வா என்னை ஆரத் தழுவிக் கொள்ள..

கற்றவை ஞாபகமில்லை என்கிறாய்
பரவாயில்லை
நான் இருக்கிறேன் கண்ணே என்கிறேன்..
இவைகள் மட்டுமா
இன்னும் சொல்கிறேன் கேள்
என் அன்பு மகளே
சில பொழுது தாயாகவும்
சில பொழுது தந்தையாகவும்
சில பொழுது தோழியாகவும்
சில பொழுது தாதியாகவும்
உனக்காய் மாறுகிறேன்..