புதுக் கவிதை
என்னில் கோபுரக் கலசமாய்
உன் விழியில் விழுந்த நொடி என்னிதயத்துள் காதல் வேர்விட்டதடி உன் ஒற்றைப் பார்வையில் மனம் பித்தாகி நான் மயங்க தூக்கம் தொலைத்த கண்கள் தூர்ந்தே போனதடி நெற்றிப் புரளுமுந்தன் கற்றைக் குழலினில் தூளி கட்டியாடத் துடிக்குதெந்தன் மனது. ஏழ்பிறப்பெடுத்து உனக்காக நானும் ஏவல் செய்யவேத் தவிக்குதெந்தன் வயது. என் காதில் நீ வந்து உன் காதல் சொல்லச் சொல்ல செவிகள் ரெண்டும் பூப்பூக்கும் உயிருக்குள் ஏதோ ஒன்று தேன் வார்க்கும் Read more
