மேலேயுள்ள ஹைக்கூ திண்ணை 7  இதழின் முகப்புப் பக்கத்தை சுட்டியால் தட்டி அல்லது டச் செய்து இதழினை தரவிறக்கம் செய்து படிக்கவும்.

பெயர்ச்சொல்லே ஈற்றடி

மின்னல் அடித்தால் அதிர்ச்சி உண்டாவது போல நல்லதொரு ஹைக்கூ படித்தால் நமக்கு ஒரு வித இன்ப அதிர்ச்சி உண்டாக வேண்டும்.

அவ்வாறு அதிர்ச்சியைத் தருவது அதன் ஈற்றடிதான் என்றால் அது மிகையாகா. அத்தகைய ஈற்றடி

‘போகிறது / வருகிறது / நிற்கிறது’ போன்ற வினைச் சொல்லாக இல்லாமல், ‘வானம் / ஊர்வலம் / ஆடும் மயில் /’ போன்ற ஒரு பெயர்ச்சொல்லாக இருந்தால் மாத்திரமே அது சாத்தியம். ஆதலால்த்தான் ‘‘ஹைக்கூவின் ஈற்றடி ஒரு பெயர்ச்சொல்லாக இருக்க வேண்டும்’’ என்பது முக்கிய நிபந்தனைகளில் ஒன்றாக இருக்கிறது. இது ஹைக்கூ எழுதும் பலருக்குத் தெரியவில்லை. சும்மா மூன்று வரி எழுதினால் அது ஹைக்கூ என்று நினைத்து எழுதித் தள்ளுகின்றனர். அவற்றில் எந்தவித சுவாரஷ்யமும் இருப்தில்லை. அந்தோ பரிதாபம்!

ஹைக்கூவின் முதல் இரு வரிகளும் ஒரு கூறாகும். எடுத்துக் காட்டாக

மரண வீட்டில்
புகைந்து கொண்டிருக்கிறது

இவ்விரு வரிகளையும் படிக்கும்போதே வாசகராகிய நம் மனக்கண் முன் மரணவீடு வந்து நிற்கும். கூடவே ஆங்காங்கு புகையும் மணக்குச்சியும் வந்து நிற்கும்.

இது அடிக்கடி நாம் காணும் காட்சிதான்! சில காரணங்களுக்காக பல்வேறு வாசனை உள்ள சந்தனக் குச்சிகளை தீயிட்டுக் கொளுத்தி புகைய விடுவார்கள்.

இவ்வாறு நாம் சிந்திக்க…

கவிஞனோ நாம் சற்றும் எதிர்பாராதபடி

மரண வீட்டில்
புகைந்து கொண்டிருக்கிறது
சொத்து விவகாரம்

~ அனுராஜ்

என்று போட்டு நம்மை திகைப்பில் ஆழ்த்திவிடுகிறான். அப்பக்கம் சிந்தித்தால் உறவினரின் கிசுகிசுப்பு, பின் கைகலப்பு, அதன் பின் போலிஸ் வருகை என விரிந்து கொண்டு போகும்.

சுமார் ஆறு வருடங்களுக்கு முன் இக் கவிதையைப் படித்தேன். எழுதியவரின் பெயரோடு நன்றாக ஞாபகமிருக்கிறது. இப்போதெல்லாம் படிக்கும் கவிதைகள் அவ்வாறு ஞாபகமிருப்ப தில்லை காரணம் உப்புச்சப்பில்லாமல் இருப்பதுதான்.

கவிஞர்கள் இங்கு நான் சொல்ல வந்ததைப் புரிந்து கொண்டு இனி சிறப்பாக எழுதி – ஒரு கவிதையாயினும் – அதை உருப்படியாய் எழுதி வாசகராகிய எம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்த வேண்டும் என அன்போடு கேட்டுக் கொள்கின்றேன்.

