பக்திப்பாடல்

மருதாம்புலத்தரசி

பல்லவி

இன்ப வடிவாகி இசையில் நிறைவாகி
மெய்யின் பொருளாகினாய்..அம்மா…!

கன்னித் தமிழாகி காக்கும் கருமாரி
சக்தி வடிவாகினாய்..அம்மா… !

மண்ணின் மகமாயி மதுரை மீனாட்சி மடியில் எனைத் தாங்குவாய்..அம்மா… !

கண்ணின் மணியாகி கருணை உருவாகி..
கேட்கும் வரமாகுவாய்..அம்மா….!

… மருதாம்புலத்து அரசி..
வலிமை கொடுக்கும் தேவி நீயே….
மனதால் நினைத்து உருக…
அருளைத் தருவாய் தேவி தாயே…

(இன்ப வடிவாகி…)

சரணங்கள்

இலுப்பைமரம் அமர்ந்தவளே..
இயன்ற தெல்லாம் அருள்பவளே..!

கருப்பையின் குறைகளைந்து..
கதிசேர வைப்பவளே..!

வரும்பகையை துரத்திநின்று..
வாழ்க்கையினைத் தருபவளே..!

அருள் வேண்டி வருவோர்க்கு..
அருமருந்தாய் ஆனவளே…!

… மருதாம்புலத்து அரசி..
வலிமை கொடுக்கும் தேவி நீயே….
மனதால் நினைத்து உருக…
அருளைத் தருவாய் தேவி தாயே…

(இன்ப வடிவாகி….)

பொலிகையூரின் பேரெழிலே..
புலரும் பொழுதின் வானழகே..!

கலியுகத்தின் நாயகியே..
காத்திடுவாய் அருள்நிதியே ..!

நலிந்திடும் உந்தன் அடியவர்க்கு..
நலன்களை நீ வழங்கு..!

பொலிந்திடும் செல்வமெல்லாம்…
புகழுடன் நீ வழங்கு..!

… மருதாம்புலத்து அரசி..
வலிமை கொடுக்கும் தேவி நீயே….
மனதால் நினைத்து உருக…
அருளைத் தருவாய் தேவி தாயே…

(இன்ப வடிவாகி…)

கும்பிடுவோர் குரல்கேட்டு..
குறை களைய வாருமம்மா..

வேப்பிலையின் வாசத்திலே..
வெருண்டோடும் வினைகளம்மா..

தீப்பொறியின் வடிவினிலே..
தீவினைகள் தீரு மம்மா..!

காப்பெடுத்து நோன்பிருந்தோம்..
காளி தேவி பாரும்மா..!

… மருதாம்புலத்து அரசி..
வலிமை கொடுக்கும் தேவி நீயே….
மனதால் நினைத்து உருக…
அருளைத் தருவாய் தேவி தாயே…

(இன்ப வடிவாகி…)

பாடல் வரிகள் : பொலிகையூர்க் கோகிலா.
பாடியவர் : என். ரகுநாதன்
இசை : இசைப்பிரியன்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மின்னிதழ்

தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா

மின்னிதழ் / நேர்காணல்  தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா

தமிழ்நெஞ்சம் சஞ்சிகைக்கான நேர்காணலில் எம்மோடு இணைந்திருப்பவர் ஓர் எழுத்தாளர், நூல் விமர்சகர், பாடலாசிரியர், இலக்கியச் செயற்பாட்டாளர், சமூக ஆர்வலர் எனப் பல துறைகளில் மிளிரும்,

 » Read more about: தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா  »

மின்னிதழ்

பன்முகக் கலைஞராக ஒரு பாவலர் மணி

மின்னிதழ் / நேர்காணல் முனைவர். சி.அ.வ.இளஞ்செழியன்

ஒருவர் ஒரு திறமையில் சிறந்து விளங்குவதே அரிது. பல திறமைகளில் சிறந்து விளங்குவது அரிதிலும் அரிது. ஒருவர் ஓவியம் வரைகிறார். சிற்பக்கலையில் திறன் பெற்றுள்ளார்.

 » Read more about: பன்முகக் கலைஞராக ஒரு பாவலர் மணி  »

நேர்காணல்

தமிழ்த்தொண்டாற்றும் மருத்துவச் செம்மல்

பொறியியலில் சேர்ந்த முதல்மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மருத்துவப்படிப்பு பயில இடம்கிடைத்தவுடன் அதனைக் கைவிட்டுவிட்டு மருத்துவப் படிப்பைக் கற்று சிறந்த மருத்துவர்களாக வலம் வருவதை நாம் காணலாம். அப்படிப்பட்ட மருத்துவரே இன்று நமக்கு நேர்காணல் வழங்க உள்ளார். ஆம் சென்னை பள்ளிக்கரணை காவல்நிலையத்திற்கு எதிரில் உள்ள மேடவாக்கம் கல்பனா பல் நோக்கு மருத்துவமனையின் நிறுவனர். அரசு மருத்துவக்கல்லூரிகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் . வாழ்நாள் சாதனையாளர் உட்பட பலவிருதுகளைப் பெற்றவர். தமிழ்க் கவிதைகளை சிறுவயது முதற்கொண்டு எழுதி வருபவர். முனைவர் கவிக்கோ ஜெயக்குமார் பலராமன்