ஹைக்கூ

வஃபீரா வஃபி

01.
தாவும் குரங்கு
நதியில் தலைமுழுகி எழும்
மரக்கிளை

02.
நண்பகல் வேளை
சக்கரங்களிடை சிக்கித் தவிக்கும்
வண்டி நிழல்

 03.
உயர்ந்த பாறை
ஓய்வெடுக்க முடியாமல் திரும்பும்
கடலலைகள்.

 04.
காலை வெயில்
யன்னல் திரையில் ஆடும்
பூனையின் நிழல்.

 05.
குறி வைக்கும் கவண்
சட்டென நகர்ந்து மறையும்
மாலைச் சூரியன்.

06.
இலையுதிர்க்காலம்
மரக்கிளை எங்கும் பூத்திருக்கும்
கொக்குக் கூட்டம்.

07.
கொட்டும் அருவி
கற்பாறையில் துவைக்கப் படும்
பௌர்ணமி நிலவு

08.
குளக்கரையில் முதியவர்
கூடவே நடை பயிலும்
ஒற்றை நாரை.

09.
ஆற்றோரத் தென்னை
அங்குமிங்குமாய் நடை பயிலும்
தென்னங்கீற்றின் நிழல்.

10.
கொள்ளை போன மணல்
தேடி ஊருக்குள் வரும்
காட்டாற்று வெள்ளம்

11.
உதிரும் பூ
விழாமல் தாங்கிப் பிடிக்கும்
சிலந்திவலை.

12.
பூசாரியை முந்திச் சென்று
கர்ப்பக்கிரகத்துள் நுழையும்
காலை வெயில்.

13.
மரத்தடியில் கைம்பெண்
பூவைத்துப் பொட்டிட்டுச் செல்லும்
வீசிய காற்று.

 14.
பௌர்ணமி இரவு
அலையோடு  சேர்ந்தே கரைபுரளும்
பின்னிரவின் நிலவொளி.

15.
ஊர் சுற்றிப் பார்த்து/
தன் ஆயுள் முடிக்கும்
நீர்க்குமிழி.

16.
எங்கிருந்து புறப்பட்டதோ
ஊர் சுற்றிப் பார்க்கும்
வண்ண நீர்க்குமிழி.

17.
கொதிக்கும் உலை
கீற்றிடை விழுந்து வேகும்
சூரியன்.

18.
கரையில் நெருப்பு
அச்சமின்றி  ஊடறுத்துச் செல்லும்
குளத்து மீன்.

19.
வீசிய தூண்டில்
ஏரியெங்கும் வண்ணங்களைப் பரப்பும்
மாலைச் சூரியன்.

20.
அவசர நகர்வு
நின்று ரகசியம் பேசும்
எறும்புக் கூட்டம்..


3 Comments

Dr.M.Tamilselvi · ஜூலை 18, 2020 at 17 h 29 min

ஹக்கூ
காற்றில் என்னைக்
காற்றாட உலவ விட்ட
கவித் தூரிகை.
வாழ்த்துகள் அம்மா.

wafeera wafi · ஜூலை 20, 2020 at 10 h 13 min

@Tamilselvi அன்பின் நன்றிகள் அம்மா!!!!!!!!!!!!

Sarji · செப்டம்பர் 2, 2020 at 17 h 37 min

அனைத்தும் அருமை…வாழ்த்துகள் சகோ

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

நேர்காணல்

சோழவந்தான் கவிச்சிங்கம்…

மதுரை என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது தமிழ். தமிழின்றி மதுரையில்லை; மதுரையின்றித் தமிழின் வரலாற்றை எழுதிவிட முடியாது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சங்கம் வைத்து நம்மொழியை வளர்த்தவர்கள் மதுரை மக்கள். இன்றும் பல்வேறு பெயர்களில் சங்கம் வைத்து , அறக்கட்டளை வைத்து, மன்றங்கள் வைத்து, புலனக்குழு முகநூல்குழுக்கள் வைத்து மொழியை வளர்த்துவரும் மதுரையில் அதன்பெயரிலேயே தமிழ்மதுரை அறக்கட்டளை எனும் பெயரில் ஒரு அறக்கட்டளை வைத்து , மொழிவளர்க்கும் சான்றோர்களுக்குப் விருது வழங்கி , பள்ளி கல்லூரிகளுக்குச் சென்று தமிழ்ப்பற்றை அதிகப்படுத்தும் பணிகளச் செய்துவரும் ஒருவரே இம்மாதச் சிறப்பு விருந்தினர் ஆவார். ஆம் சித்தார்த் பாண்டியன் எனும் புனைப்பெயருடன் வலம்வரும் தூயதமிழ்ப் பற்றாளர் தமிழ்மதுரை அறக்கட்டளை நிறுவுநர் சோழவந்தான் கவிச்சிங்கம் தங்கபாண்டியன் அவர்களுடன் தமிழ்ச்செம்மல் இராம வேல்முருகன் செய்த நேர்காணல் இதோ..

நேர்காணல்

கலாபூஷணம் புசல்லாவை இஸ்மாலிஹா ராஜா

I மின்னிதழ் I நேர்காணல் I கலாபூஷணம் புசல்லாவை இஸ்மாலிஹா ராஜா

‘’மலையகத்தில் கற்றவர்கள் அதிகமாக காணப்படுவது பெருமைக்குரிய விடயமாகும்’’

மலையகக் கவிஞர், எழுத்தாளர்,

 » Read more about: கலாபூஷணம் புசல்லாவை இஸ்மாலிஹா ராஜா  »

நேர்காணல்

கிழக்கில் உதித்த தாரகை, இலக்கிய வானிலும் சாதனை

I மின்னிதழ் I நேர்காணல் I  மருத்துவர் ஜலீலா முஸம்மில்

தொழில்ரீதியாக மருத்துவராக சேவை செய்யும் டொக்டர் ஜலீலா முஸம்மில், பன்முகத் திறமைகளோடு இலக்கிய  வானிலும் ஆளுமை செய்கிறவர். சுறுசுறுப்பில் தேனீயாக இயங்கி திக்குகள் எட்டிலும் துலங்குகிறவர்.

 » Read more about: கிழக்கில் உதித்த தாரகை, இலக்கிய வானிலும் சாதனை  »