புதிதாக மணமான இளந்தம்பதிகள். இல்லறப் பூங்காவில் துள்ளியோடும் புள்ளிமான்கள். எந்தெந்த வழியில் இன்பம் கிடைக்கின்றதோ அதை அனுபவிக்கத் துடித்துக் கொண்டிருக்கும் இளஞ்சிட்டுகள்.

அன்றையதினம் அவர்கள் பெயருக்கு அஞ்சலொன்று வருகிறது. அதை ஆவலுடன் பிரித்துப் பார்க்கிறார்கள்.

உள்ளே… பிரபலமானவர்கள் நடித்துத் திரையிடப்பட்டிருக்கும் சினிமாவின் இரவு காட்சிக்கு ரிசர்வ் செய்யப்பட்ட முதல் வகுப்பு டிக்கெட் இரண்டு அவர்களைப் பார்த்துச் சிரித்தது. இருவரும் மகிழ்ச்சியில் திளைத்தார்கள். அனுப்பியவர் யார் என்றும் தெரியவில்லை. அனுப்பியவர் யாராக இருந்தாலும் வாழ்க என்று சொல்லிவிட்டு இரவு காட்சிக்குக் கிளம்புகிறார்கள்.

சிறப்பாய்க் காட்சி முடிந்ததும் வீடு திரும்பும் அவர்களுக்குள் கடுமையான போட்டி. டிக்கெட் அனுப்பி வைத்தது யாராக இருக்கும்?

அவன், தன்னோடு படித்த சக மாணவர்களின் பெயரை வரிசையாகக் கூறுகிறான். அவளும் தன்னை நேசித்தத் தோழியரின் பெயர்களை நினைவுக்குக் கொண்டு வருகிறாள். எனினும் சந்தேகம் தீர்ந்த பாடில்லை!

வீடு வந்து விட்டார்கள். அவசரக் அவசரமாக வீட்டுச் சாவியைப் பேண்ட் பாக்கெட்டிலிருந்து எடுத்து வாயிற் கதவைத் திறக்க முற்படுகிறான். கதவில் கை வைக்கும் முன்பே கதவு திறந்து கொள்கிறது. பதறிப் போய் ஸ்விட்சைப் போடுகிறார்கள். அலமாரியெல்லாம் திறந்தபடிக் கிடக்கிறது.

மேசையின் மேல் ஒரு துண்டுக் கடிதம்!

அதில்,

” டிக்கெட் அனுப்பி வைத்தது யாரென்று இப்போது புரிகிறதா..?”

Related Posts

தொடர் கதை

மஹ்ஜபின் – 3

தொடர் – 03

அவர் வேலை தேடி சவூதி அரேபியா வுக்குச் செல்ல தயாராகிக் கொண்டிருந்த காலம் அது.

கனவுச் சிறைக்குள் சுதந்திரக் கைதி யாய் சிறகடித்த அவளின் தாய்க்கு வெளி நாட்டு வாழ்க்கையில் இஷ்டம் இல்லை.

 » Read more about: மஹ்ஜபின் – 3  »

தொடர் கதை

மஹ்ஜபின் – 2

தொடர் – 02

எப்படியாவது தனது மனதில் உள்ள மூன்றாண்டுக் கால காதலை மஹ்ஜபினிடம் சொல்லி விட வேண்டும் என்ற முடிவுடன் அன்றொரு நாள் அவளைச் சந்தித்து தனது காதலையும் நேசத்தையும் காத்திருப்பையும் சொல்லி முடித்தான் கஷ்வின்.

 » Read more about: மஹ்ஜபின் – 2  »

தொடர் கதை

மஹ்ஜபின் – 1

மஹ்ஜபின் என அறிந்து கொண்ட நாட்களில்  இருந்து கஷ்வின் அவளை தன் இதயவரையில் மாளிகை கட்டி குடியமர்த்தி இருந்தான். மறு புறமாக ரீஸாவை பார்க்கும் போதல்லாம் அவள் மஹ்ஜபீன் தான் எனத் தெரியாமல் அவளை தப்புத் தப்பாக எண்ணியதை நினைத்து வெட்கித்து தலையை கவிழப் போட்டான். சுமார் மூன்று நான்கு வருடங்களாக அவனது நாடி நாளங்களில் எல்லாம் உருத் தெரியாமல் ஊடுருவி வாழ்ந்து கொண்டிருந்த மஹ்ஜபினின் முகத்தை கண்டு விட்டான் கஷ்வின்.... யுகம் யுகமாய் தவமிருந்த முனிவனுக்கு கிடைத்த வரம் போல இன்றேனும் மஹ்ஜபினைக் கண்டு விட்ட ஜென்மானந்தம் அவனுக்குள் சொல்லி மகிழ வார்த்தைகளே இன்றி அவளுடைய உள்ளமெங்கும் பட்டாம்பூச்சிகள் சிறகடித்தன..