ராமுவுக்கு ஞாபகமறதி அதிகம். ஆனால் அதை அவன் ஒப்புக் கொள்ளவே மாட்டான்.

ஒருநாள் அவன் வாக்கிங் போகும்போது ஒரு போர்டைப் பார்த்தான்.

‘டாக்டர் பூதலிங்கம் – மனோதத்துவ நிபுணர்’.

‘இவரை கன்ஸல்ட் செய்தால் என்ன?’ என்று நினைத்தவன்… உள்ளே நுழைந்தான்.

“வாங்க… உட்காருங்க”.

“எனக்கு ஞாபகமறதி அதிகமா இருக்கறதா எல்லாரும் சொல்றாங்க…” என்று இழுத்தான் ராமு.

“ஓ.கே.. லெட் அஸ் ஸீ… உங்களுக்கு கல்யாணம் ஆகிவிட்டதா?” இந்த விஷயத்தில் அவனுக்கு மறதியே கிடையாது.

“ஆகிவிட்டது” என்றான்.

“உங்கள் டெலிபோன் நம்பர் ஞாபகமிருக்கிறதா…?”

டைரியை எடுத்தான் ராமு.

“நோ… நோ… டைரியைப் பார்த்து நான்கூட சொல்லி விடுவேன்… உங்களுக்கு ஞாபக மறதி அதிகமாகவே இருக்கிறது. ப்ரெயின் ஸ்கேன் எடுக்கும்படியாக இருக்கும். ஐயாயிரம் ரூபாய் வரை ஆகலாம்.”

“அவ்வளவா…” ராமு கவலையுடன் கேட்டான்.

“தவிர, இதற்கு ஒரே வழிதான் இருக்கிறது.”

“என்ன சார்…?”

“நீங்கள் உடனே ஒரு நல்ல மனோதத்துவ நிபுணரைப் பாருங்கள்…”

“அப்படியானால் நீங்கள்?” கோபத்துடன் கேட்டான் ராமு.

“நான் இங்கு கீழ் போர்ஷனில் குடியிருக்கிறேன். டாக்டர் மாடியில் இருக்கிறார்…” கலகலவென்று சிரித்தார் அவர்.


1 Comment

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

Related Posts

சிறுகதை

என் காதல் ரோசா

‘‘தானேத் தன்னான்னே ஏய்
தானேத் தன்னான்னே
நல்லா தடம் பாத்து
நடவு நடு
தானேத் தன்னான்னே
தை மாசம் அறுக்கனுமே
தானேத் தன்னான்னே
தாளம்போட்டு நடவு நடு
தானேத் தன்னான்னே
நல்லா தரை பாத்து
வெளயனுமே
தானேத் தன்னான்னே..!’’

என்று அழகாய் மெட்டெடுத்து,

 » Read more about: என் காதல் ரோசா  »

சிறுகதை

அந்த ஒரு நிலவு

அத்தனை எளிதாய் இல்லை இருந்தும் மிகவும் நேர்த்தியாகவே கையாண்டு கொண்டிருந்தாள் அந்த காலையை அரக்க பரக்க ஓடி பேருந்தை அடைந்தவளை மட்டுமே எதிர்நோக்கிக் கொண்டிருப்பதைப் போல அவள் வருகைக்கும் பேருந்திற்கும் சரியாக இருந்தது. காலையில் குறிப்பிட்ட நேரத் துக்கு முன்பே அனு அந்த ஆபிஸுக்கு வந்து விட்டாள்.

 » Read more about: அந்த ஒரு நிலவு  »

சிறுகதை

ரெட்டைக் கிணறு

அந்திசாயும் வேளையில் சூரியன் மேற்கே மறைந்து கொண்டு இருந்தது. சாமியப்பன் அந்த பச்சை வயல்களுக்கு நடுவே அமைந்திருந்த கிணற்றை மெய் மறந்து பார்த்துக் கொண்டிருந்தான். நீண்ட நாட்களுக்கு பிறகு விடுமுறையில் சொந்த ஊர் திரும்பி இருக்கிறான்.

 » Read more about: ரெட்டைக் கிணறு  »