ஹைக்கூ

வஃபீரா வஃபி

01.
தாவும் குரங்கு
நதியில் தலைமுழுகி எழும்
மரக்கிளை

02.
நண்பகல் வேளை
சக்கரங்களிடை சிக்கித் தவிக்கும்
வண்டி நிழல்

 03.
உயர்ந்த பாறை
ஓய்வெடுக்க முடியாமல் திரும்பும்
கடலலைகள்.

 04.
காலை வெயில்
யன்னல் திரையில் ஆடும்
பூனையின் நிழல்.

 05.
குறி வைக்கும் கவண்
சட்டென நகர்ந்து மறையும்
மாலைச் சூரியன்.

06.
இலையுதிர்க்காலம்
மரக்கிளை எங்கும் பூத்திருக்கும்
கொக்குக் கூட்டம்.

07.
கொட்டும் அருவி
கற்பாறையில் துவைக்கப் படும்
பௌர்ணமி நிலவு

08.
குளக்கரையில் முதியவர்
கூடவே நடை பயிலும்
ஒற்றை நாரை.

09.
ஆற்றோரத் தென்னை
அங்குமிங்குமாய் நடை பயிலும்
தென்னங்கீற்றின் நிழல்.

10.
கொள்ளை போன மணல்
தேடி ஊருக்குள் வரும்
காட்டாற்று வெள்ளம்

11.
உதிரும் பூ
விழாமல் தாங்கிப் பிடிக்கும்
சிலந்திவலை.

12.
பூசாரியை முந்திச் சென்று
கர்ப்பக்கிரகத்துள் நுழையும்
காலை வெயில்.

13.
மரத்தடியில் கைம்பெண்
பூவைத்துப் பொட்டிட்டுச் செல்லும்
வீசிய காற்று.

 14.
பௌர்ணமி இரவு
அலையோடு  சேர்ந்தே கரைபுரளும்
பின்னிரவின் நிலவொளி.

15.
ஊர் சுற்றிப் பார்த்து/
தன் ஆயுள் முடிக்கும்
நீர்க்குமிழி.

16.
எங்கிருந்து புறப்பட்டதோ
ஊர் சுற்றிப் பார்க்கும்
வண்ண நீர்க்குமிழி.

17.
கொதிக்கும் உலை
கீற்றிடை விழுந்து வேகும்
சூரியன்.

18.
கரையில் நெருப்பு
அச்சமின்றி  ஊடறுத்துச் செல்லும்
குளத்து மீன்.

19.
வீசிய தூண்டில்
ஏரியெங்கும் வண்ணங்களைப் பரப்பும்
மாலைச் சூரியன்.

20.
அவசர நகர்வு
நின்று ரகசியம் பேசும்
எறும்புக் கூட்டம்..


3 Comments

Dr.M.Tamilselvi · ஜூலை 18, 2020 at 17 h 29 min

ஹக்கூ
காற்றில் என்னைக்
காற்றாட உலவ விட்ட
கவித் தூரிகை.
வாழ்த்துகள் அம்மா.

wafeera wafi · ஜூலை 20, 2020 at 10 h 13 min

@Tamilselvi அன்பின் நன்றிகள் அம்மா!!!!!!!!!!!!

Sarji · செப்டம்பர் 2, 2020 at 17 h 37 min

அனைத்தும் அருமை…வாழ்த்துகள் சகோ

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

Related Posts

நேர்காணல்

உலகின் சரிபாதி பெண்

வணக்கம் தங்களைப் பற்றித் சுருக்கமாகக்கூற முடியுமா?

ஆம் நான் அ.ல.முகைமினா. எழுத்தாளர், ஆசிரியர், கவிஞர் சமாதான நீதவான் மற்றும் அரசியல் வாதியாக சமூகத்துக்காக சமூக செயற்பாட்டாளராக, ஊடக வியலாளராக என்னை அர்ப்பணம் செய்து வருகிறேன்.

 » Read more about: உலகின் சரிபாதி பெண்  »

நேர்காணல்

நக்கீரர் வழியில் பட்டுக்கோட்டை அ.த.பன்னீர்செல்வம்

பட்டுக்கோட்டை நகரில் புகழ் பூத்த தமிழ்க்குடும்பம் மீ. தங்கவேலனார் அவர்கள் குடும்பம் அந்தக் குடும்பத்தில் மூத்த தலைமகன் திரு அ.த. பன்னீர்செல்வம் அவர்கள் பட்டுக்கோட்டை நகரில் நக்கீரர் என்று பெயர் பெற்றவர் ஆய்வுச் சுடர் என்ற  பெருமைக்குரியவர்..

 » Read more about: நக்கீரர் வழியில் பட்டுக்கோட்டை அ.த.பன்னீர்செல்வம்  »

நேர்காணல்

இலக்கிய வித்தகர் மஷூறா சுஹூறுத்தீன்

சம்மாந்துறையைப் பிறப்பிடமாகவும் தற்போது மருதமுனையை வசிப்பிடமாகவும் கொண்டவர் சித்தி மஷூறா சுஹூறுத்தீன். 1979 ல் மஷூறா ஏ மஜீத் என்ற பெயரில் வானொலியில் எழுதவாரம்பித்து இலங்கையின் தேசிய பத்திரிகைகள் அனைத்திலும் மற்றும் சஞ்சிகைகளிலும் எழுதியவர்.

 » Read more about: இலக்கிய வித்தகர் மஷூறா சுஹூறுத்தீன்  »