இவண்,
என்றும் தங்கள் தோழமையுள்ள
சத்தார் எம். அஸாத்


6 Comments

க.குணசேகரன் · ஆகஸ்ட் 30, 2021 at 4 h 01 min

Very nice.

வைகைபுத்திரன் · ஆகஸ்ட் 30, 2021 at 14 h 36 min

தமிழ்நெஞ்சம் தமிழை நேசிக்கவும் வாசிக்கவும் உகந்தது. உயர்ந்தது

பாவலர்.கருமலைப் பழம் நீ · செப்டம்பர் 2, 2021 at 5 h 50 min

உங்கள் கருத்து. ..ஏற்புடையது.
சில கவிஞர்கள் ஈற்றடியில் கோட்டை விட்டுவிடுகிறார்கள்..உண்மைதான்.

இலவச மின்விசிறி
வேகமாய் சுற்றுகிறது
காற்று வீசும் போது
— கருமலை

M.H.M SIYAJ · செப்டம்பர் 5, 2021 at 3 h 51 min

சிறப்பு உங்கள் பணி வரவேற்க தக்கது உங்களை வாழ்த்த வார்த்தைகள் இல்லை இன்ஷா அல்லாஹ் 51 ஆவது ஆண்டில் தடம் பதிக்க இருக்கும் உங்கள் தமிழ்நெஞ்சம் சஞ்சிகையை வாழ்த்துவதுடன் நூற்றாண்டிலும் தடம்பதிக்க வல்ல இறைவன் துணைபுரிவானாக…

sreegethkumaar@gmail.com · செப்டம்பர் 6, 2021 at 21 h 25 min

சிறப்பு விளக்கம்

அ.செல்லபெருமாள் · செப்டம்பர் 9, 2021 at 11 h 32 min

ஹைகூ திண்ணை படித்தேன்
மனசுல ஒட்டிக்கிச்சு

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

நேர்காணல்

பாவலர் கண்ணதாச முருகன்

புகழ்வரினும் இகழ்வரினும் பூதலமே எதிர்வரினும் புகலென்றும் கண்ணணுக்கே! கருவில் கலந்தாள் ககன விரிவாள் திருவாள் உயிர்ப்பாள் தெற்காள் - தருவாள் உருவால் வடிவாள் ஒலியால் இசையாள் கருத்தாழ்த் தமிழைக் களி! என, உயிராய் மூச்சாய் உணர்வாய் உலகில் மூத்த இளையாள் தமிழன்னையை வணங்கி தமிழ்நெஞ்சம் வழங்கும் இந்த நேர்காணலைத் தொடங்குகிறேன். வணக்கம் வாழும் ஔவை அன்புவல்லி அம்மா. தமிழால் மூத்த தங்களால் இந்த நேர்காணலில் இல் இளையோன் கலந்து கொண்டதில் மற்றற்ற மகிழ்ச்சி அம்மா.

நேர்காணல்

செம்மொழிக் காவலர் சௌமா இராசரத்தினம்

I மின்னிதழ் I செம்மொழிக் காவலர் சௌமா இராசரத்தினம்

இத்திங்கள் ஒரு மிகச்சிறந்த ஆளுமையாளரை நேர்காணல் செய்யவிருக்கிறோம். பள்ளிக்கூடங்களின் தாளாளர், ஒரு எழுபதாண்டு காலத் தமிழ்மன்றத்தின் தலைவர், பன்னாட்டு அரிமா சங்கத்தில்  தமிழில் நோக்கத்தை மொழிந்த அரிமா ஆளுநர்,

 » Read more about: செம்மொழிக் காவலர் சௌமா இராசரத்தினம்  »

மரபுக் கவிதை

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பே என்றும் உயர்வாகும்!
உடலை உறுதி ஆக்கிவிடும்!
தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே
தளரா உழைப்பின் பலனன்றோ!

 » Read more about: உழைப்பாளர்களை உயர்த்துவோம்  »