ராமுவுக்கு ஞாபகமறதி அதிகம். ஆனால் அதை அவன் ஒப்புக் கொள்ளவே மாட்டான்.

ஒருநாள் அவன் வாக்கிங் போகும்போது ஒரு போர்டைப் பார்த்தான்.

‘டாக்டர் பூதலிங்கம் – மனோதத்துவ நிபுணர்’.

‘இவரை கன்ஸல்ட் செய்தால் என்ன?’ என்று நினைத்தவன்… உள்ளே நுழைந்தான்.

“வாங்க… உட்காருங்க”.

“எனக்கு ஞாபகமறதி அதிகமா இருக்கறதா எல்லாரும் சொல்றாங்க…” என்று இழுத்தான் ராமு.

“ஓ.கே.. லெட் அஸ் ஸீ… உங்களுக்கு கல்யாணம் ஆகிவிட்டதா?” இந்த விஷயத்தில் அவனுக்கு மறதியே கிடையாது.

“ஆகிவிட்டது” என்றான்.

“உங்கள் டெலிபோன் நம்பர் ஞாபகமிருக்கிறதா…?”

டைரியை எடுத்தான் ராமு.

“நோ… நோ… டைரியைப் பார்த்து நான்கூட சொல்லி விடுவேன்… உங்களுக்கு ஞாபக மறதி அதிகமாகவே இருக்கிறது. ப்ரெயின் ஸ்கேன் எடுக்கும்படியாக இருக்கும். ஐயாயிரம் ரூபாய் வரை ஆகலாம்.”

“அவ்வளவா…” ராமு கவலையுடன் கேட்டான்.

“தவிர, இதற்கு ஒரே வழிதான் இருக்கிறது.”

“என்ன சார்…?”

“நீங்கள் உடனே ஒரு நல்ல மனோதத்துவ நிபுணரைப் பாருங்கள்…”

“அப்படியானால் நீங்கள்?” கோபத்துடன் கேட்டான் ராமு.

“நான் இங்கு கீழ் போர்ஷனில் குடியிருக்கிறேன். டாக்டர் மாடியில் இருக்கிறார்…” கலகலவென்று சிரித்தார் அவர்.


1 Comment

LinkedIN Scraping · ஏப்ரல் 16, 2025 at 15 h 51 min

I’m extremely inspired along with your writing talents and also with the layout
on your weblog. Is this a paid subject matter or did you customize it your self?
Either way keep up the nice high quality writing, it is rare to see a great blog like this one today.
Instagram Auto comment!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

Related Posts

தொடர் கதை

மஹ்ஜபின் – 3

தொடர் – 03

அவர் வேலை தேடி சவூதி அரேபியா வுக்குச் செல்ல தயாராகிக் கொண்டிருந்த காலம் அது.

கனவுச் சிறைக்குள் சுதந்திரக் கைதி யாய் சிறகடித்த அவளின் தாய்க்கு வெளி நாட்டு வாழ்க்கையில் இஷ்டம் இல்லை.

 » Read more about: மஹ்ஜபின் – 3  »

தொடர் கதை

மஹ்ஜபின் – 2

தொடர் – 02

எப்படியாவது தனது மனதில் உள்ள மூன்றாண்டுக் கால காதலை மஹ்ஜபினிடம் சொல்லி விட வேண்டும் என்ற முடிவுடன் அன்றொரு நாள் அவளைச் சந்தித்து தனது காதலையும் நேசத்தையும் காத்திருப்பையும் சொல்லி முடித்தான் கஷ்வின்.

 » Read more about: மஹ்ஜபின் – 2  »

தொடர் கதை

மஹ்ஜபின் – 1

மஹ்ஜபின் என அறிந்து கொண்ட நாட்களில்  இருந்து கஷ்வின் அவளை தன் இதயவரையில் மாளிகை கட்டி குடியமர்த்தி இருந்தான். மறு புறமாக ரீஸாவை பார்க்கும் போதல்லாம் அவள் மஹ்ஜபீன் தான் எனத் தெரியாமல் அவளை தப்புத் தப்பாக எண்ணியதை நினைத்து வெட்கித்து தலையை கவிழப் போட்டான். சுமார் மூன்று நான்கு வருடங்களாக அவனது நாடி நாளங்களில் எல்லாம் உருத் தெரியாமல் ஊடுருவி வாழ்ந்து கொண்டிருந்த மஹ்ஜபினின் முகத்தை கண்டு விட்டான் கஷ்வின்.... யுகம் யுகமாய் தவமிருந்த முனிவனுக்கு கிடைத்த வரம் போல இன்றேனும் மஹ்ஜபினைக் கண்டு விட்ட ஜென்மானந்தம் அவனுக்குள் சொல்லி மகிழ வார்த்தைகளே இன்றி அவளுடைய உள்ளமெங்கும் பட்டாம்பூச்சிகள் சிறகடித்தன..