பக்திப்பாடல்

மருதாம்புலத்தரசி

பல்லவி

இன்ப வடிவாகி இசையில் நிறைவாகி
மெய்யின் பொருளாகினாய்..அம்மா…!

கன்னித் தமிழாகி காக்கும் கருமாரி
சக்தி வடிவாகினாய்..அம்மா… !

மண்ணின் மகமாயி மதுரை மீனாட்சி மடியில் எனைத் தாங்குவாய்..அம்மா… !

கண்ணின் மணியாகி கருணை உருவாகி..
கேட்கும் வரமாகுவாய்..அம்மா….!

… மருதாம்புலத்து அரசி..
வலிமை கொடுக்கும் தேவி நீயே….
மனதால் நினைத்து உருக…
அருளைத் தருவாய் தேவி தாயே…

(இன்ப வடிவாகி…)

சரணங்கள்

இலுப்பைமரம் அமர்ந்தவளே..
இயன்ற தெல்லாம் அருள்பவளே..!

கருப்பையின் குறைகளைந்து..
கதிசேர வைப்பவளே..!

வரும்பகையை துரத்திநின்று..
வாழ்க்கையினைத் தருபவளே..!

அருள் வேண்டி வருவோர்க்கு..
அருமருந்தாய் ஆனவளே…!

… மருதாம்புலத்து அரசி..
வலிமை கொடுக்கும் தேவி நீயே….
மனதால் நினைத்து உருக…
அருளைத் தருவாய் தேவி தாயே…

(இன்ப வடிவாகி….)

பொலிகையூரின் பேரெழிலே..
புலரும் பொழுதின் வானழகே..!

கலியுகத்தின் நாயகியே..
காத்திடுவாய் அருள்நிதியே ..!

நலிந்திடும் உந்தன் அடியவர்க்கு..
நலன்களை நீ வழங்கு..!

பொலிந்திடும் செல்வமெல்லாம்…
புகழுடன் நீ வழங்கு..!

… மருதாம்புலத்து அரசி..
வலிமை கொடுக்கும் தேவி நீயே….
மனதால் நினைத்து உருக…
அருளைத் தருவாய் தேவி தாயே…

(இன்ப வடிவாகி…)

கும்பிடுவோர் குரல்கேட்டு..
குறை களைய வாருமம்மா..

வேப்பிலையின் வாசத்திலே..
வெருண்டோடும் வினைகளம்மா..

தீப்பொறியின் வடிவினிலே..
தீவினைகள் தீரு மம்மா..!

காப்பெடுத்து நோன்பிருந்தோம்..
காளி தேவி பாரும்மா..!

… மருதாம்புலத்து அரசி..
வலிமை கொடுக்கும் தேவி நீயே….
மனதால் நினைத்து உருக…
அருளைத் தருவாய் தேவி தாயே…

(இன்ப வடிவாகி…)

பாடல் வரிகள் : பொலிகையூர்க் கோகிலா.
பாடியவர் : என். ரகுநாதன்
இசை : இசைப்பிரியன்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

நேர்காணல்

பாவலர் கண்ணதாச முருகன்

புகழ்வரினும் இகழ்வரினும் பூதலமே எதிர்வரினும் புகலென்றும் கண்ணணுக்கே! கருவில் கலந்தாள் ககன விரிவாள் திருவாள் உயிர்ப்பாள் தெற்காள் - தருவாள் உருவால் வடிவாள் ஒலியால் இசையாள் கருத்தாழ்த் தமிழைக் களி! என, உயிராய் மூச்சாய் உணர்வாய் உலகில் மூத்த இளையாள் தமிழன்னையை வணங்கி தமிழ்நெஞ்சம் வழங்கும் இந்த நேர்காணலைத் தொடங்குகிறேன். வணக்கம் வாழும் ஔவை அன்புவல்லி அம்மா. தமிழால் மூத்த தங்களால் இந்த நேர்காணலில் இல் இளையோன் கலந்து கொண்டதில் மற்றற்ற மகிழ்ச்சி அம்மா.

நேர்காணல்

செம்மொழிக் காவலர் சௌமா இராசரத்தினம்

I மின்னிதழ் I செம்மொழிக் காவலர் சௌமா இராசரத்தினம்

இத்திங்கள் ஒரு மிகச்சிறந்த ஆளுமையாளரை நேர்காணல் செய்யவிருக்கிறோம். பள்ளிக்கூடங்களின் தாளாளர், ஒரு எழுபதாண்டு காலத் தமிழ்மன்றத்தின் தலைவர், பன்னாட்டு அரிமா சங்கத்தில்  தமிழில் நோக்கத்தை மொழிந்த அரிமா ஆளுநர்,

 » Read more about: செம்மொழிக் காவலர் சௌமா இராசரத்தினம்  »

மரபுக் கவிதை

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பே என்றும் உயர்வாகும்!
உடலை உறுதி ஆக்கிவிடும்!
தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே
தளரா உழைப்பின் பலனன்றோ!

 » Read more about: உழைப்பாளர்களை உயர்த்துவோம்  »