
கீற்றிடை விழுந்து வேகும்
சூரியன்.
18.
கரையில் நெருப்பு
அச்சமின்றி ஊடறுத்துச் செல்லும்
குளத்து மீன்.
19.
வீசிய தூண்டில்
ஏரியெங்கும் வண்ணங்களைப் பரப்பும்
மாலைச் சூரியன்.
20.
அவசர நகர்வு
நின்று ரகசியம் பேசும்
எறும்புக் கூட்டம்..
3 Comments
Dr.M.Tamilselvi · ஜூலை 18, 2020 at 17 h 29 min
ஹக்கூ
காற்றில் என்னைக்
காற்றாட உலவ விட்ட
கவித் தூரிகை.
வாழ்த்துகள் அம்மா.
wafeera wafi · ஜூலை 20, 2020 at 10 h 13 min
@Tamilselvi அன்பின் நன்றிகள் அம்மா!!!!!!!!!!!!
Sarji · செப்டம்பர் 2, 2020 at 17 h 37 min
அனைத்தும் அருமை…வாழ்த்துகள் சகோ