பக்திப்பாடல்

மருதாம்புலத்தரசி

பல்லவி

இன்ப வடிவாகி இசையில் நிறைவாகி
மெய்யின் பொருளாகினாய்..அம்மா…!

கன்னித் தமிழாகி காக்கும் கருமாரி
சக்தி வடிவாகினாய்..அம்மா… !

மண்ணின் மகமாயி மதுரை மீனாட்சி மடியில் எனைத் தாங்குவாய்..அம்மா… !

கண்ணின் மணியாகி கருணை உருவாகி..
கேட்கும் வரமாகுவாய்..அம்மா….!

… மருதாம்புலத்து அரசி..
வலிமை கொடுக்கும் தேவி நீயே….
மனதால் நினைத்து உருக…
அருளைத் தருவாய் தேவி தாயே…

(இன்ப வடிவாகி…)

சரணங்கள்

இலுப்பைமரம் அமர்ந்தவளே..
இயன்ற தெல்லாம் அருள்பவளே..!

கருப்பையின் குறைகளைந்து..
கதிசேர வைப்பவளே..!

வரும்பகையை துரத்திநின்று..
வாழ்க்கையினைத் தருபவளே..!

அருள் வேண்டி வருவோர்க்கு..
அருமருந்தாய் ஆனவளே…!

… மருதாம்புலத்து அரசி..
வலிமை கொடுக்கும் தேவி நீயே….
மனதால் நினைத்து உருக…
அருளைத் தருவாய் தேவி தாயே…

(இன்ப வடிவாகி….)

பொலிகையூரின் பேரெழிலே..
புலரும் பொழுதின் வானழகே..!

கலியுகத்தின் நாயகியே..
காத்திடுவாய் அருள்நிதியே ..!

நலிந்திடும் உந்தன் அடியவர்க்கு..
நலன்களை நீ வழங்கு..!

பொலிந்திடும் செல்வமெல்லாம்…
புகழுடன் நீ வழங்கு..!

… மருதாம்புலத்து அரசி..
வலிமை கொடுக்கும் தேவி நீயே….
மனதால் நினைத்து உருக…
அருளைத் தருவாய் தேவி தாயே…

(இன்ப வடிவாகி…)

கும்பிடுவோர் குரல்கேட்டு..
குறை களைய வாருமம்மா..

வேப்பிலையின் வாசத்திலே..
வெருண்டோடும் வினைகளம்மா..

தீப்பொறியின் வடிவினிலே..
தீவினைகள் தீரு மம்மா..!

காப்பெடுத்து நோன்பிருந்தோம்..
காளி தேவி பாரும்மா..!

… மருதாம்புலத்து அரசி..
வலிமை கொடுக்கும் தேவி நீயே….
மனதால் நினைத்து உருக…
அருளைத் தருவாய் தேவி தாயே…

(இன்ப வடிவாகி…)

பாடல் வரிகள் : பொலிகையூர்க் கோகிலா.
பாடியவர் : என். ரகுநாதன்
இசை : இசைப்பிரியன்

Related Posts

நேர்காணல்

மலையகத்தின் பெண் ஆளுமை அஸ்மா டீன்

இலங்கை திருநாட்டில் எழில் கொஞ்சும் மலையகத்தில் கம்பளையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அஸ்மா டீன் ஒரு சிறந்த எழுத்தாளர் ஆவார். கலைக்குடும்பத்தின் வாசனையில் பூத்த இவர் இலங்கையின் முதல் தினசரியான “தினதபால்” ஆசிரியர் காலஞ்சென்ற மீரா மொஹியிந்தீன் அவர்களின் பேத்தியாவார்.

 » Read more about: மலையகத்தின் பெண் ஆளுமை அஸ்மா டீன்  »

நேர்காணல்

இலக்கிய வித்தகர் மஷூறா சுஹூறுத்தீன்

சம்மாந்துறையைப் பிறப்பிடமாகவும் தற்போது மருதமுனையை வசிப்பிடமாகவும் கொண்டவர் சித்தி மஷூறா சுஹூறுத்தீன். 1979 ல் மஷூறா ஏ மஜீத் என்ற பெயரில் வானொலியில் எழுதவாரம்பித்து இலங்கையின் தேசிய பத்திரிகைகள் அனைத்திலும் மற்றும் சஞ்சிகைகளிலும் எழுதியவர்.

 » Read more about: இலக்கிய வித்தகர் மஷூறா சுஹூறுத்தீன்  »

நேர்காணல்

வெண்பா வித்தகம்(ர்) கோவை லிங்கா

கோவை லிங்கா என்கிற சொக்கலிங்கம் ஐயா….

இன்று முகநூலில் எத்தனையோ மரபுப் பாவலர்கள் உலவி வந்தாலும்  பாவகைகளின் துல்லியங்களும் இலக்கணங்களும் நன்கு அறிந்து. யாப்பில் ஆழமான தேர்ச்சி பெற்றவர் கோவை லிங்கா ஆவார்.

 » Read more about: வெண்பா வித்தகம்(ர்) கோவை லிங்கா  »