பக்திப்பாடல்

பல்லவி

இன்ப வடிவாகி இசையில் நிறைவாகி
மெய்யின் பொருளாகினாய்..அம்மா…!

கன்னித் தமிழாகி காக்கும் கருமாரி
சக்தி வடிவாகினாய்..அம்மா… !

மண்ணின் மகமாயி மதுரை மீனாட்சி மடியில் எனைத் தாங்குவாய்..அம்மா… !

கண்ணின் மணியாகி கருணை உருவாகி..
கேட்கும் வரமாகுவாய்..அம்மா….!

… மருதாம்புலத்து அரசி..
வலிமை கொடுக்கும் தேவி நீயே….
மனதால் நினைத்து உருக…
அருளைத் தருவாய் தேவி தாயே…

(இன்ப வடிவாகி…)

சரணங்கள்

இலுப்பைமரம் அமர்ந்தவளே..
இயன்ற தெல்லாம் அருள்பவளே..!

கருப்பையின் குறைகளைந்து..
கதிசேர வைப்பவளே..!

வரும்பகையை துரத்திநின்று..
வாழ்க்கையினைத் தருபவளே..!

அருள் வேண்டி வருவோர்க்கு..
அருமருந்தாய் ஆனவளே…!

… மருதாம்புலத்து அரசி..
வலிமை கொடுக்கும் தேவி நீயே….
மனதால் நினைத்து உருக…
அருளைத் தருவாய் தேவி தாயே…

(இன்ப வடிவாகி….)

பொலிகையூரின் பேரெழிலே..
புலரும் பொழுதின் வானழகே..!

கலியுகத்தின் நாயகியே..
காத்திடுவாய் அருள்நிதியே ..!

நலிந்திடும் உந்தன் அடியவர்க்கு..
நலன்களை நீ வழங்கு..!

பொலிந்திடும் செல்வமெல்லாம்…
புகழுடன் நீ வழங்கு..!

… மருதாம்புலத்து அரசி..
வலிமை கொடுக்கும் தேவி நீயே….
மனதால் நினைத்து உருக…
அருளைத் தருவாய் தேவி தாயே…

(இன்ப வடிவாகி…)

கும்பிடுவோர் குரல்கேட்டு..
குறை களைய வாருமம்மா..

வேப்பிலையின் வாசத்திலே..
வெருண்டோடும் வினைகளம்மா..

தீப்பொறியின் வடிவினிலே..
தீவினைகள் தீரு மம்மா..!

காப்பெடுத்து நோன்பிருந்தோம்..
காளி தேவி பாரும்மா..!

… மருதாம்புலத்து அரசி..
வலிமை கொடுக்கும் தேவி நீயே….
மனதால் நினைத்து உருக…
அருளைத் தருவாய் தேவி தாயே…

(இன்ப வடிவாகி…)

பாடல் வரிகள் : பொலிகையூர்க் கோகிலா.
பாடியவர் : என். ரகுநாதன்
இசை : இசைப்பிரியன்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

Related Posts

நேர்காணல்

உலகின் சரிபாதி பெண்

வணக்கம் தங்களைப் பற்றித் சுருக்கமாகக்கூற முடியுமா?

ஆம் நான் அ.ல.முகைமினா. எழுத்தாளர், ஆசிரியர், கவிஞர் சமாதான நீதவான் மற்றும் அரசியல் வாதியாக சமூகத்துக்காக சமூக செயற்பாட்டாளராக, ஊடக வியலாளராக என்னை அர்ப்பணம் செய்து வருகிறேன்.

 » Read more about: உலகின் சரிபாதி பெண்  »

நேர்காணல்

நக்கீரர் வழியில் பட்டுக்கோட்டை அ.த.பன்னீர்செல்வம்

பட்டுக்கோட்டை நகரில் புகழ் பூத்த தமிழ்க்குடும்பம் மீ. தங்கவேலனார் அவர்கள் குடும்பம் அந்தக் குடும்பத்தில் மூத்த தலைமகன் திரு அ.த. பன்னீர்செல்வம் அவர்கள் பட்டுக்கோட்டை நகரில் நக்கீரர் என்று பெயர் பெற்றவர் ஆய்வுச் சுடர் என்ற  பெருமைக்குரியவர்..

 » Read more about: நக்கீரர் வழியில் பட்டுக்கோட்டை அ.த.பன்னீர்செல்வம்  »

நேர்காணல்

இலக்கிய வித்தகர் மஷூறா சுஹூறுத்தீன்

சம்மாந்துறையைப் பிறப்பிடமாகவும் தற்போது மருதமுனையை வசிப்பிடமாகவும் கொண்டவர் சித்தி மஷூறா சுஹூறுத்தீன். 1979 ல் மஷூறா ஏ மஜீத் என்ற பெயரில் வானொலியில் எழுதவாரம்பித்து இலங்கையின் தேசிய பத்திரிகைகள் அனைத்திலும் மற்றும் சஞ்சிகைகளிலும் எழுதியவர்.

 » Read more about: இலக்கிய வித்தகர் மஷூறா சுஹூறுத்தீன்  »