குளிரும்.. மழையும் கைகோர்த்து..

அஸ்ஸாமின் அழகிய நகரம் ஜோர்ஹட்டை மேலும் அழகாக்கி கொண்டிருந்தன..

மாலை நான்கு மணிக்கே இருள் சூழத் தொடங்கியது..

பரத் அம்மா வீட்டிற்குள் நுழைந்தேன்.. அவர் கணவருடன் பணிபுரியும் இளைஞரொருவர் திருமண அழைப்பிதழ் கொடுத்து அழைத்து விட்டு வெளியேறினார்..

தயாராகயிருந்த பால் பொடியில் போட்ட தேனீர் கோப்பையை தந்தாள்..

அவளும் பருகிய படி தொடங்கினாள்..

வந்துட்டுப்போனானே.. அவன் யாரு தெரியுமாயென்றாள்..

தெரியாதே யாருன்னு கேட்டேன்..

எங்கவூர் வெட்டியான் மவன்.. ஊருக்குள்ள உள்ளயே சேர்க்க மாட்டோம்.. இங்க பாரு யோகத்த.. ஊர்க்காரனுங்க கிட்ட கூட சொல்லிடக் கூடாது.. சண்டைக்கு வருவாங்க.. இவனல்லாம் கல்யாணத்துக்கு பத்ரிகை வெச்சுட்டுப் போறான்..

சொல்லிவிட்டு.. அந்த இளைஞர் குடித்த தேனீர் டம்ளரை தண்ணிரைக் கொட்டி கழுவி எடுத்து வைத்தாள்..

பத்து நிமிடம் முன்பு வந்து சென்ற இளைஞனை ஞாபகப்படுத்தி பார்த்தேன்.. நல்ல படிப்பு.. நல்ல வேலை.. விமானப் படை வீரர் உடையில் மிடுக்குடன் நுனி நாக்கில் ஆங்கிலமும்.. அச்சா அச்சாயென நடுவில் ஹிந்தியும் மரியாதையை கூட்டிய வேளையில்..

இப்படியொரு விமர்சனத்தை எதிர்பார்க்க வில்லை.. புறந்தள்ளப்பட்ட வகுப்பினர் முன்னேறிச் சென்றாலும்.. முன்னேறிய மனிதர்களின் மன நிலையின்னும் முழுவதுமாக மாறவில்லை..

இனி வரும் காலத்தில் மாறுமா..??

அதுவும் ஒரு நாள் மாறுமென்ற நம்பிக்கையில் இதையும் எனது டைரிக்குறிப்பில் எழுதி வைத்தேன்..


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

தொடர் கதை

மஹ்ஜபின் – 3

தொடர் – 03

அவர் வேலை தேடி சவூதி அரேபியா வுக்குச் செல்ல தயாராகிக் கொண்டிருந்த காலம் அது.

கனவுச் சிறைக்குள் சுதந்திரக் கைதி யாய் சிறகடித்த அவளின் தாய்க்கு வெளி நாட்டு வாழ்க்கையில் இஷ்டம் இல்லை.

 » Read more about: மஹ்ஜபின் – 3  »

தொடர் கதை

மஹ்ஜபின் – 2

தொடர் – 02

எப்படியாவது தனது மனதில் உள்ள மூன்றாண்டுக் கால காதலை மஹ்ஜபினிடம் சொல்லி விட வேண்டும் என்ற முடிவுடன் அன்றொரு நாள் அவளைச் சந்தித்து தனது காதலையும் நேசத்தையும் காத்திருப்பையும் சொல்லி முடித்தான் கஷ்வின்.

 » Read more about: மஹ்ஜபின் – 2  »

தொடர் கதை

மஹ்ஜபின் – 1

மஹ்ஜபின் என அறிந்து கொண்ட நாட்களில்  இருந்து கஷ்வின் அவளை தன் இதயவரையில் மாளிகை கட்டி குடியமர்த்தி இருந்தான். மறு புறமாக ரீஸாவை பார்க்கும் போதல்லாம் அவள் மஹ்ஜபீன் தான் எனத் தெரியாமல் அவளை தப்புத் தப்பாக எண்ணியதை நினைத்து வெட்கித்து தலையை கவிழப் போட்டான். சுமார் மூன்று நான்கு வருடங்களாக அவனது நாடி நாளங்களில் எல்லாம் உருத் தெரியாமல் ஊடுருவி வாழ்ந்து கொண்டிருந்த மஹ்ஜபினின் முகத்தை கண்டு விட்டான் கஷ்வின்.... யுகம் யுகமாய் தவமிருந்த முனிவனுக்கு கிடைத்த வரம் போல இன்றேனும் மஹ்ஜபினைக் கண்டு விட்ட ஜென்மானந்தம் அவனுக்குள் சொல்லி மகிழ வார்த்தைகளே இன்றி அவளுடைய உள்ளமெங்கும் பட்டாம்பூச்சிகள் சிறகடித்தன..