பக்திப்பாடல்

பல்லவி.

தாயுந்தன் வாசல்வரை வரவேண்டுமே!
தாயுந்தன் திருமுகத்தின் அருள்வேண்டுமே..!
காளிதேவி வடிவில் நின்றாய்..!
ஊழிக்காலத் துணையாய் வந்தாய்.!

(தாயுந்தான்….)

சரணம்.

அருள்மாரி வடிவாகி மருதாம் புலத்தரசி குருவாக எனையாள வரவேண்டுமே..

சிறப்பான தேரேறி சீர்பொலியும் அழகோடு
சித்திரத்தைப் போலவுன் உலாக்கோலமே ..

ஆதாரம் நீதானே அன்னையுன் சேய்நானே
உறவாகி என்றென்றும் இருபோதுமே…

பாராளும் உன்பார்வை பத்தினியின் அருள்லீலை
பாவங்கள் கரைந்தோடி விடவேண்டுமே..
எனையாளும் என் தாயே…எந்தன் ஏக்கங்கள் தீர்ப்பாயே…

(தாயுந்தன்….)

உலகெங்கும் பரந்தேகி உயர்வுக்கு வழிதேடும்…
எமையெல்லாம் நலன்காண வைப்பாயம்மா..

கருத்தோடும் பொருளோடும்
சுவையான சொல்லோடும்
விருத்தங்கள் பலபாடித் துதிப்போமம்மா..

சிறந்தோங்கும் பெருவாழ்வு பெற்றாலும்
உன்கோவில் மறக்காத
மதியென்றும் கொடுப்பாயம்மா..

மண்ணோடும் உன்னோடும்
நான் கொண்ட பற்றாலே
அன்னையுன் திருவாசல் உற்றேனம்மா..
எனையாளும் என் தாயே…
எந்தன் ஏக்கங்கள் தீர்ப்பாயே…

(தாயுந்தன்… )

பாடல் வரிகள் : பொலிகையூர்க் கோகிலா
பாடியவர் : கே. எஸ். ராஜேஸ்.
இசை : இசைப்பிரியன்
Categories: பாடல்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

ஆன்மீகம்

அருள் வாக்கியே! அப்துல்காதிரே!

அருள் வாக்கியே அப்துல் காதிரே!
திருப்புகழ் பாடிப் புகழ்சேர்த்த மெய்ஞ்ஞானியே!

வெண்பா வினால் விளக்கேற்றியே
விந்தைகள் தான்செய்த இறைநேசரே!

(அருள்)

எரியென்றே நீபாடித் திரியேற்றி னாய்
அரியணையில் அணையென்றே ஒளிபோக் கினாய்!

 » Read more about: அருள் வாக்கியே! அப்துல்காதிரே!  »

பாடல்

மருதாம்புலத்தரசி மதுர கீதம் 1

பக்திப்பாடல்

பல்லவி

இன்ப வடிவாகி இசையில் நிறைவாகி
மெய்யின் பொருளாகினாய்..அம்மா…!

கன்னித் தமிழாகி காக்கும் கருமாரி
சக்தி வடிவாகினாய்..அம்மா… !

மண்ணின் மகமாயி மதுரை மீனாட்சி மடியில் எனைத் தாங்குவாய்..அம்மா…

 » Read more about: மருதாம்புலத்தரசி மதுர கீதம் 1  »

கவிதை

சூரியத் தலைவர் சுந்தரக் கலைஞர் மறைந்திட வில்லையடி . .

மெரினா கடற்கரை மணலாய் நானும்
மாறிட வேண்டுமடி தோழி
மனதிற் கினிய அண்ணா கலைஞரை
மடியில் தாங்கிடடி.

விரிவான் கலைஞர் வெல்தோள் தன்னில்
விழுந்திடும் துண்டாவேன் தோழி
விடியல் தலைவர் மஞ்சள் துண்டென
மகிழ்ச்சிச் செண்டாவேன்.

 » Read more about: சூரியத் தலைவர் சுந்தரக் கலைஞர் மறைந்திட வில்லையடி . .  »